என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "co-operative workers"
- புதுவை கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கு கூடத்தில் ஒரு நாள் பிரம்மகுமாரிகள் ராஜயோக தினயான நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.
- பேராசிரியர் ரங்கநாதன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
புதுச்சேரி:
புதுவை கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கு கூடத்தில் ஒரு நாள் பிரம்மகுமாரிகள் ராஜயோக தினயான நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது. பேராசிரியர் ரங்கநாதன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தியான நிறுவனம் கவிதா பயிற்சி அளித்தார்.
இதில் மனதை எப்படி, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது, ஆரோக்கியான வாழ்வுக்கான வழிகள், நேர்மறையான சிந்தனை, தனிமனிதமேம்பாடு, சமுதாயமேம்பாட, கோபத்தை கட்டுப்படுத்துதல், மனதின் ஆற்றலை பெருக்குதல் உட்பட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் நகை மதிப்பீட்டாளர்கள் 40 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை தியான நிறுவன வெங்கடேசன் ஒருங்கிணைத்தார். விழா ஏற்பாடுகளை ஊழியர்கள் செய்திருந்தனர்.
- முகாமிற்கு கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
- இதில் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் 220-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் சரகத்திற்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ரேசன் கடை பணியாளர்களுக்கு, ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை, சீமா தொண்டு நிறுவனம், பிவெல் மருத்துவமனை, ஈரோடு கேன்சர் சென்டர் மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் 220-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் துணைப்பதிவாளர் பணி ஓய்வு ஸ்ரீதர், சீமா தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் எஸ்.புஷ்பநாதன், பிவெல் மருத்துவமனை டாக்டர்.மெய்.எஸ்.அப்பாச்சி கேர் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பாக்கியராஜ், வாசன் கண் மருத்துவமனை டாக்டர்.எம்.ராம்குமார், ஈரோடு கேன்சர் சென்டர், டாக்டர்.மீனா ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள், கோபிசெட்டிபாளையம் வட்டார சங்கச் செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்