search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் ராணுவம்"

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழப்பு.
    • பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் வடக்குப் பகுதிகளை அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைத்துவிட்டது. தற்போது தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், சண்டை முடிவுக்கு வருவதாகவும், ஹமாஸ் அமைப்பினர் இனிமேல் சரணடைவதுதான்... என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேதன்யாகு கூறுகையில் "சண்டை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கிவிட்டது. சண்டை முடிகிறது.

    எஹ்யா சின்வருக்காக உயிர் இழக்காதீர்கள். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். கடந்த சில தினங்களாக பல ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்களது படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்" என்றார்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்ததாக நேதன்யாகு கூறியபோதிலும், அதற்கான ஆதாரத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பும் நேதன்யாகு கருத்தை புறக்கணித்துள்ளது.

    சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    முன்னதாக,

    ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதோடு, எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டில் 1200 பேர் உயிரிழந்தனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. இதுவரை காசாவில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகிறார்கள்.

    பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வருகின்றனர்.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது.

    இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

    இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் மோதலை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிபர் ஜோ பைடன் நேதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    நேதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசும்போது, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேதன்யாகு ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    • போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலி.
    • காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அதன்பின் இரண்டு நாட்கள், ஒரு நாள் என மூன்று நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

    காசாவில் 23 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் வடக்கு காசாவில் உள்ள பெரும்பாலானோர் தெற்கு காசாவிற்கும், முகாம்களுக்கும் சென்றுவிட்டனர். வடக்கு காசாவின் பெரும்பகுதி வாழத்தகுதியற்ற பகுதி போன்ற காணப்படுவதாக வீடுகள், குடும்பங்களை இழந்த பாலஸ்தீனர்கள் குமுறி வருகின்றனர்.

    இந்த நிலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை மேலும்மேலும் அதிகரித்து வருகிறது. வடக்கு காசாவை ஒட்டியுள்ள தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் எகிப்து எல்லையை ஒட்டியுள்ள தெற்கு காசாவிற்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது.

    இதனால் இருப்பதற்கு இடமில்லாம் பாலஸ்தீன மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தான பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்கதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    எகிப்து அகதிகளை அனுமதிக்கவில்லை. இதனால் போர்க்களத்தில் தவித்து வரும் நிலை நீடித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவத்தினர் துண்டு பிரசுரங்கள் மூலம் இந்த இடத்தை விட்டு வெளியெறுமாறு தெரிவித்துவிட்டு, இரவு முழுவதும் தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சத்தம் கேட்டதாக கான் யூனிஸ் நகர வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவம் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள். குண்டு வீசப்போகிறோம் என்று போனில் தனக்கு தெரிவித்தார்கள். விதவையும், நான்கு குழந்தைகளின் தாயுமான பெண்மணி ஒருவர் கடந்த 7-ந்தேதி வடக்கு காசாவில் இருந்து கான் யூனிஸ் நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தேன். இதுபோன்ற உத்தரவுகளை காது கொடுத்து கேட்பதில்லை.

    உண்மை என்னவென்றால், காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. வடக்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார்கள். தெற்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார் என விரக்தியோடு தெரிவித்தார்.

    இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் ஹமாஸை அதிகாரத்தில் இருந்து ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த பதுங்கு குழிகளை தேடிப்பிடித்து இஸ்ரேல் ராணுவம் அழித்து வருகிறது.

    • கடந்த ஏப்ரல் மாதம் லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது
    • இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியது

    இஸ்ரேல்- லெபனான் எல்லையில் கடந்த புதன்கிழமை இஸ்ரேல் ராணுவம் புல்டோசர் கொண்டு பள்ளம் தோண்டி கொண்டிருந்தது. அப்போது ஒரு முதியவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, புல்டோசர் தோண்டிய மண்ணில் அவரது கால் சிக்கிக் கொண்டது. புல்டோசரை கொண்டு முதியவரை ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த வீரர் இடைமறித்து அந்த முதியவரை காப்பாற்றினார்.

    இந்த நிலையில் இன்று அந்தப்பகுதியில் போராட்டக்காரர்கள் திடீரென ஒன்று கூடி இஸ்ரேல் ராணுவம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்காக இஸ்ரேல் ராணுவம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்துள்ளனர். இதனால் லெபனான் போராட்டக்காரர்கள் மற்றும் வீரர்கள் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளனர்.

    2000-ம் ஆண்டு மே மாதம் இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தெற்கு பகுதியில் ஆக்கிரமித்து இருந்த பகுதியில் இருந்து வெளியேறியது. தற்போது பிரச்சினை நடைபெற்ற பகுதி லெபனானின் கேஃபர் சௌபா மலைப்பகுதியாகும். இந்த பகுதியுடன் அருகில் உள்ள செபா பண்ணையையும் இஸ்ரேல் 1976 மத்திய கிழக்கு போரின் போது ஆக்கிரமித்து வைத்துள்ளதாக லெபனான் குற்றம்சாட்டி வருகிறது.

    இன்று சில போராட்டக்காரர்கள் இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை இஸ்ரேல் ராணுவம் இல்லாத பகுதியில் அகற்ற முயன்றுள்ளனர். அப்போது இஸ்ரேல் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பின்னர் ஐ.நா. பாதுகாப்புப்படையினர், லெபனான் வீரர்கள் போராட்டக்காரர்களை தங்கள் எல்லைக்குள் திரும்பச் செய்ய வைத்தனர்.

    2000-க்குப் பிற DO NOT CROSS BLUE LINE என்ற வாசகம் ஐ.நா. அமைதிப்படையால் அரேபிக், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இஸ்ரேல் வீரர்கள், ஏராளமான வாகனங்கள் அந்த இடத்தில் காணப்பட்டு வருகின்றன.

    2006-ம் ஆண்டு நடைபெற்ற 34 நாள் சண்டைக்குப்பின் பெரும்பாலும் எல்லை பிரச்சினை வந்தது. கிடையாது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

    • வீடுகளின் மேற்கூரையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
    • சிறுமியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் வருத்தம் தெரிவித்ததோடு, அவளது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி அவர்களை கைது செய்ய இஸ்ரேல் ராணுவம் அங்கு தேடுல் வேட்டையில் ஈடுபட்டது.

    அப்போது அங்குள்ள வீடுகளின் மேற்கூரையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல் வீரர்கள் அவர்களை குறிவைத்து பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    அப்போது இஸ்ரேல் வீரர்கள் சுட்டதில் ஒரு வீட்டில் இருந்த 16 வயது பாலஸ்தீன சிறுமியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவள் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தாள். இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுமி உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே சிறுமியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் வருத்தம் தெரிவித்ததோடு, அவளது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் தொடர்ந்து விசாரணை நடத்தும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

    ×