search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liver Problem"

    கல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம்.
    உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. ரத்தத்தை சுத்திகரித்தல், ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்தல் போன்ற முக்கியமான பணியை அது செய்கிறது. கல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். முரண்பாடான உணவுகளை சாப்பிடுவது, மரபணு ரீதியான பிரச்சினைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது, நீண்டகால நோய் பாதிப்புக்கு ஆளாவது போன்ற காரணங்களால் கல்லீரல் பலவீனமடைகிறது. ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம்.

    ஒருசிலருக்கு வயிற்றுப்பகுதியில் திடீரென வீக்கம் தோன்றும். உடல் பருமன், தொப்பை பிரச்சினை காரணமாக அப்படி இருக்கிறது என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிடுவார்கள். வயிற்று பகுதியில் சுரக்கும் ஒருவித திரவம் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன் கல்லீரலையும் சேதமடைய செய்துவிடும். அதன்மூலம் கல்லீரல் அழற்சி, கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். ஒருசிலருக்கு கால் பகுதியிலும் வீக்கம் ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

    மஞ்சள் காமாலை நோயால் அவதிப்படுபவர்களின் கல்லீரலும் பாதிப்புக்கு உள்ளாகும். அத்துடன் சருமம் மஞ்சள் நிறத்திலும், கண்கள் வெள்ளை நிறத்திலும் காட்சியளித்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை உறுதிப்படுத்திவிடலாம். அடி வயிற்றுக்கு சற்று மேல், வலது பகுதியில் வலி இருந்து கொண்டிருந்தால் அதுவும் கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறியாகும்.

    தொடர்ந்து வயிற்று பகுதியில் வலி இருந்து கொண்டிருந்தால் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக மாறுவதும், நாளடைவில் அடர் மஞ்சள் நிறமாக தோன்றுவதும், மலச்சிக்கல் பிரச்சினையும் கல்லீரலை பாதிக்கும் விஷயங்களாகும். தொடர்ந்து இந்த பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு உடல் சோர்வும், மன குழப்பமும் உண்டாகும்.
    கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கல்லீரல் சுருக்கம் ஏற்படுவதற்கான காரணத்தையும், தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.
    தற்போது அருந்தியதன் காரணமாக, கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

    நாம் உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள், கல்லீரல் மூலமாகச் செரிக்கப்பட்டு, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான சத்துக்களாக அனுப்பிவைக்கப்படுகிறது. உடலுக்கு அவசியம் தேவையான சில வகைப் புரதச்சத்துக்களும் கல்லீரலில் உற்பத்தி ஆகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மிகப் பெரிய பொறுப்பும் கல்லீரலுக்கு உள்ளது.

    உணவு மற்றும் தண்ணீரின் மூலம் உடலுக்குள் பரவக்கூடியது ஹெபடைட்டிஸ் ஏ. இந்த வைரஸால் மஞ்சள் காமாலை வரும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், சில மாதங்களிலேயே சரி செய்ய முடியும். ஹெபடைட்டிஸ் பி, ரத்தம் மூலமாகவும் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாகவும் பரவும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் பரவும். இந்த வைரஸ் தாக்குதலால் விரைவில் கல்லீரல் பாதிக்கப்பட்டு, செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே மருத்துவப் பரிசோதனை இன்றி கண்டறிய இயலாது. 10-15 வருடங்கள்கூட உடலில் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரைலை சிதைவு அடையவைக்கும். ஹெபடைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி இப்போது கிடைப்பதால், இதன் பாதிப்பு குறைந்துள்ளது.

    ஹெபடைட்டிஸ்-சி வைரஸ் காரணமாகவும் கல்லீரல் பாதிக்கப்படும். இதற்குத் தடுப்பூசி கிடையாது. மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் இது. சமீபத்தில் இதற்கு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இந்நோயைக் குணப்படுத்த முடியும்.

    ஆல்கஹாலை கல்லீரல் ‘ஆல்கஹால் டீஹைட்ரோகீனஸ்’ (Alchohol dehydrogenase) என்ற என்சைம் மூலமாகச் செரிமானம் செய்கிறது. அதிக அளவு மது அருந்தும்போது, ஆல்கஹாலில் இருக்கும் சில வகை வேதிப்பொருட்கள், கல்லீரலின் பணிகளைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில், கல்லீரல் சிதைவடைந்து, கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது. முற்றிய நிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியும். அந்த நேரத்தில் கல்லீரலின் செயல்திறன் முற்றிலுமாக இழந்து, இவர்களுக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்வதால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்படலாம். உலக அளவில் கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைபவர்களில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், மது அதிகம் அருந்துபவர்களே என்பது முக்கியமான செய்தி.

    ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும்கூட, சில சமயங்களில் அதிகக் கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து (Fatty liver) கொழுப்புக் கல்லீரல் நோய் ஏற்படலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு, கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேரும்போது 20 - 30 வருடங்கள் கழித்துக் கல்லீரல் சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. குளிர்பானங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும்போது அதில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் சேர்ந்து நாளடைவில் ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படும்.



    வெகு சிலருக்கு அதிகமாக மது அருந்துவதால், ஆல்கஹால் ஹெபடைட்டிஸ் எனும் நோய் ஏற்படும். இந்த நோய் முற்றினால், மூன்றே மாதங்களில் மரணம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. தினமும் மது அருந்துபவர்களுக்கு, வயது வித்தியாசமின்றி திடீரென இந்த நோய் தாக்கும்.

    கல்லீரல் சுருக்கம் தடுக்க டிப்ஸ்

    மதுவைத் தவிர்த்தால், பெரும்பாலான கல்லீரல் பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை. சிலர் வாரத்துக்கு ஒரு முறைதானே மது அருந்துகிறோம் என்று, அதிக அளவில் எடுத்துக்கொள்வார்கள். இதுவும் தவறு.

     மற்ற உறுப்புகளுக்கு இல்லாத சிறப்பு, கல்லீரலுக்கு உள்ளது. அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வது. கல்லீரல் 30 சதவிகிதம் வரை வேலை செய்தால்கூடப் போதுமானது. எனவே, மது அருந்துபவர்கள், கல்லீரல் பாதிப்பு அடைந்திருக்கிறதா என, முன்கூட்டியே கண்டறிந்து, மதுவைத் தவிர்த்தால், கல்லீரலைப் பாதுகாக்க முடியும்.

    கல்லீரல் செயல்திறன் பரிசோதனை (Liver Function Test), ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசானிக் பரிசோதனை மூலம், கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய முடியும். கல்லீரல் சுருக்கம் நோய்க்கு முந்தைய நிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த ஃபைப்ரோசிஸ் நிலையில்தான், உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, பசி இன்மை, மன அழுத்தம், வயிறு வலி போன்றவை ஏற்படும். ஃபைப்ரோசிஸ் நிலையை அறிய, கல்லீரல் பயாப்சி எடுப்பதற்குப் பதிலாக தற்போது ஃபைப்ரோஸ்கேன் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், கல்லீரலையும் உயிரையும் பாதுகாக்க முடியும்.

    மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்வதும் கல்லீரலைப் பாதிக்கும். இதையும் தவிர்க்க வேண்டும்.
    நம் உடலில் சேரும் திசுக்களில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நாம் நீக்கவில்லை என்றால் காலப் போக்கில் அவை நச்சுக்களாக மாறி உடலில் நோய் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.
    நம் உடலின் முழு ஆரோக்கியமும் நம் உணவு, தூக்கம், பரம்பரை சுற்றுப்புற சூழ்நிலை, குடும்ப உறவுகளின் ஆரோக்கியம், வாழ்வின் சுறுசுறுப்பு, வாழ்க்கை முறை, உடலிலிருந்து நச்சுக்களை நீக்கி நாம் வாழும் முறை இவற்றினைப் பொறுத்தே அமைகின்றது.

    இவற்றில் நம் உடலில் சேரும் திசுக்களில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நாம் நீக்கவில்லை என்றால் காலப் போக்கில் அவை நச்சுக்களாக மாறி  உடலில் நோய் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.

    கல்லீரல் ஜீரண உறுப்புகளின் ஒரு பகுதி 500க்கும் மேற்பட்ட வேலைகளை பார்ப்பது இதன் பொறுப்பு.

    * பித்த நீர் உற்பத்தி செய்து கொழுப்பு, புரதம், போன்ற இவற்றினை உடைத்து குடலில் உடனடி எளிதாய் உறிஞ்ச  உதவுகின்றது.

    * வைட்டமின் கே உறிஞ்சப் பித்த நீர் மிக அவசியமாகின்றது. வைட்டமின் கே இல்லாவிடில் ரத்தம் கசிவு ஏற்பட்டால் கூட நிற்காது. ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருக்கும்.

    * கார் போன்ற டிரேட்டுகளை உடைத்து குளுகோசாக மாற்றி ரத்த ஓட்டத்தில் செலுத்தி திசுக்கள் அதனை எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன. அதிக குளுகோஸ்களை கோனாம் கல்லீரலில் சேமிக்கப்பட்ட தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் தாது, உப்புகளை பாதுகாத்து வைக்கின்றது. வைட்டமின் ஏ. பி12, டி, ஈ, கே மற்றும் இரும்பு காப்லர் போன்ற தாது உப்புகளை சேமித்து குறைபாட்டின் போது உதவுகின்றது.

    ரத்தத்தினை வடிகட்டி நச்சினை நீக்கி சுத்திகரிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது. இப்படி எண்ணற்ற கல்லீரல் செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நம்மைத்தாக்குப் பல நோய்கள் கல்லீரலை பாதிக்கலாம்.

     * வைரஸ் தாக்குதல்

    மதுவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல். மது இல்லாமல் உணவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல். பித்த குழாய்கள் பாதிப்பு கல்லீரல் இறுகுதல், அதிக சர்க்கரை யால் ஏற்படும் பாதிப்பு என பல வகை பாதிப்புகள் ஏற்படலாம்.

    மேலும் ஊசி மூலம் மருந்து செலுத்துவதில் சுகாதாரமின்மை பச்சை குத்தி கொள்ளுவதில் சுகாதாரமின்மை ரசாயனங்கள், சர்க்கரை நோய், கூடுதலான எடை பொட்டாசியம் குறைபாடு ஆகியவைகளும் கல்லீரல் குறைபாட்டினை ஏற்படுத்தலாம்,

    மிக அதிகமாக பல்வேறு தாக்குதல்களுக்கும் ஈடு கொடுக்கும் கல்லீரலுக்கும் தாக்கு பிடிப்பதற்கும் ஒரு அளவு உண்டு அல்லவா. கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக மஞ்சள் காமாலை ஏற்படலாம், வயிற்றில் வலி, வீக்கம் ஏற்படலாம். கால் கணுக்காலில் வீக்கம் ஏற்படலாம்.

    * சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்
    * சிறுநீர் அடர்ந்து இருக்கலாம்
    * ரத்தம் அல்லது கறுநிற  வெளிப்போக்கு இருக்கலாம்.
    * அதிக சோர்வு ஏற்படலாம்.
    * எப்பொழுது தூங்க வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம்.
    * வயிற்று பிரட்டல், வாந்தி, பசியின்மை இருக்கலாம்.
    * குழப்பமான உணர்வு இருக்கலாம்.

    * மூட்டுவலி, ரத்த கொதிப்பு, மன உளைச்சல் போன்றவைகளும் அறிகுறிகளாக இருக்கலாம்.

    இத்தகு பாதிப்புகள் இருப்பின் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. தவிர்ப்பு முறையாக கீழ்க்கண்டவைகளை பின் பற்றலாம்.
    * அதிகம் பதப்படுததப்பட்ட உணவுகளைத் தவிருங்கள்.

    * காய்கறி ஜூஸ் அருந்துங்கள்- காரட், பீட்ரூட், முட்டைகோஸ், புடலை, பீர்க்கை இவைகளில் ஏதேனும் ஜூஸ் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.
    எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி, இவற்றினையும் ஜூசாக எடுத்துக் கொள்ளலாம்.

    கீரை, பூண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றினையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் பொட்டாசியம் சத்து இருக்க வேண்டும். பீன்ஸ், பீட்ரூட், பசலை, கரும்பு ஜூஸ், சர்க்கரை வள்ளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றினை நன்கு எடுத்துக் கொள்ளுங்கள். இது சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதனை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாய் ஆல்கஹாலினை தவிர்த்து விடுங்கள்.

    இஞ்சி, மஞ்சள். பட்டை, லவங்கம் இவற்றினை நம் முன்னோர்கள் நன்கு உணவில் சேர்த்தனர். ஆரஞ்சு பழம், குடை மிளகாய், காரட், வெள்ளரி, ஆப்பிள் இவையும் நவீன விஞ்ஞான ஆய்வின் சிபாரிசாக கல்லீரல் பாதுகாப்பாக பரிந்துரைக்கப்படுகின்றது.
    ×