search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் திறன் திருவிழா"

    • இளைஞர் திறன் திருவிழா கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
    • இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) மூலம் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

    முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இம்முகாமில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள படித்த, படிக்காத, ஆண்,பெண்,திருநங்கைகள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான கட்டணமில்லா பயிற்சிகளைத் தேர்வு செய்து பிரபல தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்.

    பயிற்சி காலத்தில் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள், பயிற்சிக் கையேடு, சீருடை, ஆங்கில அறிவு பயிற்சி மற்றும் இதர மதிப்பூகூட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நிறைவில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித்தரப்படும்.

    எனவே, கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி தெரிவித்துள்ளார்.

    • இளைஞர் திறன் திருவிழா நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் - தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க, திட்ட இயக்குனர் மு.நானிலதாசன் தலைமை தாங்கினார். இதில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

    வேலைவாய்ப்பு முகாமில் நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களைச் சார்ந்த கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் ச.தீனதயாளன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, .சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், தனியார் கம்பெனிகளின் நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.
    • இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) மூலம் காடையாம்பட்டி வட்டார பொது சேவைமைய கட்டிடத்தில் (யூனியன் அலுவலகம் எதிரில்) நாளை மறுநாள்(சனிக்கிழமை) வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

    இம்முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள படித்த, படிக்காத, ஆண்,பெண்,திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான கட்டணமில்லா பயிற்சிகளைத் தேர்வு செய்து பிரபல தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்.

    மேற்படி, பயிற்சி காலத்தில் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், பயிற்சிக் கையேடு, சீருடை, ஆங்கில அறிவு பயிற்சி மற்றும் இதர மதிப்பூகூட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நிறைவில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித்தரப்படும்.

    எனவே, காடையாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திட்ட இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

    • இளைஞர் திறன் திருவிழா நல்லம்பள்ளி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டார அளவில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தருமபுரி வட்டார இயக்க மேலாண்மை அலகு, நல்லம்பள்ளி வட்டாரம், தீனதயாள் உற்பத்தியாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நல்லம்பள்ளி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சி திட்ட இயக்குனர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி மற்றும் ஷகிலா, உதவி திட்ட அலுவலர் ராஜேஷ், வட்டார மேலாளர் பிரதீப் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.
    • இதில் காளான் வளர்ப்பு, அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. அதன்படி பெரம்பலூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 27-ந் தேதியும், வேப்பந்தட்டை ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதியும்,

    பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மற்றும் ஆலத்தூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந்தேதியும், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்டவர்களுக்கு 17-ந்தேதியும், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது. இவற்றில் காளான் வளர்ப்பு, அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    எனவே, ஊரக பகுதிகளை சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை,

    ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9444094325 மற்றும் 04328-225362 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • இளைஞர் திறன் பயிற்சிக்கு 352 பேர் கலந்து கொண்டனர்.
    • திறன் பயிற்சிக்கு 173 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    பல்லடம் :

    தமிழ்நாடு மாநில இயக்கம் ஊரக,நகர்ப்புற திருப்பூர் மாவட்டம் சார்பாக கிராமப்புற பகுதியை சார்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் இளைஞர் திறன் பயிற்சிக்கு இளைஞர்களை தேர்வு செய்திடவும், பல்லடம் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் 352 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு திறன் பயிற்சிக்கு 173 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 257 பயனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட இயக்குநர் மதுமதி, உதவி திட்ட அலுவலர்கள் முத்து, லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேஷ், பல்லடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாமஸ் கிருஷ்டோபர்,ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுய தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
    • வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒன்றியம் வாரியாக, இளைஞர் திறன் திருவிழா நடக்கிறது. இதில் 10 மற்றும் பிளஸ் 2 படித்தவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    நாளை 30ந்தேதி உடுமலை ஜி.வி.ஜி., கல்லூரி, ஆகஸ்டு 5-ந்தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 6-ந்தேதி பல்லடம் அரசு கல்லூரி, 12-ந்தேதி பொங்கலூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 18-ந்தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லூரி, 26-ந்தேதி வெள்ளகோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 27-ந்தேதி தாராபுரம் அரசு உயர்நிலை பள்ளி, 17ந்தேதி அவிநாசி பெண்கள் மேல்நிலை பள்ளி, 24ந் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முகாம் நடக்க உள்ளது.

    முகாமில் காளான் வளர்ப்பு, அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரிப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல், அப்பளம், மசாலா பொருள் தயாரிப்பு, தேனி வளர்ப்பு, அலங்கார நகை தயாரித்தல், மொபைல்போன் பழுது பார்த்தல் போன்ற சுய தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.விவரங்களுக்கு 94440 94396 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.07.2022 மற்றும் 02.07.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாவட்ட அளவிலான இளைஞர் திறன் திருவிழா மாவட்ட ஆட்சியரகம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆகியோரால் இளைஞர் திறன் பயிற்சிக்கான www.kanchiskills.in என்ற இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.

    மேலும் அனைத்து துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் பயிற்சி தொடர்பான வேலைவாய்ப்பு விவரங்கள், சுயதொழில் முனைவோருக்கான வழிக்காட்டுதல்கள், திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் வசதிகள் குறித்த விவரங்கள் இளைஞர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயற்சியளிக்கும் அரசுத்துறைகளையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் 388 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தலா 1 வீதம் 5 இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படவுள்ளது. தீன் தயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜானா (DDU-GKY) திட்டமானது 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஊரக ஏழை இளைஞர்களுக்கு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலம் கல்வி தகுதிக்கேற்ப திறன் பயிற்சி அளித்து நிரந்தர வருமானத்திற்கு வேலைவாய்ப்பு பெற்றுதரப்படுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை DDU - GKY திட்டத்தின் கீழ் 942 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.

    2022 - 2023 ஆம் நிதியாண்டிற்கு DDU - GKY திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை, இளைஞர் திறன் திருவிழா மூலம் வட்டாரம் வாரியாக தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்ட அளவில் இளைஞர் திறன் திருவிழா தற்போது நடத்தப்படுகிறது. முதல்வர் அவர்களின் கனவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் படித்த / பயிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் (Sectors) குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதன் மூலம் இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது. திறன் பயிற்சி பெற்று வாழ்க்கையில் பயன் பெறும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 தொழிற் பிரிவுகளில் (Job Role) குறுகிய கால பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் இம்மாவட்டத்தில் பல்வேறு கல்வித் தகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சியில் சேர்ந்து வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளார்கள். இம்மாவட்டத்தில் 2021-2022 வரை குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 367 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 509 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட கால தொழிற் பயிற்சியாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 5 தொழிற் பிரிவுகளில் (MMV, MRAC, Electronic mechanic, Technician Mechatronics, Welder) பயிற்சி அளிக்கப்பட்டு திறன்மிகு பயிற்சியாளர்களாக வேலைவாய்ப்பு பெறக்கூடிய அளவில் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

    மேலும், இம்மாவட்டத்தில் 2021-2022 வரை நீண்ட கால பயிற்சி பெற்று தொழிற்பழகுநர் பயிற்சித் திட்டத்தில் 190 பயிற்சியாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது நீண்ட கால பயிற்சியில் 119 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    மேற்கண்ட பயிற்சிகளால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மிகு பயிற்சிகள் அளிக்கப்படுவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், இம்மாவட்டத்தில் திறன் மிகு இளைஞர்கள் உருவாக்கப்பட்டு தொழிற் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.kanchiskills.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ. சிவ ருத்ரய்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுரு நாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருணகிரி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    ×