search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்நல பிரச்சனை"

    ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
    வீடுகளில் பெரும்பாலானவர்கள் ஊதுபத்தி பயன்படுத்துகிறார்கள். வீடு முழுவதும் நறுமணம் கமழ செய்யும் ஊதுபத்தியில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களும் கலந்திருக்கின்றன. அதிலும் ஒருசில ஊதுபத்தி வகைகளில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. அவைகளால் உடல் உறுப்புகள் கடும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.

    சீன பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும்.



    இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு நேரும். தொடர்ந்து ஊதுபத்தி உபயோகிக்கும்போது இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து வெளியாகும் புகை ரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஊதுபத்தி வாசத்தை குழந்தைகள் நுகர்வதும் ஆபத்தானது. கர்ப்பிணி பெண்கள் நுகரும்போது கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஊதுபத்தியில் இருந்து வெளியேறும் புகை குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு சரும ஒவ்வாமை பிரச்சினையும் ஏற்படும்.

    ஊதுபத்தி பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்னும் பட்சத்தில் குறைந்த நேரம் மட்டுமே உபயோகிப்பது நல்லது. நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
    முகவாதம் 80 வகையான வாத வியாதிகளுள் ஒன்றாகும். இந்த நோய் வருவதற்கான காரணத்தையும், அறிகுறியையும், செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளையும் பார்க்கலாம்.
    முகம் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். பயம், கோபம், துக்கம், மகிழ்ச்சி முதலான மனதின் உணர்வுகளை முகம் காட்டிக் கொடுக்கும். முகத்தின் அசைவுகள், உணர்வுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும், வழிநடத்தும் பொறுப்பு தலையுடையது. தலைதான், மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாகம்.
    மனிதன் மட்டுமே, முக அசைவுகளின் மூலமும், பேச்சின் மூலமும் பிறருடன் தொடர்பு கொள்ள முடியும். முக அசைவு மற்றும் பேச்சு இரண்டுமோ அல்லது இரண்டில் ஒன்று மட்டுமோ தடைப்படுவது முகவாதம் எனப்படும்.

    முகவாதம் 80 வகையான வாத வியாதிகளுள் ஒன்றாகும். வாத தோஷத்தின் இயல்புநிலை மாறி விடுவதால் வரும் இவ்வியாதியால், உடலின் இயல்பான செயல்பாடுகள் குறைந்து, ஊனம் அடைய நேரலாம். இறப்பு கூட வரலாம். உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை வேறுப்படுத்தும் 5 பொறிகளின் வேலை முடங்குகிறது. சூழலுடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

    ஐம்பொறிகளின் வெளிப்பாடுகள் நிகழ காரணமாக திகழ்வது வாதம், இவற்றின் செயல்பாடுகளில் தடை ஏற்படுவதால் வாதம் இந்திரியங்களை பழுதாக்குவதாக கூட சொல்லப்படும். இந்நோய் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய சூழலில் குளிர்ந்த காற்று, குளிர்ந்த சூழ்நிலையில் அதிகம் இருப்போருக்கு அதிகம் இந்நோய் வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த ஒழிக்க இது தகுந்த தருணம் ஆகும்.

    முகத்தின் இடது, வலது பக்கம் கோணலாகி விடுவது முகவாதம். அத்துடன் பாதிக்கப்பட்ட இடத்தில் அசைவு, உணர்ச்சி ஆகியன இயல்புநின்ற மாறிவிடும். இந்நோய், முகத்தின் ஒரு பக்கத்தோடு சேர்ந்து உடலின் பகுதிகளிலும் பாதிப்பு வரலாம். அல்லது வராமலும் இருக்கலாம். ஆயுர்வேத சிகிச்சை மூலம் நிலைப்பாடு மாறிய வாததோஷத்தை சரிப்படுத்தி குணமாக்க முடியும். தும்மலை அடக்குவதால் இந்நோய் வருகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

    மேலும் அதிகநேரம் சத்தமாக பேசுவது, கடினமான, உணவுபொருட்களை மெல்லுவது, அதிகப்படியான சிரிப்பு, தும்மல், கொட்டாவி, தலையில் அதிக சுமை சுமத்தல், தலை மற்றும் கழுத்தை, திடீரென திருப்புவது, தூங்கும் போது சரியான நிலையில் தூங்காமை, தலையணை அதிக உயரமாகவோ, குறைந்த உயரமாகவோ இருத்தல் ஆகிய காரணங்களால் கூட நேரலாம். ரத்தசோகை ஏற்படும்போது இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது. மகளிர் கருவுறும்போதும், குழந்தை பிறப்புக்குபின்னும் இந்நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள், வயதானவர்கள், உடல் மிகவும் மெலிந்து இருப்பவர்கள் ஆகியோருக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

    நோய் வருமுன் காணப்படும் அறிகுறிகள்


    * பார்வை மங்குதல்
    * தோலில் தொடு உணர்ச்சி குறைதல்
    * கழுத்தில் ஒருவித இறுக்கம்
    * தாடைகளில் இறுக்கம்
    * மயிர்க்கூச்செறிதல் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

    நோய் அறிகுறிகள்

    * முகம் சரியான கோணத்தில் இருந்து விலகி, ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளல்
    * தலை நடுக்கம்
    * பற்கள் நடுக்கம்
    * கண்களை சரியாக மூட முடியாமை.
    * மூக்கு கோணல்
    * பேசுவதில் சிரமம்
    * குரலில் கரகரப்பு
    * காது கேளாமை

    * காதில் வலி
    * வாசனையை நுகர முடியாமை
    * உணவை, மென்று விழுங்குவதில் சிரமம்
    * கழுத்து, கன்னம், பல் ஆகியவற்றில் கடும் வலி
    * மறதி, பேசும் போதும, சிரிக்கும் போது வாய் கோணல்
    * தூங்கும் போது ஒரு வித பயம் ஆகிய அறிகுறிகள் தென்படும்.  பெல்பால்சி எனப்படும் கடுமையான முகவாதம் முகத்தின நரம்புகளில் நீர் கோர்த்து, பலூன் போல் உப்புவதால் இந் நோய் ஏற்படுகிறது.

    * வழக்கமாக ஒரு பக்கம் மட்டும் வரும் இவ்வகை வாதம் சில சமயம் இரு பக்கமும் வரும்.
    * காதுக்குள், கன்னத்தில், காதுக்கு பின்புறம் சைனஸ் இடத்தில் வலி இருக்கும்.
    * திடீரென உருவாகும்-
    * முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் தசைகளில் வாதம் வரும்.
    * புருவத்தை உயர்த்த முமயாமை, இமைகள் மூடிக் கொள்ளல்.
    * கண்களை மூட முடியாமை
    * சாப்பிடும் போது புரையேறுதல்

    * கண்களை மூட முயலும் போது கண்களின் விழிக் கோளம், மேலும் கீழும் உருளும். இது பெல்ஸ் பினோமினம் எனப்படும்.
    * கண்களில் நீர் வடிந்து கொண்டே இருத்தல்.
    * காதின் நடுப்பகுதியில் ரத்த ஓட்டத்தில், பாதிப்பு ஏற்பட்டால் நாக்கில் சுவை உணர்வு குறைந்து விடும்
    * காதுகளில் இயல்பான சப்தத்துக்கு மாறாக, மிக அதிக தொனியில் இரைச்சல் கேட்கும்.
    * சில சமயம் காது கேளாமை கூட நேரும்.

    நோய் வந்திருப்பவர் பலசாலியாக இருப்பின் நோய் விரைவில் குணமாகும். நோய் வந்தவுடன் சிகிச்சை தரப்படினும், நோய் விரைவில் குணமாகும். நோயாளி பலமில்லாதவராக இருப்பினும் கண்களை மூட முடியாமல் இருந்தாலும், பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் நடுக்கம் இருந்தாலும், நோய் வந்து 3 வருடங்கள் ஆகியிருந்தாலும் வாய், கண்கள், மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தாலும் அந்த நோயாளியை குணப்படுத்துவது சிரமம்.



    சிகிச்சை முறை

    * தலைக்கு எண்ணெய் தேய்ப்பது.
    * மூக்கில், காதில் மருந்து விடுதல்.
    * பாலில் மருந்து கலந்து, அதைச் சூடுபடுத்தி, வெளிவரும் ஆவியை முகருவது.
    * ‘பத்து’ போடுவது.
    * தலைக்கு மேலே எண்ணெயை நிற்குமாறு செய்வது.
    * புகையை நுகருவது.

    * எண்ணெய் தேய்ப்பது ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
    * அத்துடன், தோஷங்களின் நிலைப்பாட்டைப் பொறுத்து நீர்கோர்த்து, உப்பியிருந்தால் ‘வாந்தி’ வருமாறு செய்வர்.
    * தாகம் மற்றும் எரியும் தன்மை இருந்தால், அட்டைப்பூச்சியை உபயோகித்து அல்லது காயப்படுத்தி, ரத்தம் வெளியேறுமாறு செய்வர்.
    * பாதைகள் அடைப்பட்டிருந்தால், முதலில் அடைப்பை நீக்க சிகிச்சை தரப்படும். பின் வாதத்தைக் குறைக்க, சிகிச்சை தரப்படும்.

    மருந்து முறை:

    * தனதநயானதி கஷாயம்.
    * மஹா ராசநாதி கஷாயம்.
    * மாஷாபலாதி கஷாயம்.
    * ராசன தச மூலாதி குவேதா கஷாயம் ஆகியவை உள்ளே சாப்பிடத் தரப்படலாம்.
    * மாஷா தைலம்.
    * மாஷாதி தைலம்.
    * மாஷா பலாதி தைலம்.

    * கார்ப்ப சயாதி தைலம்.
    * தன்வந்த்ரம் தைலம்.
    * மஹாமாஷா தைலம்.
    * ஹீரபலா தைலம்.
    ஆகியவை வெளிப்புற உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும்.

    சிறப்பு சிகிச்சைகள்:

    * ஸ்ரீரதூமம் எனப்படும் பால் கஷாயத்தின் புகையை நுகர்வது நல்ல பலனைத்தரும். முகத்தில் ‘ஸ்ரீரபலா101 தைலத்தைக் பூசிக்கொண்டு சித்தா முட்டி வேரைப் பாலில் போட்டுக் காய்ச்சி, அதிலிருந்து வரும் புகையை முகத்தில் படுமாறு அரை மணி நேரம் செய்ய வேண்டும்.

    பின், மூக்கில் 2 சொட்டு ‘ஸ்ரீரபலா101’ தைலத்தை விட வேண்டும். இருமல், தும்மல் எல்லாம் வந்து முடிந்தபின், (கழிவு வெளியேறும்) முகத்தை வெந்நீரில் கழுவலாம் அல்லது துடைத்து விடலாம். இதனை, தினம் ஒரே ஒரு முறை காலை அல்லது மாலையில் செய்ய வேண்டும், வெயில் நேரம் ஆகாது. இச்சிகிச்சை மிகுந்த பலன் தருவதாகும். * முகத்திலிருக்கும் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    உணவு முறை:

    * வாதத்தை அதிகரிக்கும் உணவுகளான கொண்டைக் கடலை, நிலக்கடலை, கிழங்கு வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
     * எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்
    * நாட்டுக் காய்கறிகளை உண்பது நல்லது.

    தவிர்க்கும் வழிகள்

    * எளிதில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது.
    * அதிக மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றைத் தவிர்ப்பது
    * பயணத்தின் போதும் பிற சமயங்களிலும் அதிக குளிர்ச்சியான காற்று முகத்தில் படாமல் பாதுகாப்பது.
    * தொடர்ந்து ஏசி அறைகளில் இருப்பதை தவிர்ப்பது.
    * வாதத்தை அதிகரிக்கும் உணவுகளை தொடர்ந்து அதிகம் உண்ணாமல் இருப்பது ஆகியன இந்நோய் வராமல் தடுப்பதற்கான சில வழிமுறைகள் ஆகும்.
    உடனிருப்போரின் பெரும் பங்கு

    இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்படும் தாழ்வுணர்ச்சி வந்துவிடும். சமூகத்திலிருந்து விலகி இருக்க நினைப்பர், தனிமை மேலும் மன உலைச்சலை அதிகப்படுத்தும். இதனை உடனிருப்போர் உணர்ந்து நோயாளிக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் தக்க முறையில் பேசி மன உலைச்சல் தவிர்க்கப்பட வேண்டும்.

    உடல் அளவில் அவர்களது பாதிப்புக்கு உதவுவதற்கு மேலே அவர்களது மன பாதிப்பு நீக்கப்பாடுபடுவது மிக முக்கிமானது. குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது, மருந்து கொடுப்பதில் நேரம் தவறாமை, உணவு கொடுப்பதில் கவனம். வெளிளே அழைத்து போவது, அதிக நேரம் அவர்களுக் காக செலவிடுவது என உடனிருப்போர் பங்கு அதிகமானது மிகவும் முக்கியமானது.

    புணர் வாழ்வு

    நோயின் பாதிப்புக்கு தகுந்தபடி குணப்படுத்தும் காலமும் வேறுபடும்.

    * பாதிப்பு குறைவாக இருந்து உடனே சிகிச்சையை மேற்கொண்டால் நோய் சரியாகலாம். இந்நோயுடன் வேறுபாதிப்புகள் இல்லாமலிருந்தாலும் விரைவில் குணமாகலாம்.

    * பாதிப்பு அதிகமாக இருந்தாலோ சிகிச்சை தொடங்க தாமதம் ஆனாலோ கூட வேறு உடல் பாதிப்புகள் இருந்தாலோ முழுதும் குணமாக காலதாமதம் ஆகும். முழுவதும் குணமாகமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.ஆகவே வந்தபின் குணமடையச் சிரமம் மேற்கொள்வதை விட வராமல் பாதுகாப்பது சிறந்தது.

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)
    அல்சைமர் நோய் என்பது மூளையின் செல்களைத்தாக்கி, நம்முடைய நினைவுகளை தொடர்ந்து அழித்து, சிந்திக்கும் திறனை முற்றிலும் பாதித்து விடுகிறது.
    இன்று (செப்டம்பர் 21-ந்தேதி) உலக அல்சைமர் தினம்.

    உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகமக்களை அதிக அளவில் கொல்லும் ஐந்து முக்கிய நோய்களில் அல்சைமரும் ஒன்று. உலகில், அல்சைமர் நோயில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்தியாவில் தான் உள்ளார்கள். அல்சைமர் நோய் என்பது மூளையின் செல்களைத்தாக்கி, நம்முடைய நினைவுகளை தொடர்ந்து அழித்து, சிந்திக்கும் திறனை முற்றிலும் பாதித்து விடுகிறது.

    இறுதியில் மிக சாதாரணமான வேலைகளை செய்யும் திறன்களைக்கூட முழுமையாக இழக்கிறோம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் குணப்படுத்த தற்போது வாய்ப்புகள் இல்லை. ஆரம்பக்கட்டத்தில் அறிந்தால், மேலும் சீர்கெடுவதை தவிர்க்க முடியும். அல்சைமர் என்பது டெம்னீஷியா என்கிற நோயின் ஒரு வகையாகும். டெம்னீஷியா என்பது மூளைக்கும் உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை துண்டித்தும், ஒருவரின் அன்றாட செயல்பாடுகளை பாதிக்கவும் செய்கிறது.

    அல்சைமர் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை அழித்து, நினைவுகள், மற்றும் மொழியாற்றலை செயலிழக்க செய்கிறது. இந்நோயினை முதன்முதலாக கண்டறிந்த மருத்துவர் அலோய்ஸ் அல்சைமர் பெயரிலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது. தன்னிடம் நோயாளியாக வந்து இறந்துப் போன பெண் ஒருவரின் மூளை திசுக்களை ஆராயும்போது அவைகள் இயல்பாக இன்றி, ஒன்றுக்கொன்று பிணைந்தும், முறுக்கிக்கொண்டும் இருந்தன.

    படலங்கள் திசுக்கள் மீது படர்ந்து இருந்தது. இதன்காரணமாக, நரம்புமண்டலத்திற்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மூளையிலிருந்து நரம்புமண்டலத்தின் வாயிலாகத்தான் உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகளுக்கும் உத்தரவுகள் செல்கின்றன. இத்துண்டிப்பின்காரணமாக உறுப்புகள் செயல்பாட்டினை இழக்கிறது. மூளையில் ஏற்பட்டிருந்த இந்நோயின் காரணமாகவே அப்பெண் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அல்சைமர் கண்டறிந்தார்.

    அல்சைமர் நோய்க்கான ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு தகவல்களை உள்வாங்குவதிலும், அதனை நினைவில் தக்கவைத்துக் கொள்வதிலும் சிரமம்உண்டாகும். இதனால், நினைவில் நிறுத்த திரும்ப திரும்பகேள்விகள் கேட்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு பொருளைஎங்கே வைத்தோம் என்றுநினைவுக்கு வராமல் தேடிக்கொண்டே இருத்தல், தினமும் சென்று வரும் இடங்களுக்கான வழிகளைக்கூட மறந்துவிடுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. மேலும், தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும்ஆற்றலும் மங்கிவிடுகிறது. இதனால், சாதாரண முடிவுகள் உதாரணமாக, சாலையை கடப்பதில் கூட தவறுகள் உண்டாகி விபத்தில் முடிகின்றன. மேலும், பேச்சு, படிப்பு, எழுதுதல் போன்றவை பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

    பெரும்பாலும் அறுபது வயதானவர்கள், அறுபது வயதினை கடந்தவர்களை இந்நோய் தாக்கினாலும், இளம் வயதினருக்கும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அல்சைமர் நோய் ஏற்படுவதற்கு வயது மூப்பு மட்டுமின்றி, முன்னோர்களிடமிருந்து மரபணுக்கள் வாயிலாக சந்ததியினருக்கு கடத்தப்படுகிறது. இவைகளைத்தவிர விபத்துகளில் தலையில் காயம் ஏற்பட்டு மூளைபாதிக்கப்பட்டால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது. இதனால்தான் மோட்டார் வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதும், காரில்பயணிப்போர் இருக்கை பட்டை அணிவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.



    அல்சைமர் நோய் வராமல் எப்படிதடுப்பது?

    தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், இதயம் சீராக இயங்கும் வகையில் உடலை பேணுதல், நீரழிவு நோயினைக்கட்டுப்பாட்டில் வைத்தல், உடல் பருமனை குறைத்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல் போன்றவைகள் உதவுகின்றன. மேலும் மிக முக்கியமாக, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருத்தல்அவசியம்.

    வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம், நமக்கு வயதாகிவிட்டது என்று, தூங்குவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற மூளைக்குவேலைத்தராத எளிமையான, செயல்களை செய்வது அல்சைமர் நோய்க்கு வழிவகுத்துவிடும். மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க புதியதிறன்களை கற்றுக்கொள்ள முயற்சிப்பது நன்று.

    உதாரணமாக, புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிர்கள், அறிவு விளையாட்டுகள், போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும். சதுரங்கம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள் நன்று. புத்தகங்கள் படிப்பது, படித்ததை மற்றவர்களிடம் பகிர்வது, எழுதுவது போன்றவைகளும் மூளைக்கு வேலைத்தரக் கூடியவைகள்.

    தன்னார்வ தொண்டராக, பொது தொண்டாற்றுவது அல்சைமர் நோய் வருவதை தடுப்பதாக கனடா நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்று சொல்கிறது. புதியவர்களை சந்திக்கும் போதும், புதிய வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் போதும் நமதுமூளையில் என்டோர்பின்ஸ் என்கிற ஹார்மோன் சுரக்கிறது, இது மூளையை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும்வைத்திருக்க உதவுகிறது.ஒரேவிதமான வேலைகளை தினம் தொடர்ந்து செய்யும் போது மூளைதானியங்கி முறைக்கு சென்றுவிடுகிறது.

    நாளடைவில், மூளைசெல்கள் இறக்கத்தொடங்குகின்றன. புதியவைகள், வித்தியாசமானவைகளை முயற்சிக்கும் போது மூளைவிழிப்புநிலையில் இயங்குகிறது. காலை எழுந்தவுடன் பல்துலக்கும்போது, வலதுகையில் குச்சியை வைத்து தேய்ப்பவராக இருந்தால் அதைமாற்றி இடது கையில்தேய்க்க முயற்சி செய்யுங்கள். பல்தேய்க்கும் போது ஏதோ எண்ண ஓட்டத்தில் இருக்கும் மூளை அன்றைக்கு விழிப்பு நிலைக்கு வந்துவிடும்.

    இந்த எளிய உதாரணம், மூளையை எப்படி தானியங்கி நிலையிலிருந்து விழிப்புநிலைக்கு கொண்டு வருவது என்பதை விளக்கும். இதுப்போன்று, கடைக்கு தினம் செல்லும் வழியில்செல்லாமல், வேறு வழிகளில் செல்லமுயற்சிக்கலாம். இது போன்ற பயிற்சிகள் மூலமாகவும், உடலினை சரியாக பேணுவதன் மூலமாகவும் மூளையை சுறுசுறுப்பாக்கி, அல்சைமர் நோய் வருவதைதடுக்கலாம்.

    கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்
    நம் உடலில் உள்ள உஷ்ணம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடும். எனவே, நம்முடைய உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
    உடல் உஷ்ணம் என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது. அதேநேரத்தில் வெப்பம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடும். எனவே, நம்முடைய உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது.

    * உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும். அப்போதே நாம் அதை கவனித்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.

    * நம்முடைய உடல் வாதம், பித்தம், கபம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் 1: ½ : ¼ (அதாவது வாதம் முழுபங்கும், பித்தம் அரைபங்கும், கபம் கால் பங்கும்) இருக்க வேண்டும். இதில் பித்தம் அதிகரிக்கும்போது உடற்சூடு பிரச்சனை வரும். இதற்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் பின்பற்றும் வாழ்வியல் முறையும் உட்கொள்ளும் உணவுகளும்தான்.



    உடற்சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

    மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடற்சூட்டை பொறுத்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், மாதவிலக்கு நாட்களின் போது பெண்களுக்கு உடல் சூடு அதிகரிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மாதவிலக்கு நாட்களின் உடற்சூடு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை உண்டுபண்ணும்.

    புளிப்பு, உப்பு, காரம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் நம்முடைய உடல் மிகுந்த உஷ்ணம் அடையும். மேலும் டீ, காஃபி, கோலா போன்ற கஃபைன் வகை பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கச் செய்யும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.

    உடற்சூடு பிரச்சனை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கீரை வகைகளில் மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை. அதேபோல வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.
    கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கல்லீரல் சுருக்கம் ஏற்படுவதற்கான காரணத்தையும், தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.
    தற்போது அருந்தியதன் காரணமாக, கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

    நாம் உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள், கல்லீரல் மூலமாகச் செரிக்கப்பட்டு, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான சத்துக்களாக அனுப்பிவைக்கப்படுகிறது. உடலுக்கு அவசியம் தேவையான சில வகைப் புரதச்சத்துக்களும் கல்லீரலில் உற்பத்தி ஆகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மிகப் பெரிய பொறுப்பும் கல்லீரலுக்கு உள்ளது.

    உணவு மற்றும் தண்ணீரின் மூலம் உடலுக்குள் பரவக்கூடியது ஹெபடைட்டிஸ் ஏ. இந்த வைரஸால் மஞ்சள் காமாலை வரும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், சில மாதங்களிலேயே சரி செய்ய முடியும். ஹெபடைட்டிஸ் பி, ரத்தம் மூலமாகவும் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாகவும் பரவும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் பரவும். இந்த வைரஸ் தாக்குதலால் விரைவில் கல்லீரல் பாதிக்கப்பட்டு, செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே மருத்துவப் பரிசோதனை இன்றி கண்டறிய இயலாது. 10-15 வருடங்கள்கூட உடலில் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரைலை சிதைவு அடையவைக்கும். ஹெபடைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி இப்போது கிடைப்பதால், இதன் பாதிப்பு குறைந்துள்ளது.

    ஹெபடைட்டிஸ்-சி வைரஸ் காரணமாகவும் கல்லீரல் பாதிக்கப்படும். இதற்குத் தடுப்பூசி கிடையாது. மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் இது. சமீபத்தில் இதற்கு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இந்நோயைக் குணப்படுத்த முடியும்.

    ஆல்கஹாலை கல்லீரல் ‘ஆல்கஹால் டீஹைட்ரோகீனஸ்’ (Alchohol dehydrogenase) என்ற என்சைம் மூலமாகச் செரிமானம் செய்கிறது. அதிக அளவு மது அருந்தும்போது, ஆல்கஹாலில் இருக்கும் சில வகை வேதிப்பொருட்கள், கல்லீரலின் பணிகளைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில், கல்லீரல் சிதைவடைந்து, கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது. முற்றிய நிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியும். அந்த நேரத்தில் கல்லீரலின் செயல்திறன் முற்றிலுமாக இழந்து, இவர்களுக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்வதால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்படலாம். உலக அளவில் கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைபவர்களில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், மது அதிகம் அருந்துபவர்களே என்பது முக்கியமான செய்தி.

    ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும்கூட, சில சமயங்களில் அதிகக் கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து (Fatty liver) கொழுப்புக் கல்லீரல் நோய் ஏற்படலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு, கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேரும்போது 20 - 30 வருடங்கள் கழித்துக் கல்லீரல் சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. குளிர்பானங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும்போது அதில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் சேர்ந்து நாளடைவில் ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படும்.



    வெகு சிலருக்கு அதிகமாக மது அருந்துவதால், ஆல்கஹால் ஹெபடைட்டிஸ் எனும் நோய் ஏற்படும். இந்த நோய் முற்றினால், மூன்றே மாதங்களில் மரணம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. தினமும் மது அருந்துபவர்களுக்கு, வயது வித்தியாசமின்றி திடீரென இந்த நோய் தாக்கும்.

    கல்லீரல் சுருக்கம் தடுக்க டிப்ஸ்

    மதுவைத் தவிர்த்தால், பெரும்பாலான கல்லீரல் பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை. சிலர் வாரத்துக்கு ஒரு முறைதானே மது அருந்துகிறோம் என்று, அதிக அளவில் எடுத்துக்கொள்வார்கள். இதுவும் தவறு.

     மற்ற உறுப்புகளுக்கு இல்லாத சிறப்பு, கல்லீரலுக்கு உள்ளது. அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வது. கல்லீரல் 30 சதவிகிதம் வரை வேலை செய்தால்கூடப் போதுமானது. எனவே, மது அருந்துபவர்கள், கல்லீரல் பாதிப்பு அடைந்திருக்கிறதா என, முன்கூட்டியே கண்டறிந்து, மதுவைத் தவிர்த்தால், கல்லீரலைப் பாதுகாக்க முடியும்.

    கல்லீரல் செயல்திறன் பரிசோதனை (Liver Function Test), ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசானிக் பரிசோதனை மூலம், கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய முடியும். கல்லீரல் சுருக்கம் நோய்க்கு முந்தைய நிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த ஃபைப்ரோசிஸ் நிலையில்தான், உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, பசி இன்மை, மன அழுத்தம், வயிறு வலி போன்றவை ஏற்படும். ஃபைப்ரோசிஸ் நிலையை அறிய, கல்லீரல் பயாப்சி எடுப்பதற்குப் பதிலாக தற்போது ஃபைப்ரோஸ்கேன் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், கல்லீரலையும் உயிரையும் பாதுகாக்க முடியும்.

    மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்வதும் கல்லீரலைப் பாதிக்கும். இதையும் தவிர்க்க வேண்டும்.
    ×