search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக உணவு தினம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2023 வருடத்திற்கான தீம், "நீரே உயிர்; நீரே உணவு." என்பதாகும்
    • அதீத உணவால் உடலாரோக்கிய குறைபாடுகளுடன் சிலர் இருக்கிறார்கள்

    ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு (Food And Agricultural Organization) தொடங்கபட்ட அக்டோபர் 16, ஒவ்வொரு வருடமும் "உலக உணவு தினம்" (World Food Day) என இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

    உலக மக்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைப்பதில் உள்ள தடைகளை கண்டறிந்து, அவற்றை நீக்குவதற்கான சரியான வழிமுறைகளை கடைபிடிக்க உலக நாடுகளை வலியுறுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நிலையான விவசாயம், உணவு வீணடித்தல் தடுப்பு, சத்தான உணவு கிடைக்க செய்தல், மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை இந்த வழிமுறைகளின் முக்கிய அம்சங்கள்.

    1981லிருந்து உலக உணவு தின கொண்டாட்டத்தில், ஒவ்வொரு வருடமும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு "தீம்" வடிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    2023 வருடத்திற்கான தீம், "நீரே உயிர்; நீரே உணவு. எவரும் விடுபட கூடாது" என்பதாகும்.

    பசியால் தவிப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்றும், காச நோய், மலேரியா மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களால் இறந்தவர்களை விட பசியால் உயிரிழப்பவர்களே அதிகம் என்றும் 10 பேரில் ஒருவர் எப்போதும் உணவின்றி தவிக்கிறார் என்றும் தெரிவிக்கும் புள்ளி விவரங்கள், அதே வேளையில் உலக மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் அதிக எடையுடையவர்கள் என குறிப்பிடுகிறது.

    பலர் உணவின்றி வாடும் நிலையில், ஒரு சிலர் அதீத உணவால் உடலாரோக்கிய குறைபாடுகளால் தவிப்பது ஒரு பெரும் முரண்பாடாக பார்க்கப்படுகிறது.

    வறுமை, போர், இயற்கை சீற்றம் மற்றும் இயற்கை பேரழிவு உட்பட பல காரணங்களால் உலக மக்களில் பலர் உணவின்றி தவித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதனை மாற்றும் வகையில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    உலக தமிழர்களின் பண்டைய நூலான திருக்குறள் இச்சிக்கலை தீர்க்க வழி சொல்கிறது.

    "பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

    தீப்பிணி தீண்டல் அரிது" - (திருக்குறள் 227)

    பொருள்: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை, பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுவது கிடையாது

    • ஐ.நா. உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது
    • உலகம் கண்டிராத ஒரு மனித குல பேரழிவு நடப்பதாக அந்த முகமை தெரிவித்தது

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை முற்றிலுமாக தடுத்து விட்டது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ஒரு வழித்தடம் அமைத்து தரவேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட பல மனிதாபிமான அமைப்புகள் இஸ்ரேலிடம் வைத்த கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

    வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் தொடங்க இருப்பதாகவும், அதனால் காசா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் கெடு விதித்திருந்தது. இஸ்ரேல் விதித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து வெளியேற தொடங்கி விட்டனர்.

    இதற்கிடையே, கிழக்கு ஜெருசேலம் பகுதியில் ஐ.நா. கூட்டமைப்பின் நிவாரண பணி முகமை (UN Relief And Works Agency) அமைப்பின் தலைவர் பிலிப் லசாரினி (Philippe Lazzarini) காசா பொதுமக்களின் துயரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உலகம் மனிதாபிமானத்தை இழந்து விட்டது. எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களால் எந்த மனிதாபிமான உதவிகளையும் காசா மக்களுக்கு வழங்க முடியவில்லை. காசாவின் கழுத்து நெரிக்கப்பட்டு வருகிறது. குடிநீர்தான் 'உயிர்' - ஆனால் காசாவில் குடிநீர் இல்லை; ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லை. காசாவின் 'உயிர்' பிரிந்து கொண்டிருக்கிறது. விரைவில் உணவு மற்றும் மருந்து ஆகியவையும் கிடைப்பது நின்று விடும். கடந்த 8 நாட்களாக காசாவில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; ஒரு கோதுமை தானியம் கூட இல்லை; ஒரு லிட்டர் எரிபொருள் கூட இல்லை. அங்கு இதுவரை உலகம் கண்டிராத ஒரு மனிதகுல பேரழிவு நடந்து வருகிறது. பாதுகாப்பான இடம் என அங்கு எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இன்று (அக்டோபர் 16) உலகம் முழுவதும் "உலக உணவு தினம்" கொண்டாடப்படும் வேளையில், லட்சக்கணக்கான காசா மக்களுக்கு உணவு, வசிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது கவலை தரும் நிகழ்வு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • பராம்பரிய ரகங்களில் கண்டறிந்து பயன்படுத்தி கொள்ளவும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
    • விவசாய பயனீட்டாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதிலும், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் பணிகளிலும் வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக உயர்தர உள்ளூர் ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்துவதற்கும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அந்தந்த பகுதிக்கேற்றவாறு சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில் தேவையான அடிப்படை மரபணுக்களை பராம்பரிய ரகங்களில் கண்டறிந்து பயன்படுத்தி கொள்ளவும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

    வேளாண்மை துணை இயக்குநர் சுந்தர் டேனியல் பாலஸ் வரவேற்றார். நெல்லை வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) அசோக்குமார் கருத்துக்காட்சி, விழாவின் நோக்கம் குறித்து விளக்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா தலைமை உரை ஆற்றினார், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், அம்பை நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் ஆகியோர் வாழ்த்த்தி பேசினர். விழாவில் பாரம்பரிய நெல் விதைகள், விவசாயிகளின் காய்கறிகள், கிழங்குகள், பழங்கள், இயற்கை உணவு வகைகள், தின்பண்டங்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. இதில் விவசாய பயனீட்டாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய பல்வேறு ஆலோசனைகளை வேளாண்மை துறை அதிகாரிகள் வழங்கினார்கள். விழாவில் அயன் சிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், விவசாய சங்க நிர்வாகிகள் சொரிமுத்து, வக்கீல் பாபநாசம், இயற்கை விவசாயி லட்சுமி தேவி, சுற்று வட்டார விவசாயிகள் சிவந்திபுரம் ஸ்டான்லி, பாப்பான்குளம் ஆறுமுகம், கல்லிடை சுப்பிரமணியன், ராமையா, முக்கூடல் முருகன் ஆகியோர் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அம்பை வேளாண்மை துறை உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

    ×