என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கச்சா எண்ணெய்"
- கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
மதுரை
தமிழக எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. தேசிய தலைவர் அஜீஸ் அப்துல் கான், மாநில தலைவர் ஆசாத், துணைத் தலைவர் அப்துல் ஹமீது மற்றும் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர் நல சட்டங்களை மாற்றி அமைத்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, ஆட்டோ ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், மத்திய அரசு நூல் விலையை குறைத்து பின்னலாடை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், சாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
தமிழக அரசு தொழிலாளர் நல வாரியத்தின் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலையை குறைக்க உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை கணினிமயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
- கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான நிபந்தனைகள் தள்ளுபடி செய்யப்படும்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை கணினிமயமாக்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தினால் 13 கோடி சிறிய மற்றும் ஏழை விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இணைய பாதுகாப்பு, தரவுகள் சேமிப்பு வசதிகளுடன் இந்த கணினிமய திட்டம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், முற்றிலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனை கட்டுப்பாடுகளை நீக்குவது என பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து உற்பத்தியாளர்களுக்கு சந்தை சுதந்திரத்தை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களில் அரசுக்கோ, அரசால் நியமிக்கப்படுவோருக்கோ, அரசு நிறுவனங்களுக்கோ கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான நிபந்தனைகள் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் கச்சா எண்ணெயை உள்நாட்டு சந்தையில் விற்க முடியும் என்றும் மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்