search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ways To Reduce Body Heat"

    • வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொள்ளலாம்.
    • பழச்சாறுகள் தினமும் பருகுவது அவசியம்.

    * தர்பூசணியை ஃப்ரீசரில் வைத்தால், பழத்தில் இருக்கும் தண்ணீர் ஃப்ரீஸ் ஆகி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போல் இருக்கும்.

    * நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பருகலாம்.

    * கரும்புச்சாறு கோடைக்கு ஏற்ற சிறந்த பானம். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.

    * பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொள்ளலாம்.

    * வியர்வையை போக்கி ஃப்ரஷ் ஆக இருக்க நான்கு சொட்டு எலுமிச்சம்பழச் சாறை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளித்துப் பாருங்கள்.

    * நுங்குகளை வாங்கி உரித்துக் கையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட இயற்கையான ஐஸ்க்ரீம் ரெடி.

    * கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது நுங்கை மசித்துத் தடவுங்கள்.

    * நீராகாரம் அருமையான இயற்கையான பானம். காலையிலும் ஒரு டம்ளர், டிபன் சாப்பிட்டப் பிறகும் ஒரு டம்ளர் அருந்தலாம்.

    * கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

    * மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் என்று ஏதாவது ஒன்றை தினமும் அவசியம் பருகுங்கள்.

    * வீட்டில் வெயில்படும் இடத்தில் பெரிய கார்டு போர்டு அட்டைப் பெட்டியை படிமானமாகச் செய்து பால்கனி, ஜன்னல் கம்பி வலைக்குள் செருகிவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் டி.வி. பார்க்கும் போது கிளார் அடிக்காமல் இருக்கும். குளுமையாகவும் இருக்கும்.

    * வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட வயிற்று வலி பறந்து போகும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி கசகசாவும் போடலாம்.

    * வெயில் காலத்தில் மிக அதிகாலையில் அல்லது மாலையில் நன்றாக வெயில் தாழ்ந்த பிறகு செடிகளுக்கு நீர்விட வேண்டும். இதனால் நீண்ட நேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.

    * செடி தொட்டிகளில் நீர் விட்டபின் ஒரு பாலிதீன் பேப்பரை சற்று இடைவெளி விட்டு பரத்தி ஒரு கல்லை வெயிட்டாக வைத்து விட்டால் எளிதில் நீர் ஆவியாகாது.

    * கோடை காலத்தில் வாரத்தில் ஒருநாள் இரவு "ஃப்ரூட் நைட்' என்று வைத்துக் கொள்ளவும். "ஃப்ரூட் சாலட்' சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும். சமையல் செய்யும் வேலையும் மிச்சமாகும்.

    * கோடை காலத்தில் வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்க கற்களை பாலிதீன் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருக்கும் மண், தூசி வடாமில் கலக்காது.

    * வெயில் காலத்தில் கார இனிப்பு பண்டங்களை ஹாட்பாக்ஸ் இவற்றில் வைத்துவிடுங்கள். எறும்பு பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

    * மொட்டை மாடியிலும் முன் முற்றத்திலும் தென்னை ஓலையில் கொட்டகை கட்டிவிடுங்கள். இரவில் ஓலையில் நீர் தெளித்துவிட்டால் ஏ.சி.யில் இருப்பது போல இருக்கும்.

    • உடலை குளிர்ச்சியாக வைக்க தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
    • உடல் உஷ்ணத்தை இயற்கையான வழிகளில் எப்படி பராமரிக்கலாம்.

    கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது…. உடலை குளிர்ச்சியாக வைக்க தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், உடல் அதிக உஷ்ணமானால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மனித உடலின் சராசரி வெப்பநிலை 97.8 டிகிரி முதல் 99 டிகிரி இருத்தல் வேண்டும். உடல் உஷ்ணத்திற்கு காலநிலை மாற்றம், உணவு பொருட்கள் என பல காரணங்கள் உள்ளது. நமது உடல் சூட்டை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். அந்தவகையில், உடல் உஷ்ணத்தை இயற்கையான வழிகளில் எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

     ஒருவருக்கு உடல் சூடு அதிகம் இருப்பதால் தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. மூலம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. உடலில் சூடு அதிகரித்தாலும் பிரச்சனை தான். குறைந்தாலும் பிரச்சனை தான். எப்பொழுதும் சமமான அளவில் உடல் வெப்பநிலை இருக்க வேண்டும். உடல் சூட்டை குறைக்க டிப்ஸ் இதோ உங்களுக்காக…

    உடல் சூடு ஓரளவுக்கு மேல் அதிகரிப்பதால் முடி உதிருதல், சரும பிரச்சனைகள், உள் மூலம், வெளி மூலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. பெரும்பாலும் வாகன ஓட்டுனர்கள், உட்கார்ந்து பணிபுரிபவர்கள், அதிக நேரம் கணினியில் பணிபுரிபவர்கள் ஆகியவர்களுக்கே உடல் சூடு ஏற்படுகிறது. உடல் சூட்டை குறைக்க சில வழிமுறைகள் உள்ளன.

     உடல் சூட்டை எப்படி தடுப்பது?

    தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தினமும் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி அதில் வெந்தயத்தை 20 நிமிடம் ஊற வைத்து அதனை உலர்த்தி நன்கு காய்ந்ததும் பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

    மேலும் கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் வெள்ளைப்பூண்டு மற்றும் மிளகு சேர்த்து இறக்கி ஆறியதும் அந்த எண்ணெய்யை கட்டை விரலில் வைக்கவும். 2 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் உடல் சூடு குறைந்து மன அழுத்தமும் ஏற்படாமல் இருக்கும்.

    இரவில் தூங்கும் முன் தொப்புளில் நல்லெண்ணெய்யை விட்டு தூங்க வேண்டும்.

    தினமும் காலையில் பால் குடித்து வரலாம். சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது வெறும் வயிற்றில் காலை எழுந்ததும் நீச்சதண்ணீர் குடித்தால் உடல் சூடு குறையும். வெள்ளரிக்காய், தர்பூசணி, போன்றவற்றை சாப்பிட்டாலும் சூடு குறையும்.

    நீர்மோர், பழைய சாதம், கஞ்சி போன்றவற்றை குடித்தாலும் குடித்தால் உடல் சூடு குறையும்.

    அவகோடா என அழைக்கப்படும் பட்டர் ஃப்ரூட் -யில் மோனொசாட்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இது உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவுவதோடு, செரிமான பிரச்சனைகளை போக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

    தர்பூசணி பழம் சுமார் 91.45 சதவீதம் தண்ணீரால் ஆனது. கோடைக்கு ஏற்ற இந்த பழத்தினை அவ்வப்போது சாப்பிடுவது உடல் சூட்டை கடுப்படுத்தி கோடை நோய்களில் இருந்து காக்கும். இது உடலை குளிச்சியாக்குவதுடன், சரும பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

    ×