search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிஸ்புல்லா"

    • லெபனான் எல்லை அருகில் உள்ள பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்.
    • கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஹமாஸ்க்கு எதிராக காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லாபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அதில் இருந்து சிரியா, ஈராக், லெபனான் நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் மீது அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஏற்கனவே மத்திய கிழக்கு பகுதி இஸ்ரேல்- ஹமாஸ் போரால் பதற்றமாக இருக்கும் நிலையில் தற்போது இந்த டிரோன் தாக்குதல்களால் மேலும் மோசம் அடைந்துள்ளது.

    இந்த நிலையில்தான் லெபனான் நாட்டின் தெற்கு துறைமுக நகரான சிடோனில் இஸ்ரேல் டிரோன் தாக்குல் நடத்தியுள்ளது. கார் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகுவம், இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    டிரோன் தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டும் லெபனானில், இஸ்ரேல் தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லாவின் முக்கியமான தளபதில் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் ஹாமஸ் அமைப்பின் முக்கிய நபர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

    • இஸ்ரேல் போரினால் காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேல் உயிர் இழந்துள்ளனர்
    • சமநிலை இல்லாத போர்க்களத்தில் ஏமனை தாக்குகிறார்கள் என்றார் எர்டோகன்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

    எதிர்பாராத இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுத்து, அன்றிலிருந்தே அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் ஒரு போரை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

    சுமார் 23 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி 100-வது நாளை நெருங்கும் இப்போரில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆதரவு தருகின்றன.

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், ஏமன், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.

    கடந்த 2023 அக்டோபர் 19 அன்று, ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்தும், இஸ்ரேலை எதிர்த்தும், ஏமன் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் செங்கடல் (Red Sea) பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை வான்வழியாகவும், கடல் வழியாகவும் தாக்க தொடங்கினர்.

    அப்பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் போர்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளன.

    இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஏமன் நாட்டின் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வான்வழி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக கருதாத துருக்கி, ஏமன் தாக்குதலுக்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) இது குறித்து கூறியதாவது:

    ஏமனுக்கும் அமெரிக்க-இங்கிலாந்து படைகளுக்கும் இருப்பது ஒரு சமநிலை இல்லாத போர்க்களம். அளவுக்கு அதிகமாக ஏமன் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தாக்குதல் நடத்துகின்றன. செங்கடல் பகுதியை "ரத்த கடல்" (sea of blood) போல் மாற்றி விட முயல்கின்றன. ஆனால், தங்களை காத்து கொண்டு, தங்கள் முழு சக்தியையும் திரட்டி, இதற்கு ஹவுதி அமைப்பினர் தக்க பதிலடி அளிப்பார்கள்.

    இவ்வாறு எர்டோகன் தெரிவித்துள்ளார்.

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் ஹமாஸ்க்கு ஆதரவாக ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது.
    • லெபனானின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. மூன்று மாதங்களை கடந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் லெபனான் தெற்குப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று சொகுசு காரில் சென்ற ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதியை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லா தளபதி விஸ்ஸாம் அல்-டவில் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது.

    லெபனானின் தெற்குப் பகுதியில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா குழுவின் தளபதியாக செயல்பட்டு வந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இது ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆத்திரமூட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல்- காசா இடையிலான சண்டை மத்திய கிழக்கு போராக விரிவடையும் என அச்சம் நிலவுகிறது.

    அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டதன் காரணமாக சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 23 லட்சம் மக்கள் தொகை கொண்ட காசாவில் இருந்து சுமார் 85 சதவீதம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

    • காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய குழு இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    லெபனான் இஸ்ரேல் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள ஷியா மாவட்டத்தில் உள்ள கட்டடத்தை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் சீனியர் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் பகுதியிலேயே இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன தலைவர்களை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவர் சயத் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

    கொல்லப்பட்ட தலைவர் சலா அரூரி என்றும், குழுவின் ராணுவ பிரிவின் நிறுவனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் டிரோன் மூலம் இந்த தாக்குதலை நடத்தியதாக லெபனான் நாட்டின் தேசிய நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் இதற்கு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர், நாங்கள் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போரில் கவனம் செலுத்துவோம் என்றார்.

    ஆனால் அவர் நேரடியாக சலா அரூரி மரணம் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எந்த சூழ்நிலையிலும் தயாராக இருக்கிறோம்" என்றார்.

    • ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வருகின்றனர்.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது.

    இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

    இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் மோதலை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிபர் ஜோ பைடன் நேதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    நேதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசும்போது, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேதன்யாகு ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    • அக்டோபர் 7 அன்று, இஸ்ரேலில் ஹமாஸ் 1400க்கும் மேற்பட்டவர்களை கொன்றது
    • எங்கள் கவனத்தை திசை திருப்ப ஈரான் முயல்கிறது என இஸ்ரேல் கூறியுள்ளது

    லெபனான் நாட்டை மையமாக கொண்டு செயல்படும் அமைப்பு, ஹிஸ்புல்லா (Hezbollah).

    1992ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பிற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவு இருந்து வருகிறது. அந்நாட்டில் அது ஒரு அரசியல் கட்சியாகவும் தன்னை முன்னிறுத்தி கொண்டுள்ளது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் தீவிரமாக எதிர்த்து வரும் இந்த அமைப்பு, மத்திய தரைகடல் பகுதியில் அந்த இரு நாடுகளின் ஆதிக்கத்தை ஒழிக்க போராடி வருகிறது.

    கடந்த அக்டோபர் 7 அன்று தன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி 1400க்கும் மேற்பட்ட மக்களை கொன்று, 150க்கும் மேற்பட்டவர்களை சிறை பிடித்து சென்ற ஹமாஸ் அமைப்பின் மீது போர் அறிவித்த இஸ்ரேல், அந்த அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்துள்ளது. இஸ்ரேலி ராணுவ படையினர் (IDF) பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது வான்வழியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இது மட்டுமின்றி தரைவழி தாக்குதலை தொடங்க போவதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல், மும்முரமாக போரிட்டு வரும் வேளையில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதை எதிர் கொண்டு பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் வந்தால் எதிர் கொள்ளவும் தயார் நிலையில் உள்ளது.

    இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் (Rear Admiral) டேனியல் ஹகரி (Daniel Hagari) கருத்து தெரிவித்தார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    நாங்கள் காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போரிட்டு வருகிறோம். எங்கள் கவனத்தை திசை திருப்ப லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பினர் எல்லையில் தொடர் துப்பாக்கி சூட்டை நடத்தி வருகின்றனர். இது ஈரான் நாட்டின் தூண்டுதலால் ஈரானின் துணையுடன் நடைபெறுகிறது.

    இவ்வாறு ரியர் அட்மிரல் குற்றம் சாட்டி பேசினார்.

    ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு பகுதி அரசியல் கட்சியாகவும், ஒரு பகுதி ஆயுதக் குழுவாகவும் மற்றொரு பகுதி லெபனானின் ஷியா சமூகத்திற்கு அடிப்படை சேவைகளை வழங்கும் இயக்கமாகவும் செயல்படுகிறது.
    சிட்னி:

    ஹிஸ்புல்லா அமைப்பின அனைத்து பிரிவுகளையும் பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. லெபனான் மீது கணிசமான அதிகாரம் செலுத்தி வரும் இந்த இயக்கத்தின் ஆயுதப் பிரிவுகள் மீதான தடையை நீட்டித்துள்ளது.

    ஈரான் ஆதரவு கொண்ட ஷியா குழுவானது, ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் உள்துறை மந்திரி கரன் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

    ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு பகுதி அரசியல் கட்சியாகவும், ஒரு பகுதி ஆயுதக் குழுவாகவும் மற்றொரு பகுதி லெபனானின் ஷியா சமூகத்திற்கு அடிப்படை சேவைகளை வழங்கும் இயக்கமாகவும் செயல்படுகிறது. இஸ்ரேல் மீதான பல ராக்கெட் தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து இன்றுவரை ஆயுதங்களை கைவிட மறுக்கும் ஒரே இயக்கம் இதுவாகும்.
    ×