என் மலர்
நீங்கள் தேடியது "body heat"
- இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.
- தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.
பருவநிலை மாற்றம் காரணமாகவோ, உடலில் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலமாகவோ பலருக்கு உடல் சூடு ஏற்படுவதுண்டு. ஆனால் உடல் சூட்டை கட்டுப்படுத்த முடியாமல் சிலர் சிரமப்படுவதுண்டு. உடல் சூட்டை எப்படி தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.
* மருந்து உட்கொள்வதால் ஏற்படும் உடல் சூட்டை சரியான உணவுமுறையின் மூலமாகத்தான் சரி செய்ய முடியும்.
* பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் உடல் சூட்டை சில பழக்க வழக்கங்களால் மாற்ற முடியும்.
* இரவில் தூங்கும்போது விளக்கெண்ணெயை உள்ளங்கால்களில் தடவி மசாஜ் செய்யலாம்.

* இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.
* தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.
* விளக்கெண்ணெய் மசாஜ் உடலின் மையப்பகுதியில் நிலவும் வெப்பத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.
* விளக்கெண்ணெய் இயற்கையான மலமிளக்கியாக செயல்படக்கூடியது.
* உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்களை நீக்கி உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.
* எண்ணெய் மசாஜ் எவ்வளவு சிறந்ததோ அதே அளவு முக்கியமானது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது.
* இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளரில் சிறிதளவு சோம்பை ஊறவைத்து விட்டு காலையில் எழுந்தவுடன் அந்த நீரைப் பருக உடல் சூடு குறையும்.
உங்கள் உடலின் தன்மையை முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் உடல் சூடான தன்மை கொண்டதா அல்லது குளிர்ச்சியான தன்மை கொண்டதா என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
ஒருவேளை உங்கள் உடல் சூடான தன்மை கொண்டது என்றால் நீங்கள் தினமும் காலையில் எழுந்ததும் சிறிதளவு வெந்தயம் சாப்பிடலாம். அல்லது வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இதை தொடர்ந்து செய்துவர உடல் சூடு ஏற்படுவது முற்றிலும் நின்றுவிடும்.
ஆனால் குளிச்சியான உடல் வாகு கொண்டவர்கள் தொடர்ந்து வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பால் மற்றும் தேன், புதினா டீ முதலானவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
முக்கியமாக காரமான, பொரித்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். இவற்றை தவிர்த்தால் மட்டும் தான் உடல் சூட்டை தவிர்க்க துணைபுரியும்.
* உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது.
* உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும். அப்போதே நாம் அதை கவனித்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.

உடற்சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடற்சூட்டை பொறுத்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், மாதவிலக்கு நாட்களின் போது பெண்களுக்கு உடல் சூடு அதிகரிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மாதவிலக்கு நாட்களின் உடற்சூடு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை உண்டுபண்ணும்.
புளிப்பு, உப்பு, காரம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் நம்முடைய உடல் மிகுந்த உஷ்ணம் அடையும். மேலும் டீ, காஃபி, கோலா போன்ற கஃபைன் வகை பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கச் செய்யும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.
உடற்சூடு பிரச்சனை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கீரை வகைகளில் மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை. அதேபோல வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.






