search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்களுக்கு"

    • ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த 18-ம் தேதி சேலம் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
    • அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேசன் அரிசி 40 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த 18-ம் தேதி சேலம் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேசன் அரிசி 40 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர். இதனிடையே ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆத்தூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் 30 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • முகாமிற்கு கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • இதில் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் 220-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சரகத்திற்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ரேசன் கடை பணியாளர்களுக்கு, ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை, சீமா தொண்டு நிறுவனம், பிவெல் மருத்துவமனை, ஈரோடு கேன்சர் சென்டர் மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இம்முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் 220-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் துணைப்பதிவாளர் பணி ஓய்வு ஸ்ரீதர், சீமா தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் எஸ்.புஷ்பநாதன், பிவெல் மருத்துவமனை டாக்டர்.மெய்.எஸ்.அப்பாச்சி கேர் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பாக்கியராஜ், வாசன் கண் மருத்துவமனை டாக்டர்.எம்.ராம்குமார், ஈரோடு கேன்சர் சென்டர், டாக்டர்.மீனா ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள், கோபிசெட்டிபாளையம் வட்டார சங்கச் செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×