search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து உலகக்கோப்பை"

    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - இந்தியா பலப்பரீட்சை நடத்தும் என மைக்கேல் வாகன் கணித்துள்ளார். #WorldCup2019
    இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 100 நாள் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.

    2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அசுர வலிமையடைந்துள்ளது. தற்போது அந்த அணி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. சொந்த நாட்டில் தொடர் நடைபெறுவதால் முதன்முறையாக இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்று கருதப்படுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - இந்தியா பலப்பரீட்சை நடத்தும் என்று கணித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘உலகக்கோப்பையை இங்கிலாந்து வெல்ல இன்னும் 100 நாட்கள் இருக்கிறது. இந்தியாவை இறுதிப் போட்டியில் வெல்லும் என்பது என்னுடைய கணிப்பு’’ என்று பதிவிட்டுள்ளார்.
    உலகக்கோப்பையில் அனுபவமிக்க டோனியை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். #MSDhoni
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று இந்தியா எனக் கருதப்படுகிறது. ஆனால், 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது யார் என்பதில் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் டோனியின் அனுபவத்தை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இடது கை பேட்ஸ்மேன் ஆன சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் டோனி கணிசமான ரன்கள் அடித்துள்ளார். அதோடு இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்துகிறார். குறிப்பாக இளம் பந்து வீச்சாளர்களுக்கு டோனி அறிவுரை பயனுள்ளதாக இருக்கிறது.

    டோனி அதிக அளவிலான ஏற்றம் இறக்கங்களை கண்டுள்ளார். பல உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ளார். ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்றுள்ளார். இப்படி இருக்கும்போது ஏன் இந்திய அணியுடன் உலகக்கோப்பை தொடருக்க அவர் செல்லக்கூடாது.

    டோனி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்து வருகிறார். இதனால் என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பையில் டோனி நான்காவது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும்’’ என்றார்.
    உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவை என்று முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #WorldCup2019
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் 24-ந்தேதியும், ஒரு நாள் தொடர் மார்ச் 2-ந்தேதியும் தொடங்குகிறது.

    உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் என்பதால் ஆஸ்திரேலிய தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டியில் இடம்பெற்ற அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் நிலையாக விளையாடி வரும் அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியான ஒன்றே.

    ஆஸ்திரேலிய தொடரில் நீக்கப்பட்டதால் அவர் உலகக் கோப்பை அணியிலும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    இந்த நிலையில் உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் தேவை என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், ரகானே, ரி‌ஷப் பந்த் என யாரையும் களம் இறக்க தேவையில்லை. தினேஷ் கார்த்திக்கை களம் இறக்கலாம். இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து எனக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கிறது.

    என்னுடைய கணிப்பில் 13 வீரர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். அதில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், பும்ரா, முகமது‌ ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு உண்டு.

    மற்ற வகையில் ராகுல், ரகானே, ரி‌ஷப் பந்ட் ஆகியோரை காட்டிலும் உலகக் கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் தேவை. அணியில் எப்போதும் நெகிழ்வு தன்மை இருக்க வேண்டும். தொடக்க வீரராக தினேஷ் கார்த்திக்கை மாற்றி களம் இறக்கும்போது நல்ல முடிவு கிடைக்கும். டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய அனுபவம் இருப்பதால் அவரால் ஒரு நாள் போட்டியில் ஜொலிக்க முடியும்.

    14-வது வீரராக விஜய் சங்கர் இருக்கலாம். ஏனென்றால் இங்கிலாந்து மைதானத்தில் பந்து நன்றாக ‘சுவிங்’ ஆகும். அப்போது ஹர்த்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய இரண்டு ஆல் ரவுண்டர்களுடன் களம் இறங்கலாம்.

    கலீல் அகமது, முகமது சிராஜ் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீசவில்லை. உமேஷ் யாதவை மாற்று வீரராக மட்டுமே வைத்து இருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் வெல்லும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    தினேஷ் கார்த்திக் நிலை குறித்து முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியதாவது:-

    இந்திய அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கை 20 ஓவர் வீரராக மட்டுமே பார்க்க தொடங்கி விட்டது என்பது புரிந்துவிட்டது. அவருக்கு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பதும், வாய்ப்புக்கான கதவுகள் திறப்பதும் என்னை பொறுத்தவரை இல்லை. அதற்காக அவரின் ரசிகர்களிடம் வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

    நியூசிலாந்தில் அம்பதி ராயுடு பொறுமையாக, நிதானமாக ஆடிய விதம் கார்த்திக்கை விட சிறப்பாக இருந்தது என்று நிர்வாகம் கருதலாம். நீண்ட நேரம் விளையாடும் போட்டியில் தினேஷ் கார்த்திக் நிலைத்து ஆடும் பொறுமையில்லை என்று கருதுகிறார்கள்.

    டோனி, ரிசப் பந்த் ஆகியோருடன் ஒப்பிடுகையில் தினேஷ் கார்த்திக், டோனியை காட்டிலும் கீப்பிங்கில் சற்று குறைவாகவும், ரி‌ஷப் பந்த்-ஐ காட்டிலும் சற்று சிறப்பாகவும் செயல்படுகிறார்.

    ஆனால் ரி‌ஷப் பந்த் சமீப காலமாக பேட்டிங் செய்யும் விதம் தேர்வாளர்களை கவர்ந்துள்ளது. நம்பிக்கை அளித்துள்ளது. நான் ரி‌ஷப் பந்த் ஆதரவாளர் இல்லை. ஆனால் அவர் ஒரு நாள் போட்டியில் தனக்கான இடத்தை தக்க வைக்க முயன்று வருகிறார்.

    பல போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தினேஷ் கார்த்திக் சரியாக பயன்படுத்தியும் தேர்வு செய்யவில்லை எனும்போது அவரது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கருதுகிறேன். 20 ஓவர் வீரராக மட்டுமே அவர் தொடர முடியும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ரேக்கர் கூறினார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #WorldCup
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து நடக்கிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அணிகளை தேர்வு செய்ய ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதித்துள்ள கடைசி தேதியான ஏப்ரல் 23-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை தேர்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்திய அணியில் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது யார் என்பதுதான் இதுவரை முடிவு செய்யவில்லை. மற்ற அனைத்து இடத்திற்கான வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர்.



    ரி‌ஷப் பந்தின் ஆட்டம் கடந்த ஒரு ஆண்டாகவே மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார். 3 நிலை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். விஜய் சங்கர் பேட்டிங் ஆல்ரவுன்டர் வரிசையில் இருக்கிறார்.

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். ரகானே உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த 3 பேரும் உலககோப்பை அணியில் இடம்பிடிக்க கடும் போட்டியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும் கைப்பற்றியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் வென்றுள்ளன.
    2019 உலகக்கோப்பைக்கான எங்கள் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமதுதான் இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. அப்போது தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் சர்பிராஸ் அகமது பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி சர்பிராஸ் அகமதுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதித்தது. இதனால் உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமது செயல்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், நான்தான் கேப்டனாக இருப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த சர்பிராஸ் அகமது, இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் சர்பிராஸ் அகமதுதான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான தயார் திட்டத்தில் சர்பிராஸ் அகமதும் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளார். சிறந்த தலைவர், சிறந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை அவர் தலைமையில்தான் பாகிஸ்தான் வென்றது. ஐசிசி டி20 தரவரிசையிலும் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் மறுமதிப்பீடு செய்யும் வரை அவர்தான் கேப்டனாக இருப்பார்’’ என்றார்.
    உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேச அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது. #WorldCup2019 #CWC19
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் சாம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இத்தொடருக்கு முன் ஒவ்வொரு அணிகளும் தலா இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோத இருக்கின்றன. இதற்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி இந்தியா மே 25-ந்தேதி நியூசிலாந்துடனும், மே 28-ந்தேதி வங்காள தேசத்துடன் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து பாகிஸ்தான், இலங்கையுடனும், ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான், நியூசிலாந்துடனும், வெஸ்ட் இண்டீஸ் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்துடனும், தென்ஆப்பிரிக்கா இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உடனும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    உலகக்கோப்பைக்கு தயாராக ரிசர்வ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது அவசியம் என்று பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். #NZvIND
    இந்திய அணி கடந்த ஓராண்டாக வெளிநாட்டில் விளையாடி வருகிறது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இங்கிலாந்தில் மட்டுமே மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இழந்தது.

    முன்னணி வீரர்களான தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி இன்னும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது.

    இந்நிலையில் ரிசர்வ் வீரர்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆர் ஸ்ரீதர் கூறுகையில் ‘‘தொடர்ச்சியாக அணி வெற்றி பெறுவதை எல்லோரும் விரும்புவார்கள். வெற்றிப் பயணத்தில் இருந்து பின்வாங்க யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், உலகக்கோப்பைக்கு முன் ஏழு போட்டிகள் மட்டுமே உள்ளதால் ரிசர்வ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது அவசியமாகும்.

    முன்னணி வீரர்கள் விளையாடி கொண்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வீரர்களுக்கு போதுமான அளவு நேரம் கொடுக்காத நிலையில் முக்கியமான உலகக்கோப்பை தொடரில் அவர்களை விளையாட வைக்கும் சூழ்நிலை இருக்கக்கூடாது. இதைப்பற்றி அணி நிர்வாகம் சிந்திக்கும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.

    இங்கிலாந்தில் ஜூன் மாதம் நிலவும் வானிலைக்கு நிகரான இடம் நியூசிலாந்தைவிட வேறேதும் இருக்க முடியாது. அதனால் ரிசர்வ் வீரர்களுக்கு இங்கே வாய்ப்பு வழங்கி சிறப்பாக நிலையை உருவாக்க முயற்சி செய்வோம்’’ என்றார்.
    ஆல்-ரவுண்டர் இல்லையென்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருடன் இந்திய அணி களம் இறங்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #NZvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இத்தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து பேசி சர்ச்சைக்குள்ளானார். இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    முதல் போட்டியில் இந்தியா புவனேஸ்வர் குமார், முகமது ஷமி மற்றும் கலீல் அகமது ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. 2-வது போடடியில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் களம் இறங்கியது.

    ஆனால் 3-வது போட்டியில் ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கர் களம் இறங்கினார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தத் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உலகக்கோப்பையில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கும் திட்டம் ஏதும் வைத்துள்ளீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


    கலீல் அகமது

    அப்போது ஆல்-ரவுண்டர் இல்லையென்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருடன் இந்தியா களம் இறங்கும் என்று தெரிவித்தார். மேலும், இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘விஜய் ஷங்கர் அல்லது ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு ஆல்-ரவுண்டர் அணியில் இடம்பெறாவிடில் மட்டுமே, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்குவதில் அர்த்தம் இருக்கும்.

    ஏனென்றால், ஆல்-ரவுண்டரால் புதுப்பந்தில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீச முடியும். அதன்பின் முன்னணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இணைந்து அவர், 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச வேண்டிய அவசியம் இருக்காது.

    நான் எப்போதெல்லாம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினேனோ, அப்போதெல்லாம் ஹர்திக் பாண்டியா அணியில் இருந்திருக்கமாட்டார். அதனால் ஆல்-ரவுண்டர் அணியில் இருந்தால், முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமற்ற ஆடுகளத்தைத் தவிர மற்ற இடங்களில் 3-வது வேகப்பந்து வீச்சு குறித்து யோசித்தது கிடையாது.


    முகமது சிராஜ்

    ஆல்-ரவுண்டரை பொறுத்துதான் பந்துவீச்சு கலவை இருக்கும். உலகின் வலிமையான அணிகளை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் குறைந்தது இரண்டு ஆல்-ரவுண்டர் வைத்திருப்பார்கள். சில சமயம் மூன்று ஆல்ரவுண்டர்கள் கூட இருப்பார்கள். அது அவர்களுக்கு ஏராளமான பந்துவீச்சு ஆப்சனை வழங்கும்’’ என்றார்.
    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 2019 உலகக் கோப்பையை வெல்லும் திறமை பாகிஸ்தான் அணிக்கு உள்ளது என்று சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். #WorldCup
    பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சோயிப் மாலிக் இடம்பிடித்து விளையாடி வருகிறார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 2019 உலக்கோப்பையை வெல்லும் திறமை பாகிஸ்தானிடம் உள்ளது என்று சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையை வென்று கையில் ஏந்தும் திறமை எங்களிடம் உள்ளது. ஆனால், திறமை மட்டும் இருந்தால் எதையும் வெல்ல முடியாது. சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

    உலகக் கோப்பையை வெல்லும் அளவிற்கான தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளோம். நினைவுகூரத்தக்க 2019 உலகக்கோப்பையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன என்று துணைக்கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #TeamIndia
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சிட்னியில் நாளைமறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா பேட்டிளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கு முன் நாங்கள் 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறோம். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுடன் செல்ல முடியுமா? அல்லது வீரர்களின் எண்ணிக்கை குறையுமா? என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் காயம் மற்றும் பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் வேண்டுமென்றால் இருக்கலாம்.

    இந்த வருடத்தில் நாங்கள் ஏராளமான போட்டியில் விளையாட இருக்கிறோம். அதனால் காயங்கள் ஏற்படலாம். காயங்களால் வீரர்கள் இடம்பெற முடியாமல் போவதை தவிர்த்து மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் இருப்பதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு இடத்தையும் (Slots) பார்த்தீர்கள் என்றால், தனிப்பட்ட வீரர்களால் சிறப்பான வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் ஒவ்வொரு வீரர்களின் பார்ம்-ஐ பொறுத்துதான் அணியில் இடம் கிடைக்கும். இங்கிலாந்து செல்வதற்கு யாருக்கும் உத்தரவாதம் கிடையாது.

    முன்னதாகவே ஆடும் லெவன் அணி குறித்து கூற இயலாது. ஆனால் நாங்கள் விளையாடும் 13 போட்டிகளில் இடம்பிடிக்கும் வீரர்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஐபிஎல் உள்பட இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட இருப்பதால் உலகக்கோப்பைக்கான 11 அல்லது 12 பேர் கொணட இந்திய அணியை தெரிவிப்பது கடினம்’’ என்றார்.
    உலகக் கோப்பைக்கான இந்திய அணி திட்டத்தில் ரிஷப் பந்த் இருப்பார் என்று தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். #BCCI #RishabhPant
    இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இங்கிலாந்து தொடரின்போது தினேஷ் கார்த்திக் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 3-வது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார். ரிஷப் பந்த் அறிமுகம் ஆனார். அறிமுக டெஸ்டில் 24, 1 ரன் அடித்தார். 4-வது டெஸ்டில் 0, 18 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 ரன்னில் வெளியேறிய ரிஷப் பந்த், 2-வது இன்னிங்சில் 114 ரன்கள் குவித்தார். இதனால் ரிஷப் பந்த் மீது அனைவருடைய பார்வையும் திரும்பியது.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தலா 92 ரன்கள் குவித்து அசத்தினார். அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை. 2-வது போட்டியில் 17 ரன்களும், 3-வது ஆட்டத்தில் 24 ரன்களும் சேர்த்ததால் கடைசி இரண்டு போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

    டி20 தொடரில் முறையே 1, 5, 58 என ரன்கள் சேர்த்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். ரிஷப் பந்த் சிறப்பு பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இவரது பேட்டிங் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் டோனி டி20 போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்காதது விமர்சனத்தை எழுப்பியது.

    இதனால் ஆஸ்திரேலியா தொடருக்கான டி20 அணியில் இடம் பிடித்த ரிஷப் பந்திற்கு ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 தொடரில் விக்கெட் கீப்பராக பணியாற்றிய ரிஷப் பந்த் முதல் ஆட்டத்தில் 20 ரன்கள் சேர்த்தார். 3-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆனார். 2-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழக்காவிடிலும் 25, 30 என ஓரளவிற்கு ரன்கள் சேர்த்தார். இதனால் ரிஷப் பந்த்-ஐ ஏன் அணியில் சேர்த்தார்கள் என்ற விமர்சனம் எழும்பியது.



    இந்நிலையில்தான் சிட்னி டெஸ்டில் வீறுகொண்டு எழுந்த ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் விளாசினார். இவரது அதிரடி ஆட்டத்தில் இந்தியா 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 300 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. கடந்த 30 வருடத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாலோ-ஆன் ஆக முக்கிய காரணமாக இருந்தார். மேலும், 20 கேட்ச்கள் பிடித்து அசத்தினார். இதனால் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த்-ஐ ஏன் சேர்த்திருக்கக்கூடாது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி திட்டத்தில் ரிஷப் பந்திற்கு கட்டாயம் இடமுண்டு என்று தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர்களில் ஒருவராக ரிஷப் பந்த் இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்யும் வேலைகள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. உலகக் கோப்பை திட்டத்தில் ரிஷப் பந்த் ஒரு பகுதியாக இருப்பார்.

    வீரர்களின் வேலைப்பளு விவகாரத்தில்தான் ரிஷப் பந்த் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. தற்போது எத்தனை வீரர்கள் ஓய்வில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். ரிஷப் பந்த் டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். உடல் ஏற்கனவே சோர்வடைந்திருக்கும். சிறு உபாதை உள்ளது. அதில் குணமடைய வேண்டும். அவர் அதிக வலிமையுடன் அணிக்கு திரும்புவார்.

    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துதான். அவருக்கு நாங்கள் சில இலக்கு நிர்ணயம் செய்தோம். நாங்கள் அவருக்கு நிர்ணயம் செய்ததை அவர் நிறைவேற்றிவிட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிட்னி டெஸ்ட் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்’’ என்றார்.
    உலகக்கோப்பை தொடருக்கு சற்றுமுன் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் பந்து வீச்சாளர்கள் வேலைப்பளு குறித்து டு பிளிசிஸ் கவலை தெரிவித்துள்ளார். #WorldCup2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிக அளவில பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

    முன்னணி வீரர்களை ஒவ்வொரு அணிகளும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. பணம் அதிக அளவில் கிடைப்பதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி, மே மாதம் 2-வது வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா? வெளிநாட்டில் நடத்தப்படுமா? என்ற கேள்வி ஏற்கனவே உள்ளது.

    இதற்கிடையில் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா போன்ற முன்னணி நாடுகள் நட்சத்திர வீரர்களுக்கு ஐபில் தொடரில் பங்கேற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது. மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தானாகவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.



    ஐபிஎல் தொடர் முடிவடைந்து இரண்டு வாரத்திற்குள் உலகக்கோப்பை தொடர் வருவதால் ஒவ்வொரு அணிகளும் தங்களது வேகப்பந்து வீச்சு குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி வருகிறார்.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனான டு பிளிசிஸ் லுங்கி நிகிடி, ரபாடா, கிறிஸ் மோரிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
    ×