search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் அட்டை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பலனாக இன்று வரை 2 கோடியே 64 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு உள்ளதால் அதற்குள் ஆதார் எண்ணை இணைக்குமாறு விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதியே மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்சார வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆதார் எண்களை இணைத்து கொடுத்து வருகின்றனர்.

    சுமார் 3 கோடி மின் இணைப்பு உள்ள நிலையில் வீடுகளுக்கான மின் இணைப்புகள் மட்டும் 2 கோடியே 33 லட்சம் மின் இணைப்புகள் இருக்கிறது. இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள் 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளது.

    இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கும், விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    டிசம்பர் 31-ந்தேதி வரை ஆதாரை இணைக்க ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில் 65 சதவீதம் பேர் தான் அந்த சமயத்தில் ஆதாரை இணைத்திருந்தனர். இதனால் ஜனவரி 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அப்படி இருந்தும் 2 கோடியே 47 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்ததால் வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பலனாக இன்று வரை 2 கோடியே 64 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

    வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு உள்ளதால் அதற்குள் ஆதார் எண்ணை இணைக்குமாறு விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது.

    இதுபற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், 3 கட்டமாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதால் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். இன்னும் 15-ந்தேதி வரை அவகாசம் உள்ளதால் அனைவரும் இணைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    எனவே இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என்று தெரிவித்தார். ஆதாரை இணைக்காவிட்டால் 15-ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆதாரை இணைக்காதவர்களின் வீடுகளை கண்டறிந்து மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்றும் நினைவுப்படுத்தி ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது.
    • ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2811 மின் வாரிய அலுவலகங்களில் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 2.49 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுவதும் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
    • இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மின் இணைப்பு உள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர். இதை அமைச்சர் செந்தில்பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார்.

    ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்பதால் அதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15-ந்தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
    • இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

    இதையடுத்து மின் இணைப்பு உள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.

    இதை அமைச்சர் செந்தில்பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார்.

    ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள் என்பதால் அதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதுபற்றி மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "அனைவரும் பயன்பெறும் வகையில் ஆதார் இணைப்பு கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரேஷன்கார்டு, திருமண பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை இதற்கான சான்றாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • சான்று எதுவும் இல்லாவிட்டால், குடும்ப தலைவரின் சுய ஒப்புதல் பத்திரத்தை பூர்த்தி செய்து முகவரியில் திருத்தம் செய்யலாம்.

    புதுடெல்லி:

    யு.ஐ.டி.ஏ.ஐ. எனப்படும் மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழங்கும் ஆணையம், பொதுமக்களுக்கான ஆதார் விவரங்களை வழங்கி வருகிறது.

    ஆதாரில் ஏற்கனவே இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது குடும்பத் தலைவர் முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

    அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த முறையில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தாங்களாகவே மாற்றிக் கொள்வதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். https://myaadhaar.uidai.gov.in// என்ற இணையதளத்தில் சென்று இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம். குடும்ப தலைவரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்து இந்த நடவடிக்கையை தொடங்கலாம்.

    குடும்ப தலைவருக்கும், முகவரியில் மாற்றம் அல்லது திருத்தம் மேற்கொள்ள விரும்பும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ள உறவுமுறைக்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    குறிப்பாக ரேஷன்கார்டு, திருமண பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை இதற்கான சான்றாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்று எதுவும் இல்லாவிட்டால், குடும்ப தலைவரின் சுய ஒப்புதல் பத்திரத்தை பூர்த்தி செய்து முகவரியில் திருத்தம் செய்யலாம்.

    இந்த சேவைக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் செலுத்திய பிறகு குடும்ப தலைவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.

    எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் இணையதளத்தில் குடும்ப தலைவர் தமது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு மற்ற உறுப்பினர்கள் ஆன்லைனில் ஆதாரில் முகவரி மாற்றம் செய்யலாம்.

    • இணைய இணைப்பு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் அடையாள சரி பார்ப்புக்கான ஒரே ஆதாரமாக ஆதார் செயல்படுகிறது.
    • மின்னணு முறையில் தங்களுடைய அடையாள சான்றுகளை சரி பார்க்க ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.

    புதுடெல்லி:

    எந்தவொரு நிறுவனத்துடனும் ஆதார் எண்ணை பகிரும் போதும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கைப்பேசி எண், வங்கி கணக்கு எண், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்களை பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    குறிப்பாக ஆதார் எண்ணை பகிரும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. பல்வேறு வகையான பலன்கள், சேவைகளை பெற பொதுமக்கள் விருப்பப்படி ஆதாரை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம். ஆனால் வங்கி விவரங்கள், பான் கார்டு உபயோகங்களை போன்று ஆதார் அட்டையையும் எண்ணையும் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    இணைய இணைப்பு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் அடையாள சரி பார்ப்புக்கான ஒரே ஆதாரமாக ஆதார் செயல்படுகிறது. மின்னணு முறையில் தங்களுடைய அடையாள சான்றுகளை சரி பார்க்க ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.

    அதே சமயம் எந்தவொரு நிறுவனத்துடனும் ஆதார் எண்ணை பகிரும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது தளத்தில் குறிப்பாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம். ஆதார் வைத்திருப்பவர்கள் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திற்கும் அதற்கான ஓ.டி.பி.யையும் அளிக்க வேண்டாம்.

    ஆதார் எண்ணை பகிராமலும் வசதிகளை பெற முடியும். குறிப்பிட்ட இடங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்துவதை விரும்பாத பட்சத்தில், விர்ச்சுவல் ஐடியை (வி.ஐ.டி.-மெய்நிகர் அடையாளம் காட்டி) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஐ.டி.யை உருவாக்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) வழங்குகிறது. இதை அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் 'மைஆதார்' போர்ட்டல் வழியாக ஒருவர் விர்ச்சுவல் ஐடி எளிதாக உருவாக்கி, அங்கீகாரத்தை ஆதார் எண்ணுக்கு பதிலாக பெறலாம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பின்னர் இந்த 'வி.ஐ.டி.'யை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    ஆதார் எண்ணை பயோமெட்ரிக் முறையில் 'லாக்கிங்' செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு ஆதாரை பயன்படுத்த வாய்ப்பில்லை என்றால், லாக்கிங் செய்து கொள்ளலாம். தேவைபடும் சமயங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பான, மென்மையான, விரைவான அங்கீகார அனுபவத்தை உறுதி செய்வதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது.

    ஆதார் கோரும் நிறுவனங்கள், அது எந்த நோக்கத்துக்காக எடுக்கப்படுகிறது என்பதை குறிப்பிடப்படும்படியும் ஒப்புதலை பெறவும் கூறப்பட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெறும் நிறுவனங்கள், ஆதார் சட்டத்தின் விதிகள், பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட முறையில் பயன்படுத்தவும், தரவுகளை வைத்து கொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆதாரில் ஆவணங்களை புதுப்பித்து வைத்திருப்பது, சிறந்த சேவைகள் பெற உதவுகிறது.
    • தற்போதைய அடையாளச் சான்று, முகவரிச் சான்றுடன் புதுப்பிப்பது நன்மை அளிக்கும்.

    ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பர் 9ந் தேதி அன்று அறிவிக்கப்பட்ட ஆதார் விதிமுறைகள் 2022-ன் கீழ், பொது மக்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இது வரையில் புதுப்பிக்காத ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு அதை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

    மை ஆதார் போர்ட்டல் மூலம் ஆன்லைனிலும் அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்றும் தேவையான ஆவணங்களை (அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று) பதிவேற்றுவதன் மூலம் பொது மக்கள் தங்கள் ஆதார்களைப் புதுப்பிக்கலாம்.

    மத்திய அரசின் நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் அடிப்படையிலான அடையாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    வங்கிகள், வங்கி-சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பலவேறு நிதி வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை அங்கீகரித்து, அனைத்து வகையான சேவைகளை வழங்க ஆதாரைப் பயன்படுத்துகின்றன.

    ஆதார் அட்டையை தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுடன் புதுப்பித்து வைத்திருப்பது பொது மக்களுக்கு நன்மை அளிக்கும். மேலும் சிறந்த சேவைகள் மற்றும் துல்லியமான அங்கீகாரத்தை பெறுவதற்கு உதவும்.

    எனவே பொது மக்கள் தங்களுடைய ஆதார் எண்ணை புதுப்பிக்கத் தேவையான ஆவணங்களை இணைக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் விவரம் ஒவ்வொரு கடைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
    • வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆதாருடன் இணைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்படுவதோடு குறைந்த விலையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை ஆகியவையும் வினியோகிக்கப்படுகிறது.

    2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயன் அடைந்து வருகின்றனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்கக்கூடிய நிலை உள்ளது. குடும்பத்தை சாராதவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது.

    இந்த நிலையில் ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வங்கி கணக்குடன் பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை இணைத்தனர்.

    ஒரு சிலர் இன்னும் ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் தமிழகத்தில் 18 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காமல் இருப்பதால் ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாமல் உள்ளது.

    வங்கி கணக்கு இல்லாமல் சிலர் ஆதார் இணைக்காமல் இருப்பதால் ரேஷன் கார்டும் இணையாமல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு வழங்கல் துறை மூலம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் விவரம் ஒவ்வொரு கடைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆதாருடன் இணைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதில் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை எண், குடும்ப உறுப்பினர் பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் இதுவரையில் வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்காத ரேஷன் கார்டுதாரர்களிடம் இந்த மாத இறுதிக்குள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்று சிவில் சப்ளை துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வங்கி கணக்கு தொடங்காமல் இருந்தவர்கள் தற்போது புதிதாக தொடங்கி ஆதார் எண்ணை இணைந்த விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.

    அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். ரொக்கமாக வழங்கலாமா என ஆலோசிக்கப்படுகிறது. வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது எளிதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மேலும் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு பரிசீலிக்கிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'அரசின் திட்டங்கள் மக்களுக்கு வங்கி கணக்கு மூலம் நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக வங்கி கணக்கு தொடங்காமல் ஆதார் இணைக்காமல் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொங்கல் பணம் இந்த வருடம் வங்கி கணக்கில் செலுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது' என்றனர்.

    • ஆதாரை இணைக்க வரும் பொதுமக்களை நிற்க வைக்காமல் அவர்களுக்கு உட்கார போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
    • ஆதார் புதுப்பிப்பு பணிக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது.

    இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் 'வெப்சைட்டுக்குள்' சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள். மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் 2,811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் நடந்த சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ஒருவருக்கு எத்தனை இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்.

    மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில், 1.15 கோடி மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின் வாரியத்தில் உள்ளது. இதன் பிறகு இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்திருக்கிறார்கள்.

    ஆனாலும் சில மையங்களில் 'சர்வர்' பிரச்சினை காரணமாக ஆதாரை இணைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் மக்கள் நீண்ட கியூவில் காத்திருந்து ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாரை இணைப்பது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் என்னென்ன வசதிகள் செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அவை வருமாறு:-

    * ஆதாரை இணைக்க வரும் பொதுமக்களை நிற்க வைக்காமல் அவர்களுக்கு உட்கார போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    * ஆதார் புதுப்பிப்பு பணிக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    * தேவைப்பட்டால் சாமியானா பந்தல் அமைக்க வேண்டும்.

    * ஆதார் இணைப்பை விளக்குவதற்கும், அதை செய்து கொடுப்பதற்கும் தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும்.

    * கம்ப்யூட்டரில் சர்வர் கோளாறு ஏற்பட்டாலோ மெதுவாக இயங்கினாலோ அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    * தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கம்ப்யூட்டர் தயாராக வைத்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஆதார் இணைக்கும் பணி பாதிக்கப்படக்கூடாது.

    * தேசிய விடுமுறை மற்றும் விழா நாட்களை தவிர ஞாயிறு உட்பட ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு கவுண்டர்கள் செயல்பட வேண்டும். டீ பிரேக், மதிய உணவு இடைவேளையின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

    * மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எந்த தொகையும் வசூலிக்க கூடாது. லஞ்சம் கேட்கக் கூடாது. யாராவது பணம் வாங்கியதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதை கவனிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

    * மின் வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதாரை இணைக்கும் பணி முன்னேற்றத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    * மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்களை ஒவ்வொரு அலுவலகத்திலும் பிளக்ஸ் பேனர் வைத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சுற்றறிக்கை அனைத்து பிரிவு மண்டல பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    • இது போன்ற தவறான தகவல்களை, பொதுமக்கள் மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.
    • கடன் தொடர்பான வதந்தியை நம்பி, வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்.

    புதுடெல்லி:

    ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தவறான தகவல்களையோ செய்திகளையோ மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களை மத்திய தகவல் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களது வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் போலி செய்தி பரப்பட்டதாகவும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றும் மத்திய தகவல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

    இதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் தவணை அகவிலைப்படி (டிஏ) ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசின் துணைச் செயலர் நிர்மலா தேவ் கையொப்பத்துடன் போலி யான சுற்றறிக்கை வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டதாகவும், ஆனால், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவு படுத்தி உள்ளதாகவும் மத்திய தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.

    • இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி :

    நாட்டு மக்களுக்கு ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக திகழ்கிறது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகளுக்கும், பத்திரப்பதிவு செய்யவும் ஆதார் பயன்படுகிறது.

    இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆதார் அட்டைதாரர்கள், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இதற்காக தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து, 'அப்டேட்' செய்ய வேண்டும்.

    அதன்மூலம், ஆதார் தரவுகளை சேமித்து வைக்கும் மத்திய அடையாள தரவுகள் சேமிப்பகத்தில், ஆதார் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய முடியும்.

    இந்த பணியை ஆதார் அட்டைதாரர்கள் செய்வதற்காக, 'மைஆதார்' இணையதளத்திலும், 'மைஆதார்' செயலியிலும் 'அப்டேட் டாக்குமெண்ட்' என்ற பிரிவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேர்த்துள்ளது. இதுதவிர, பக்கத்தில் உள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் சென்றும், ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

    ஆதார் எண் வழங்கிய நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை இந்த ஆவணங்களை ஆதார் அட்டைதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த மாதம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இதே கோரிக்கையை விடுத்திருந்தது. இப்போது, மத்திய அரசு, ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்து இந்த அழைப்பை விடுத்துள்ளது.

    இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்ட போதிலும், இவற்றில் எத்தனை எண்கள் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

    இதுபோல், 'பயோமெட்ரிக்' விவரங்களை புதுப்பிப்பது பற்றி மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரசவ வலியில் கஸ்தூரி துடித்தபோதிலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க டாக்டர் மறுத்ததோடு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படியும் உஷா கூறினார்.
    • கடமை தவறியதாக மருத்துவமனை டாக்டர் உஷா, அன்று பணியில் இருந்த செவிலியர்கள் யசோதா, சவிதா, வித்யாபாரதி ஆகியாரை சஸ்பெண்டு செய்து தலைமை டாக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள துமகூரு டவுன் பாரதிநகர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 30).

    தமிழகத்தை சேர்ந்த இவர் தனது 7 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் நோய்வாய்ப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அக்கம்பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு துமகூரு டவுனில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது அந்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டரான உஷா என்பவர், கஸ்தூரியிடம் தாய்-சேய் பாதுகாப்பு அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கேட்டு உள்ளனர். ஆனால் கஸ்தூரியிடம் அந்த 2 அட்டைகளும் இல்லை என்று தெரிகிறது.

    இதனால் பிரசவ வலியில் கஸ்தூரி துடித்தபோதிலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க டாக்டர் உஷா மறுத்ததோடு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படியும் கூறினார். ஆனால் கஸ்தூரியை அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கஸ்தூரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சிறிதுநேரத்தில் கஸ்தூரியும், இரட்டை ஆண் சிசுக்களுடன் பரிதாபமாக இறந்தார்.

    ஒரு சிசு முழுமையாக வெளிவந்த நிலையிலும், மற்றொரு சிசு பாதி வெளியே வந்த நிலையிலும் இருந்தது. அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு கஸ்தூரி இறந்துள்ளார்.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் துமகூரு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவ அதிகாரிகளும் விரைந்து சென்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுநாத்தும், கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    ஆதார் அட்டை இல்லை என கூறி கஸ்தூரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்து 3 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த டாக்டர் உஷா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மஞ்சுநாத்திடம், கஸ்தூரியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த சம்பவம் துமகூரு மட்டுமின்றி கர்நாடக மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கஸ்தூரியும் அவரது கணவரும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். கணவர் இறந்த பின்பு கஸ்தூரி தனது மகளுடன் பாரதிநகருக்கு இடம்பெயர்ந்தார். அங்கு சரோஜம்மா கொடுத்த சிறிய வீட்டில் வசித்து வந்தார்.

    இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கடமை தவறியதாக மருத்துவமனை டாக்டர் உஷா, அன்று பணியில் இருந்த செவிலியர்கள் யசோதா, சவிதா, வித்யாபாரதி ஆகியோரை சஸ்பெண்டு செய்து தலைமை டாக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், மாவட்ட கலெக்டர் ஒய்.எஸ்.பாட்டீல், டிஎச்ஓ டாக்டர் மஞ்சுநாத் மற்றும் பிற அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்றார். அதுமட்டுமின்றி இரவு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் கூறுகையில், இறந்த கஸ்தூரியின் முதல் பெண் குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்படும். அந்த குழந்தைக்கு 18 வயது வரை இலவச மருத்துவம், கல்வி மற்றும் தங்குமிடம் வழங்க வேண்டும் என முதல்-மந்திரியிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

    ×