search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்பிளஸ்"

    • ஆன்லைன் வலைதளங்களில் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 30 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் வலைதளங்களில் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

    தற்தோதைய விலை குறைப்பு ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜிபி. மெமரி மாடல் மற்றும் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் என இரண்டு வேரியண்ட்களுக்கும் பொருந்தும். முன்னதாக ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

     


    ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் 16 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியண்ட்களின் விலையும் ரூ. 4 ஆயிரம் குறைந்துள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 3 மாடலில் 6.74 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், மாலி G57 10-கோர் GPU, 50MP OIS பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 13.1, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத், யு.எஸ்.பி. டைப் சி போன்ற வசதிகள் உள்ளன.

    • ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன்.
    • ஒன்பிளஸ் 12R இரண்டு நிறங்களில் கிடைக்கும்.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒருவழியாக தனது ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் 12R மாடல் அந்நிறுவனம் ஜனவரி 4-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யவிருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் ஐயன் கிரே மற்றும் கூல் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இடதுபுறத்தில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்படுகிறது.

     


    சீனாவை தொடர்ந்து ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் இந்தியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக R பிராண்டிங் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் சேன்ட் கோல்டு நிறத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 8 ஜி.பி. / 16 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் 12R ல்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 14 கொண்டிருக்கலாம். இத்துடன் 6.78 இன்ச் OLED பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    • ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாதம் ஒன்பிளஸ் தனது பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்கள் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் ஜனவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யும் என்று அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் இரு ஸ்மார்ட்போன்களின் வெளியீடு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.

     


    முதல் முறையாக R-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவை தொடர்ந்து சீனாவிலும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் ஆடியோ சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள்.
    • ஒன் கார்டு பயனர்கள் கூடுதல் பலன்களை பெறலாம்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனினை இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது இந்திய பயனர்களுக்காக சிறப்பு கம்யூனிட்டி சேல் அறிவித்து இருக்கிறது.

    இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் 10 ப்ரோ, ஒன்பிளஸ் ஆடியோ சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒன்பிளஸ் வலைதளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு கம்யுனிட்டி சேல், டிசம்பர் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஒன் கார்டு பயனர்கள் கூடுதல் பலன்களை பெற முடியும்.


     

    சலுகை விவரங்கள்:

    ஒன்பிளஸ் பேட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 35 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு அல்லது ஒன் கார்டு பயனர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த மாடலின் விலை ரூ. 30 ஆயிரத்து 499 என மாறிவிடும்.

    ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடலுக்கும் குறிப்பிடத்தக்க சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனுடன் ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு மற்றும் ஒன் கார்டு பயனர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ. 66 ஆயிரத்து 999 விலை கொண்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ தற்போது ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு அல்லது ஒன் கார்டு பயனர்கள் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலை ரூ. 3 ஆயிரம் குறைந்த விலையில் வாங்கிட முடியும். அதன்படி இந்த இயர்பட்ஸ் ரூ. 8 ஆயிரத்து 999-க்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 சீரிஸ் மற்றும் புல்லட் வயர்லெஸ் சீரிஸ் மாடல்களுக்கும் இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 2 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 1,499 என மாறி இருக்கிறது.

    • ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என தகவல்.
    • ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது 10-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் இதே நாளில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 12 தவிர ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12R என்ற பெயரில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம். ஒன்பிளஸ் நிறுவனத்தை பீட் லௌ மற்றும் கார்ல் பெய் இணைந்து டிசம்பர் 16, 2013-ம் ஆண்டு துவங்கினர். கடந்த ஆண்டுகளில் ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்து, சந்தையில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.

    அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் பத்து ஆண்டுகளை கொண்டாட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் தனது வெய்போ அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. அதன்படி கொண்டாட்ட நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

    ஒன்பிளஸ் 12 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12 மாடலில் 6.82 இன்ச் LTPO AMOLED பேனல், 2K ப்ரோ எக்ஸ்.டி.ஆர். ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ GPU வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு சென்சார், 64MP 3x டெலிஃபோட்டோ ஜூம், OIS வழங்கப்படும் என்று தெரிகிறது. 

    • ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 6.3 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 7.82 இன்ச் மடிக்கக்கூடிய 2K OLED ஸ்கிரீன், 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.3 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் கோபால்ட் மோலிடெனம் அலாய் மற்றும் டைட்டானியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஹின்ஜ் சிர்கோனியம் சார்ந்த அமார்ஃபியஸ் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

     

    ஒன்பிளஸ் ஓபன் அம்சங்கள்:

    7.82 இன்ச் 2440x2268 பிக்சல் 2K AMOLED டிஸ்ப்ளே

    6.31 இன்ச் 2484x1116 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    16 ஜி.பி. LPDDR5X ரேம், 512 ஜி.பி. UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13.2

    டூயல் சிம் ஸ்லாட்

    48MP பிரைமரி கேமரா, OIS

    48MP அல்ட்ரா வைடு கேமரா

    64MP டெலிஃபோட்டோ கேமரா

    32MP கவர் ஸ்கிரீன் கேமரா

    20MP செல்ஃபி கேமரா

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.3

    4085 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
    • இதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓபன் எனும் பெயரில் நாளை (அக்டோபர் 19) நடைபெற இருக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் அம்சங்கள் கிட்டத்தட்ட ஒப்போ ஃபைண்ட் N3 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனும் அக்டோபர் 19-ம் தேதியே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த மடிக்கக்கூடிய சாதனத்தின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை டிப்ஸ்டர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என்றும் இது எமரால்டு டஸ்க் என்று அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இதன் முன்புறத்தில் 32MP மற்றும் 20MP செல்ஃபி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 13.1 வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஓபன் மாடல் 4805 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடல் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை 1699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 405 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
    • ஓபன் என்ற வார்த்தை புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பை உணர்த்துகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 19-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அறிமுக நிகழ்வு மும்பையில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் பெயரில் ஓபன் என்ற வார்த்தை புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பை உணர்த்துவதோடு, ஒன்பிளஸ் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் கொண்டிருக்கும் விருப்பத்தை குறிக்கும் வகையில் அமைந்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     

    இதற்காக ஒன்பிளஸ் சூட்டி இருக்கும், "Open for Everything" என்ற வாக்கியத்தின் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய சாத்தியக்கூறுகள் அனைத்தையும் முயற்சிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 31 பாகங்கள் குறைவாக இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கும் என்றும் இது ஒப்போ ஃபைண்ட் N2 மாடலை விட 37 சதவீம் சிறியதாக இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். மேலும் ஒப்போ ஃபைண்ட் N3 மற்றும் ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது.
    • ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகி இருக்கின்றன.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் CAD ரெண்டர்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த மாதமே அறிமுகமாகும் என்று கூறப்படும் நிலையில், ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பிரஸ் ரெண்டர்கள் வெளியாகி உள்ளன.

    ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 31 பாகங்கள் குறைவாக இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கும் என்றும் இது ஒப்போ ஃபைண்ட் N2 மாடலை விட 37 சதவீம் சிறியதாக இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனரும் ஏற்கனவே தெரிவித்து விட்டார். மேலும் ஒப்போ ஃபைண்ட் N3 மற்றும் ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

     

    இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடல் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை 1699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 405 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    Photo Courtesy: winfuture

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஒன்பிளஸ் டேப்லெட் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் கோ விலை பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் பேட் கோ வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், தற்போது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    புதிய டேப்லெட் பற்றி அந்நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டேப்லெட்-இன் படமும் "What's work without a little play" மற்றும் "Take a Guess" என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளியீட்டை உணர்த்துவதாகவே தெரிகிறது. வரும் நாட்களில் இந்த சாதனம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    டிப்ஸ்டரான இஷான் அகர்வால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையின் பட்ஜெட் ரக டேப்லெட் மாடல்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாகவும், இந்த பிரிவில் முதல் டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய டேப்லெட் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேட் கோ மாடலை இந்தியா உள்பட சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த மாடல் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைக்கு இந்த மாடல்களின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.
    • ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இடம்பெற்று உள்ளது.

    அதன்படி புதிய ஒன்பிளஸ் டேப்லெட் OPD2304 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் ஒன்பிளஸ் ஃபோரமிலும் இடம்பெற்று, பிறகு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவைதவிர இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டான்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.) தளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இவை இந்த டேப்லெட் நிச்சயம் வெளியிடப்படும் என்பதை உணர்த்துகிறது.

     

    இத்துடன் புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OP2304 மற்றும் OP2305 என இரண்டு மாடல் நம்பர்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த டேப்லெட் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவை வை-ஃபை மற்றும் செல்லுலார் வேரியண்ட்களை குறிக்கலாம்.

    பி.ஐ.எஸ். தளத்தில் இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த சாதனம் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இத்துடன் 11.61 இன்ச் IPS LCD ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. UFS 3.1 மெமரி, 9510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 13.1 வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • புதிய ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
    • ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வைத்திருப்போர் இதில் பயன்பெற முடியும்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்கள் தொர்ச்சியாக தெரிவித்துவந்த "கிரீன் லைன்" (Green Line) பிரச்சினைக்கு பதில் அளித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட இந்திய பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் பயனர்களுக்கு வாழ்நாள் முழுக்க ஸ்கிரீன் வாரண்டி வழங்கப்படுகிறது.

    பல்வேறு ஒன்பிளஸ் பயனர்கள் AMOLED பேனல் கொண்ட தங்களது பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் "கிரீன் லைன்" பிரச்சினை இருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர். அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதே பிரச்சினை பல்வேறு சாதனங்களில் ஏற்பட்டு இருப்பதை அடுத்து, ஒன்பிளஸ் நிறுவனம் இதனை சரிசெய்வதற்காக வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டியை வழங்குகிறது.

     

    ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8T, ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9R ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், அவற்றில் "கிரீன் லைன்" ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்தற்கான கட்டணம் வாரண்டியில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும்.

    வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்பிளஸ் எக்ஸ்-க்ளூசிவ் சர்வீஸ் சென்டர்களில் ஒட்டப்பட்டு இருக்கும் நோட்டீஸ்களில், "கிரீன் லைன்" பிரச்சினை கொண்ட பயனர்கள் தங்களது சாதனத்திற்கு அப்கிரேடு முறையில் தள்ளுபடி பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் பாதிக்கப்பட்ட சாதனங்களை கொடுத்து புதிய ஒன்பிளஸ் மாடல்களை வாங்கிக் கொள்ள முடியும்.

    இதற்கு பயனர்கள் சாதனத்தை ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் வாங்க வேண்டும். இந்த அறிவிப்பின் படி ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் வாங்கும் போது, ரூ. 4 ஆயிரத்து 500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    Photo Coutersy: OnePlus Community

    ×