search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm kumarasamy"

    கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Kumarasamy
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி 4 -1 என்ற கணக்கில் வென்றது.  

    இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணிக்கு கிடைத்த தார்மீக வெற்றி. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி நீடிக்காது எனக்கூறிய பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர்.



    காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது 28 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. அதன் முதல் படிதான் இந்த வெற்றி.

    மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வெற்றியால் அத்துமீறி செயல்படுபவர்களாக மாறமாட்டோம். தங்கள் கூட்டணி தொடர்பான பாஜக குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்து உள்ளனர் என தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Kumarasamy 
    கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். #KeralaFloods #KeralaRain #Kumarasamy
    பெங்களூரு:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், மழையால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மழை வெள்ள நிவாரணங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும். மேலும் கேரளா மாநிலத்துக்கு தேவையான நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #Kumarasamy
    ×