search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல்வார்"

    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறையையே மிரட்டி வருகின்றனர் என குற்றம் சாட்டினார். #RajasthanAsemblyElections #BJP #PMModi #Congress
    அல்வார்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தர ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 7ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. அவர்கள் மரியாதை என்பதையே மறந்துவிட்டனர். பின்தங்கிய சமுதாயத்தினரை காங்கிரஸ் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வந்தது. டாக்டர் அம்பேத்கருக்கு அக்கட்சி பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கவில்லை.



    காங்கிரஸ் நீதித்துறையை அரசியலில் இழுக்கிறது. நீதித்துறைக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அக்கட்சி தலைவர் ஒருவர், 2019 தேர்தல் வருவதால், அயோத்தி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்கிறார். அந்த கோரிக்கை நீதிபதி ஏற்காதபோது, கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என நீதித்துறையை மிரட்டுகின்றனர். எந்த பயமும் இல்லாமல், நீதியின் பாதையில் நடக்க வேண்டும் என நீதித்துறையை கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார். #RajasthanAsemblyElections #BJP #PMModi #Congress
    ×