search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் அட்டை"

    • வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்படும்.

    சென்னை:

    மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளார்கள். இந்த வேலை வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் முறைகேடுகளை தவிர்க்கவும் ஆதார் இணைப்பு அவசியம் என்றும் அதன் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

    வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதிகட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு மேல் கால அவகாச நீட்டிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

    கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நாளாவது வேலை பார்த்து இருந்தாலே அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களாகவே கருதப்படுவார்கள். தற்போது கொண்டு வரப் பட்ட இந்த திட்டத்தின்படி பதிவு செய்து இருந்த 25.25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.

    மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் தகுதியான காரணங்களால் பதிவு செய்ய இயலாமல் போனவர்கள் மீண்டும் சேர்க்கலாம் என்று அறிவித்துள்ளது.

    கடந்த 21 மாதத்தில் 7.6 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. வேலைக்கான அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்துவிட்டால் அது வங்கி கணக்குடன் இணைந்து இருக்கும். அத்துடன் நிதி வழங்கும் துறையுடனும் இணைக்கப்பட்டிருக்கும்.

    இதன் மூலம் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பள பட்டுவாடா செய்ய முடியும். வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்படும்.

    இன்று முதல் ஆதார் அட்டையை பணியாளர் அட்டையுடன் இணைத்திருப்பதன் அடிப்படையிலேயே சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.

    • கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
    • முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் 3-வது முறையாக வேலைவாய்ப்பு முகாம் வருகிற நவம்பர் 4-ந்தேதி சனிக்கிழமையன்று கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள் மற்றும் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சுய விலாசமிட்ட அஞ்சல் உறைகளுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வெளிநாட்டு கல்விக்காக கடன் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சம் வரம்புக்கு மேல் 0.5 சதவீத குறைந்த டி.சி.எஸ். விகிதம் விதிக்கப்படும்.
    • மத்திய அரசின் அறிவிப்பின்படி நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

    சென்னை :

    நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:-

    செப்டம்பர் 30-ந்தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு பரிந்துரையாளர் (நாமினி) ஒருவரின் பெயரை குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.

    அவ்வாறு செய்யாத பட்சத்தில் உங்கள் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுக் கணக்குகளுக்கும் இது பொருந்தும்.

    2023-24ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு டி.சி.எஸ். கட்டணங்களை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

    வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்யும் பணத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த நேரிடும். ரூ.7 லட்சத்துக்கும் குறைவான செலவினங்களுக்கு 5 சதவீதம் டி.சி.எஸ். செலுத்த வேண்டும்.

    ரூ.7 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் அக்டோபர் 1 முதல் 20 சதவீதம் டி.சி.எஸ். செலுத்தப்பட வேண்டும்.

    வெளிநாட்டு கல்விக்காக கடன் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சம் வரம்புக்கு மேல் 0.5 சதவீத குறைந்த டி.சி.எஸ். விகிதம் விதிக்கப்படும்.

    மேலும் மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகள் ஏற்படும் பட்சத்தில் டி.சி.எஸ். 5 சதவீதமாக வசூலிக்கப்படும்.

    மியூச்சுவல் பண்டுகளை போலவே டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் வாடிக்கையாளர்கள் நாமினியை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் கணக்குகளில் ஆதார் எண்ணை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மத்திய அரசின் அறிவிப்பின்படி நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் பொதுமக்கள் தங்கள் கைகளில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.

    தேசிய தலைநகர் பிராந்தியத்தில், டீசல் ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆய்வை காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் மேற்கொண்டு உள்ளது.

    தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகள் உள்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த இந்த ஆணையம், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

    மாற்றியமைக்கப்பட்ட இந்த அட்டவணை வருகிற 1-ந்தேதி முதல் கடுமையாக பின்பற்றப்படும்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துகள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு, ஆவணமாக இணைக்க வேண்டும்.

    பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல அக்டோபர் 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

    பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ சாதனங்களை கோவில் நுழைவாயிலில் உள்ள படிப்பாதை, மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்லலாம்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த சட்டம் 2023 மசோதா மக்களவை மற்றும் மேல்சபையில் நிறைவேற்றப்பட்டது.

    பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரஉள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அரசின் சேவைகளுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு, அரசுப்பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஒரே அரசு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.

    அரசு வேலைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேருவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது.

    பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் புதிய சட்டத்திருத்தம் அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலாகிறது.

    • தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.
    • முதற்கட்டமாக பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், ஆதார் பான் உள்ளிட்ட தகவல்களை அதனுடன் இணைக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

    இதற்கான வழிகாட்டுதல்களையும் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்து செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.

    முதற்கட்டமாக பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ளது.

    இதையடுத்து இப்போது பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது.

    ஏனென்றால் பட்டாவில் தற்போது இடம் பெறும் விவரங்கள் உரிமையாளர் குறித்த அடையாளத்தை உறுதி செய்ய தற்போதைய ஆவணங்களில் போதுமானதாக இல்லை.

    எனவே பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருவர் பெயரில் எத்தனை சொத்துக்கள் உள்ளது என்பதை அரசு சார்ந்த துறைகள் தெரிந்து கொள்ள இது உதவும் என்றும் நில அபகரிப்பு போன்ற மோசடிகளை தடுக்க இந்த புதிய முறை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். இதுபற்றி சர்வே தீர்வுத் துறை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது:-

    நில பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதை நோக்கமாக கொண்டு இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    தற்போதைய நிலையில் வெறும் ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளதால் ஒருவர் தன்னைத் தானே சட்டபூர்வ நில உரிமையாளராக காட்டிக் கொள்ள முடியும்.

    அதனால்தான் இதை தடுக்கும் வகையில் கணினி மயமாக்கப்பட்ட நிலப்பதிவோடு ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பத்திரப்பதிவு பரிவர்த்தனைகளை மேற் கொள்வதை உறுதி செய்ய முடியும். மாநில அரசின் இந்த முன்மொழிவுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஒப்புதல் அளித்ததையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதார் சிறப்பு முகாம் காலை 10 -மாலை 4 மணி வரை நடைபெற்றது.
    • 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    இந்திய அஞ்சல் துறை, தென்திருப்பேரை பேரூராட்சி மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நடத்திய ஆதார் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. முகாமை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தொடங்கி வைத்தார்.

    முகாமில் புதிய ஆதார் அட்டை எடுத்தல், ஆதார் அட்டை திருத்தம், ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பு, மேலும் இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவர்கள் புதிய ஆதார் அட்டை எடுக்கவும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் அமிர்த வள்ளி, கவுன்சிலர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை பொன்னுசாமி, இசக்கி, துரைராஜ், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சேக் அகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • காலக்கெடுவே ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2020ஆம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது.

    இருப்பினும், நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடு வரும் இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    அவகாசத்திற்கு இன்னும் 3 நாட்களே இருந்த நிலையில் கூடுதல் காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    காலக்கெடுவே ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் இப்பணியை கடந்த 2021ல் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவடைகிறது.

    இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் 2024, மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் தங்கள் ஆதார் தகவல்களை இலவசமான முறையில் 'மை-ஆதார்' இணையதள பக்கத்தின் மூலம் மார்ச் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
    • ஆதார் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்கள் தங்கள் ஆதார் தகவல்களை இலவசமான முறையில் 'மை-ஆதார்' இணையதள பக்கத்தின் மூலம் மார்ச் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆதார் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஆதார் இணையதள பக்கத்தின் வாயிலாக தகவல்களைப் புதுப்பிக்க ரூ.25 கட்டணமாக செலுத்தவேண்டியிருந்தது. இருப்பினும், பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்வதற்கு வழக்கத்தில் உள்ள கட்டணம் பொருந்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளிநாட்டில் வசிப்பவர்கள் சிலர் இங்குள்ள வீடுகளுக்கு இன்னும் ஆதாரை இணைக்காமல் உள்ளனர்.
    • பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் ஆதாரை இணைக்க அனுமதிப்பதில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் பெறும் வீடுகள், குடிசை வீடுகள், விவசாயம், விசைத்தறி மின் இணைப்புகளை சேர்த்து மொத்தம் 2 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன.

    அனைத்து மின் இணைப்புகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க கடந்த 4 மாதங்களாக மின் வாரியம் சிறப்பு முகாம்கள் நடத்தியது.

    ஆரம்பத்தில் ஆதார் எண்ணை இணைக்க பலர் தயக்கம் காட்டி வந்தனர். ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டதால் பலர் ஆதார் இணைக்க முன்வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதத்துடன் ஆதாரை இணைக்கும் கால அவகாசம் முடிந்தது என்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் 2 கோடியே 60 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். 67 ஆயிரம் பேர் ஆதாரை இணைக்காமல் உள்ளனர். இவர்களது வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் இப்போது நேரில் சென்று இவர்களும் ஆதாரை இணைப்பதற்கு வசதியாக இணையதள சேவைகள் இன்னும் திறந்துள்ளன. கால அவகாசம் முடிந்திருந்தாலும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் இன்னும் ஆதாரை இணைக்கும் பணி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது:-

    வெளிநாட்டில் வசிப்பவர்கள் சிலர் இங்குள்ள வீடுகளுக்கு இன்னும் ஆதாரை இணைக்காமல் உள்ளனர். அந்த வீடுகளில் வசிப்பவர்களிடம் ஆதாரை இணைக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம்.

    சில பகுதிகளில் தாத்தா, அப்பா பெயரில் மின் இணைப்பு இருந்து அவர்கள் இறந்துவிட்ட பிறகு சொத்துக்கள் பிரிக்கப்படாத நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதில் வாரிசுகளிடையே பிரச்சினை உள்ளதால் அந்த வீடுகளிலும் ஆதாரை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

    அது மட்டுமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ள வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க அனுமதிப்பதில்லை.

    இதுபோன்ற காரணங்களால் ஆதார் எண்களை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

    எனவே அந்தந்த வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் ஆதார் எண்களையும் இணைக்க வழிவகை உள்ளது.

    ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே என்று எடுத்து சொல்லி வருகிறோம்.

    ஆனாலும் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் ஆதாரை இணைக்க அனுமதிப்பதில்லை. அதற்கு பதில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் ஆதாரை இணைத்து வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோவில்கள் கட்டப்பட்ட திட்டம்.
    • நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி கூறியிருப்பதாவது:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்காக முன் பதிவு செய்யும் பக்தர்கள், இனி ஆதார் அட்டை மூலம் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும் என திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மூவாயிரம் கோயில்கள் வரை கட்டும் பணி திட்டமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆந்திர மாநில அறநிலையத்துறை, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் அரசியல் சார்பற்ற இந்து தர்ம பிரச்சார குழு ஏற்பாட்டில் இந்த கோவில் கட்டும் பணிகள் நடைபெறுவதாக ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி கூறியது குறிப்பிடத்தக்கது.

    • ஆதார் அட்டையில் வயதை மாற்றக்கோரி 4 ஆண்டுகளாக அலைந்து வருகிறேன்.
    • எந்த ஒரு நலத்திட்டமோ, வங்கியில் கடனுதவியோ எதுவும் வாங்கமுடியவில்லை.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி தாயனூரை சேர்ந்த சீனிவாசனின் மனைவி கவிதா (வயது 41) ஒரு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது வாக்காளர் அடையாள அட்டையில் 3.5.1982 என்று பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ரேஷன் கார்டில் 41 வயது என்று உள்ளது. ஆனால் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் 1900 என்று ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டையின்படி எனக்கு 123 வயது. தற்போது ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்து ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதிலும் எனது வயது மாறுகிறது.

    ஆதார் அட்டையில் வயதை மாற்றக்கோரி 4 ஆண்டுகளாக அலைந்து வருகிறேன். ஆனால் மாற்ற முடியவில்லை. இதனால் பல இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். எந்த ஒரு நலத்திட்டமோ, வங்கியில் கடனுதவியோ எதுவும் வாங்கமுடியவில்லை.

    இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் நிலவி வருகிறது. எனவே, எனது வயதை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    • இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் நேற்று வரை 98.05 சதவிகிதம் பேர் ஆதாருடன் இணைத்துள்ளனர்.
    • மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இருந்தாலும் மின் கட்டணம் செலுத்துவதில் எவ்வித சிரமும் ஏற்படாது என்று மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணி நவம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் இருந்து மின் அலுவலகங்களில் நேரடியாக இணைக்கும் பணி நடந்தது. 100 சதவிகிதம் இணைக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கோடு நடைபெற்று வரும் இந்த பணி வருகிற 28-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் நேற்று வரை 98.05 சதவிகிதம் பேர் ஆதாருடன் இணைத்துள்ளனர். இன்னும் 1.5 சதவீதம் பேர் மட்டுமே இணைக்க வேண்டும். அதாவது 2 லட்சத்து 95 ஆயிரம் பேர் இணைக்க வேண்டியுள்ளது. 3 நாட்களில் இந்த பணி நிறைவடையும். அதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இருந்தாலும் மின் கட்டணம் செலுத்துவதில் எவ்வித சிரமும் ஏற்படாது என்று அவர் கூறினார்.

    ×