search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்பிளஸ் 10 ப்ரோ"

    ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. #HONOR10Lite #smartphone



    ஹுவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த EMUI 9.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    செல்ஃபி எடுக்க 24 எம்.பி. முன்பக்க கேமரா, பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ், கைரேகை சென்சார் மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
    - ARM மாலி G54 MP4 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - EMUI 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், வைட், கிரேடியன்ட் புளு மற்றும் கிரேடியன்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் மற்றும் ஹானர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி முதல் துவங்குகிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் மற்றும் ரூ.2800 மதிப்புள்ள க்ளியர்ட்ரிப் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
    ஹூவாய் துணை பிராண்டு ஹானர் இந்தியாவில் 24 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Honor #Smartphone



    ஹூவாய் துணை பிராண்டு ஹானர் இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஹூவாய் கிரின் 710 பிராசஸர் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட ஹானர் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வடிவமைப்பு காரணமாக ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 91 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் EMUI 9.0 சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மற்றும் முன்பக்க கேமராக்களில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் சீன் டிடெக்‌ஷன் வசதி வழங்கப்படலாம்.



    இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக புதிய ஹானர் 10 லைட் வெளியாக இருக்கிறது. முன்னதாக ஹூவாய் நிறுவனத்தின் புதிய சாதனத்திற்கான காப்புரிமை விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஹானர் 10 லைட் சார்ந்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஹூவாய் வை9 (2019) ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹானர் 10 லைட் போன்றே ஹூவாய் வை9 சீரிஸ் ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கிறது. 

    ஹூவாய் வை9 சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.5 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல் ஸ்கிரீன், கிரின் 710 சிப்செட், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க முன்பக்கம் மற்றும் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. 
    ஹூவாயின் ஹானர் பிரான்டு ஹானர் 10 லைட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #Honor10Lite



    ஹூவாயின் ஹானர் பிரான்டு ஹானர் 10 லைட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புது ஸ்மார்ட்போன் மாடலில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது.

    இத்துடன் கிரின் 710 சிப்செட், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 2.0, ஆன்ட்ராய்டு 9 பை, EMUI 9.0, புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8 அப்ரேச்சர், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் அம்சங்கள், ஏ.ஐ. சீன் டிடெக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இதனுடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. செல்ஃபிக்கள், கிளாஸ் பேக், கிரேடியன்ட் ஃபினிஷ், பின்புறம் கைரேகை சென்சார், 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    ஹானர் 10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 710 12என்.எம். பிராசஸர்
    - ARM மாலி-G51 MP4 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை, EMUI 9.0
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், வைட், கிரேடியன்ட் புளு, கிரேடியன்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,370) என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,450) என்றும் டாப்-என்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஈரான் நாட்டில் குடியிருப்பு பகுதியில் பாய்லர் ஒன்று வெடித்து சிதறியதில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    டெஹ்ரான்’

    ஈரான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளது மஷாத் நகரம். இங்குள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு ஒன்றின் அருகில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் அங்கிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், பாய்லர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த மூன்றுக்கு மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.

    தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலியானவர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உள்ளூர் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். #KeralaFloods #KeralaRain #Kumarasamy
    பெங்களூரு:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், மழையால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மழை வெள்ள நிவாரணங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும். மேலும் கேரளா மாநிலத்துக்கு தேவையான நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #Kumarasamy
    திண்டுக்கல் நகர் பகுதியில் பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #10Rupeescoin

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகர் பகுதியில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்படுத்திய 25 பைசா, 50 பைசா ஆகியவற்றை செல்லாத காசாக நினைத்து மக்கள் வாங்க மறுக்கிறார்கள். கடந்த ஆண்டு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி புதிய ரூபாய் நோட்டுகளை அறிவித்தார்.

    இதில் 2000 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளில் பிரச்சனை எழுகிறது. அது நல்ல நோட்டா, டம்மி நோட்டா எனத் தெரியாமல் பொதுமக்கள் தவித்தபடி உள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது ஏராளமான 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

    இதனை அனைவரும் வாங்கி பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் திண்டுக்கல் நகர் பகுதியில் சிறு மற்றும் குறு வியாபாரிகள், மளிகை கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுக்கிறார்கள்.

    டீக்கடைகளில் கூட 10 ரூபாய் நாணயத்தை உற்றுப்பார்த்து திருப்பி கொடுத்து விடுகிறார்கள். நெல்லை போன்ற நகரங்களில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் சர்வ சாதாரணமாக இந்த நாணயங்களை வாங்குகிறார்கள். ஆனால் திண்டுக்கல் வியாபாரிகள் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 10 ருபாய் நாணயங்களை வாங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் இதனை வாங்கி வங்கியில் செலுத்த முயலும் போது அவர்கள் வாங்க மறுக்கிறார்கள். எனவே இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் மற்றும் வங்கி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர். #10Rupeescoin

    ×