search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடையில் பணிபுரியும் 30 ஊழியர்களுக்கு அபராதம்
    X

    ரேசன் கடையில் பணிபுரியும் 30 ஊழியர்களுக்கு அபராதம்

    • ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த 18-ம் தேதி சேலம் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
    • அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேசன் அரிசி 40 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த 18-ம் தேதி சேலம் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேசன் அரிசி 40 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர். இதனிடையே ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆத்தூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் 30 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×