search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆதார் எண் இணைக்காவிட்டால் 15-ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆதார் எண் இணைக்காவிட்டால் 15-ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது

    • பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பலனாக இன்று வரை 2 கோடியே 64 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு உள்ளதால் அதற்குள் ஆதார் எண்ணை இணைக்குமாறு விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதியே மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்சார வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆதார் எண்களை இணைத்து கொடுத்து வருகின்றனர்.

    சுமார் 3 கோடி மின் இணைப்பு உள்ள நிலையில் வீடுகளுக்கான மின் இணைப்புகள் மட்டும் 2 கோடியே 33 லட்சம் மின் இணைப்புகள் இருக்கிறது. இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள் 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளது.

    இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கும், விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    டிசம்பர் 31-ந்தேதி வரை ஆதாரை இணைக்க ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில் 65 சதவீதம் பேர் தான் அந்த சமயத்தில் ஆதாரை இணைத்திருந்தனர். இதனால் ஜனவரி 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அப்படி இருந்தும் 2 கோடியே 47 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்ததால் வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பலனாக இன்று வரை 2 கோடியே 64 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

    வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு உள்ளதால் அதற்குள் ஆதார் எண்ணை இணைக்குமாறு விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது.

    இதுபற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், 3 கட்டமாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதால் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். இன்னும் 15-ந்தேதி வரை அவகாசம் உள்ளதால் அனைவரும் இணைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    எனவே இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என்று தெரிவித்தார். ஆதாரை இணைக்காவிட்டால் 15-ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆதாரை இணைக்காதவர்களின் வீடுகளை கண்டறிந்து மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்றும் நினைவுப்படுத்தி ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×