search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யப்பன்"

    • மதிய பூஜைக்கு பொதுவாக இடித்து பிழிந்த பாயாசமே நைவேத்தியம்.
    • உதயாஸ்தமன பூஜை வேளையில் நண்பகலுக்கு முன்பு 15 பூஜைகள் நடைபெறும்.

    அதிகாலை பூஜைக்கு அஷ்டாபிஷேகம், விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர்,தூய நீர்

    போன்ற எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்து திருமதுரம்

    (பழம் மற்றும் தேன், சர்க்கரை சேர்த்த கலவை) நைவேத்தியம் செய்வர்.

    பிற்பாடு நெய் அபிஷேகம்.

    மதிய பூஜைக்கு பொதுவாக இடித்து பிழிந்த பாயாசமே நைவேத்தியம்.

    (இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுவது. மகா நைவேத்தியம் எனப்படும்.)

    உதயாஸ்தமன பூஜை வேளையில் நண்பகலுக்கு முன்பு 15 பூஜைகள் நடைபெறும்.

    அவை அனைத்திலுமே இடித்துப் பிழிந்த பாயாசமே நைவேத்தியமாகப் படைக்கப்படும்.

    இருபத்தியைந்து கலசங்களுடன் மதிய பூஜை நடைபெறும்.

    • நெற்றியில் பொட்டு வைக்குமிடத்தில் பிட்யூட்டரி எனும் சுரப்பி உள்ளது.
    • இது ஆன்மா இருக்குமிடம் என்று கருதுவதால் இதை மனோன்மணி என்று அழைக்கிறார்கள்.

    அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்தவுடன் புருவமத்தியில் சந்தனத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

    சந்தனத்தை நெற்றியில் பார்த்ததுமே இவர் மாலை அணிந்த சாமி என்று மற்ற அய்யப்ப சாமிகள் தெரிந்து கொள்வார்கள்.

    நெற்றியில் பொட்டு வைக்குமிடத்தில் பிட்யூட்டரி எனும் சுரப்பி உள்ளது.

    பீனியல் சுரப்பி நெற்றிக் கண்ணைப் போலவே செயல்படுகிறது.

    அதன் அமைப்பும் ஒரு கண்ணைப் போன்றே இருக்கும்.

    இது உடலையும், உள்ளத்தையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது.

    வெளிப்புறம் நடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்ளக்கூடியது இச்சுரப்பி.

    இது ஆன்மா இருக்குமிடம் என்று கருதுவதால் இதை மனோன்மணி என்று அழைக்கிறார்கள்.

    இது சிறப்பாக இயங்கினால் ஞானதிருஷ்டி சித்திக்கும். இதை குண்டலினி யோகம் மூலம் தான் தூண்ட முடியும்.

    • பந்தள ராஜா அய்யப்பா - பம்பா வாசா அய்யப்பா
    • சாமி பாதம் ஐயன் பாதம் - ஐயன் பாதம் சாமி பாதம்

    சுவாமியே அய்யப்போ- அய்யப்போ சுவாமியே

    பகவானே பகவதியே- பகவதியே பகவானே

    தேவனே தேவியே- தேவியே தேவனே

    வில்லாளி வீரனே- வீரமணிகண்டனே

    வீரமணிகண்டனே- வில்லாளி வீரனே

    பகவான் சரணம்- பகவதி சரணம்

    பகவதி சரணம்- பகவான் சரணம்

    தேவன் சரணம்- தேவி சரணம்

    தேவி சரணம்- தேவன் சரணம்

    பள்ளிக்கட்டு சபரிமலைக்கு- சபரிமலைக்கு பள்ளிக்கட்டு

    பாத பலம்தா- தேக பலம்தா

    தேக பலம்தா- பாத பலம்தா

    கல்லும் முள்ளும்- காலுக்கு மெத்தை

    காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்

    குண்டும் குழியும்- கண்ணுக்கு வெளிச்சம்

    கண்ணுக்கு வெளிச்சம்- குண்டும் குழியும்

    தாங்கி விடப்பா- ஏந்தி விடப்பா

    ஏந்தி விடப்பா- தாங்கி விடப்பா

    தூக்கி விடப்பா- ஏற்றம் கடினம்

    ஏற்றம் கடினம்- தூக்கி விடப்பா

    சாமி பாதம் ஐயன் பாதம்- ஐயன் பாதம் சாமி பாதம்

    யாரைக்காண- சாமியை காண

    சாமியை கண்டால்- மோட்சம் கிட்டும்

    கற்பூர ஜோதி- சுவாமிக்கே

    நெய் அபிஷேகம்- சுவாமிக்கே

    பன்னீர் அபிஷேகம்- சுவாமிக்கே

    முத்திரைத் தேங்காய்- சுவாமிக்கே

    காணிப்பொன்னும் சாமிக்கே- வெற்றிலை அடக்கம் சாமிக்கே

    கதலிப்பழம் சாமிக்கே- விபூதி அபிஷேகம் சாமிக்கே

    கட்டுக்கட்டு- இருமுடிக்கட்டு

    யாரோட கட்டு- சாமியோட கட்டு

    சாமிமாரே- அய்யப்பமாரே

    அய்யப்பமாரே- சாமிமாரே

    பம்பா வாசா- பந்தள ராஜா

    பந்தள ராஜா- பம்பா வாசா

    சாமி அப்பா அய்யப்பா- சரணம் அப்பா அய்யப்பா

    வாரோம் அப்பா அய்யப்பா- வந்தோம் அப்பா அய்யப்பா

    பந்தள ராஜா அய்யப்பா- பம்பா வாசா அய்யப்பா

    கரிமலை வாசா அய்யப்பா- கலியுக வரதா அய்யப்பா

    • ஓம் அலங்காரப் பிரியனே சரணம் அய்யப்பா
    • ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் அய்யப்பா

    1. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் அய்யப்பா

    2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் அய்யப்பா

    3. ஓம் அரிஹர சுதனே சரணம் அய்யப்பா

    4. ஓம் அன்னதான பிரபுவே சரணம் அய்யப்பா

    5. ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் அய்யப்பா

    6. ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் அய்யப்பா

    7. ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் அய்யப்பா

    8. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் அய்யப்பா

    9. ஓம் ஈசனின் திருமகனே சரணம் அய்யப்பா

    10. ஓம் ஈடில்லாத தெய்வமே சரணம் அய்யப்பா

    11. ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் அய்யப்பா

    12. ஓம் உலகாளும் காவலனே சரணம் அய்யப்பா

    13. ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் அய்யப்பா

    14. ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் அய்யப்பா

    15. ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் அய்யப்பா

    16. ஓம் ஏழைப்பங்காளனே சரணம் அய்யப்பா

    17. ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் அய்யப்பா

    18. ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் அய்யப்பா

    19. ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் அய்யப்பா

    20. ஓம் ஒப்பில்லாத திருமணியே சரணம் அய்யப்பா

    21. ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் அய்யப்பா

    22. ஓம் ஓங்கார பரம்பொருளே சரணம் அய்யப்பா

    23. ஓம் ஒதும் மறைபொருளே சரணம் அய்யப்பா

    24. ஓம் ஒளதடங்கள் அருள்பவனே சரணம் அய்யப்பா

    25. ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் அய்யப்பா

    26. ஓம் கலியுக வரதனே சரணம் அய்யப்பா

    27. ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் அய்யப்பா

    28. ஓம் சிவன் மால் திருமகனே சரணம் அய்யப்பா

    29. ஓம் சிவ வைணவ ஐக்கியமே சரணம் அய்யப்பா

    30. ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் அய்யப்பா

    31. ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் அய்யப்பா

    32. ஓம் குளத்துப்புழை பாலகனே சரணம் அய்யப்பா

    33. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் அய்யப்பா

    34. ஓம் வில்லாளி வீரனே சரணம் அய்யப்பா

    35. ஓம் வீரமணி கண்டனே சரணம் அய்யப்பா

    36. ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் அய்யப்பா

    37. ஓம் உத்தமனே சத்தியனே சரணம் அய்யப்பா

    38. ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் அய்யப்பா

    39. ஓம் பந்தள மாமணியே சரணம் அய்யப்பா

    40. ஓம் சகலகலை வல்லோனே சரணம் அய்யப்பா

    41. ஓம் சாந்தம் நிறைமெய்ப்பொருள் சரணம் அய்யப்பா

    42. ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் அய்யப்பா

    43. ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் அய்யப்பா

    44. ஓம் புலிப்பால் கொணர்ந்தவனே சரணம் அய்யப்பா

    45. ஓம் வன்புலியின் வாகனனே சரணம் அய்யப்பா

    46. ஓம் தாயின் நோய் தீர்ப்பவனே சரணம் அய்யப்பா

    47. ஓம் குருவின் குருவே சரணம் அய்யப்பா

    48. ஓம் வாபரின் தோழனே சரணம் அய்யப்பா

    49. ஓம் துளசிமணி மார்பனே சரணம் அய்யப்பா

    50. ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் அய்யப்பா

    51. ஓம் இருமுடிப்பிரியனே சரணம் அய்யப்பா

    52. ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் அய்யப்பா

    53. ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் அய்யப்பா

    54. ஓம் நீல வஸ்திரதாரியே சரணம் அய்யப்பா

    55. ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் அய்யப்பா

    56. ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் அய்யப்பா

    57. ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் அய்யப்பா

    58. ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் அய்யப்பா

    59. ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் அய்யப்பா

    60. ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் அய்யப்பா

    61. ஓம் காளைகட்டி நிலையமே சரணம் அய்யப்பா

    62 ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் அய்யப்பா

    63. ஓம் அழுதை மலை ஏற்றமே சரணம் அய்யப்பா

    64. ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் அய்யப்பா

    65. ஓம் கல்லிடும் குன்றே சரணம் அய்யப்பா

    66. ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் அய்யப்பா

    67. ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் அய்யப்பா

    68. ஓம் கரியிலந்தோடே சரணம் அய்யப்பா

    69. ஓம் கரிமலை ஏற்றமே சரணம் அய்யப்பா

    70. ஓம் கரிமலை இறக்கமே சரணம் அய்யப்பா

    71. ஓம் பெரியானை வட்டமே சரணம் அய்யப்பா

    72. ஓம் சிறியானை வட்டமே சரணம் அய்யப்பா

    73. ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் அய்யப்பா

    74. ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் அய்யப்பா

    75. ஓம் திருவேணி சங்கமே சரணம் அய்யப்பா

    76. ஓம் திரு இராமர் பாதமே சரணம் அய்யப்பா

    77. ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் அய்யப்பா

    78. ஓம் சபரிக்கு அருள்செய்தவனே சரணம் அய்யப்பா

    79. ஓம் தீபஜோதி திருஒளியே சரணம் அய்யப்பா

    80. ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் அய்யப்பா

    81. ஓம் பம்பா விளக்கே சரணம் அய்யப்பா

    82. ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் அய்யப்பா

    83. ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் அய்யப்பா

    84. ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் அய்யப்பா

    85. ஓம் நீலமலை ஏற்றமே சரணம் அய்யப்பா

    86. ஓம் நிறையுள்ளம் தருபவனே சரணம் அய்யப்பா

    87. ஓம் அப்பாச்சி மேடே சரணம் அய்யப்பா

    88. ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் அய்யப்பா

    89. ஓம் சபரி பீடமே சரணம் அய்யப்பா

    90. ஓம் சரங்குத்தி ஆலே சரணம் அய்யப்பா

    91. ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் அய்யப்பா

    92. ஓம் கருப்பண்ண சாமியே சரணம் அய்யப்பா

    93. ஓம் கடுத்த சாமியே சரணம் அய்யப்பா

    94. ஓம் பதினெட்டாம் படியே சரணம் அய்யப்பா

    95. ஓம் பகவானின் சன்னதியே சரணம் அய்யப்பா

    96. ஓம் பரவசப் பேருணர்வே சரணம் அய்யப்பா

    97. ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் அய்யப்பா

    98. ஓம் கற்பூரப் பிரியனே சரணம் அய்யப்பா

    99. ஓம் நாகராஜப் பிரபுவே சரணம் அய்யப்பா

    100. ஓம் மாளிகை புறத்தம்மனே சரணம் அய்யப்பா

    101. ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் அய்யப்பா

    102. ஓம் அக்கினிக் குண்டமே சரணம் அய்யப்பா

    103. ஓம் அலங்காரப் பிரியனே சரணம் அய்யப்பா

    104. ஓம் பஸ்மக் குளமே சரணம் அய்யப்பா

    105. ஓம் சற்குரு நாதனே சரணம் அய்யப்பா

    106. ஓம் மகர ஜோதியே சரணம் அய்யப்பா

    107. ஓம் ஜோதி சொரூபனே சரணம் அய்யப்பா

    108. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் அய்யப்பா

    • உளமார்ந்த பக்தியைத்தான் அய்யப்பன் விரும்புவார். கன்னி பூஜை நடத்துவது கட்டாயம் இல்லை.
    • வசதி இல்லாதவர்கள் கடன் வாங்கி செய்வதை அய்யப்பன் விரும்ப மாட்டார்.

    கன்னி பூஜை என்பது முதல் வருடம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்

    தனது விரத காலத்தில் குருசாமிக்கு சவுகரியமான ஒரு நாளில் தனது வீட்டில் நடத்தும் பூஜையும்

    அதைத் தொடர்ந்து அய்யப்பன்மார்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கும் விருந்தும் ஆகும்.

    இந்தப் பூஜையை கன்னி அய்யப்பனின் வசதி வாய்ப்புக்குத் தகுந்தாற்போல் (இடவசதி, பண வசதிக்கு)

    ஏற்றாற்போல் செய்தால் போதும். வசதி இல்லாதவர்கள் கடன் வாங்கி செய்வதை அய்யப்பன் விரும்ப மாட்டார்.

    உளமார்ந்த பக்தியைத்தான் அய்யப்பன் விரும்புவார்.

    கன்னி பூஜை நடத்துவது கட்டாயம் இல்லை.

    பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் தனது பக்தன் உண்மையான பக்தியுடன் ஒரு இலை (துளசி),

    ஒரு பழம், ஒரு பூ இதை தனக்குப் படைத்தால் கூட, தான் பூரண மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.

    • ஒவ்வொரு குருசாமியும், கன்னிசாமிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய தகவல் இது.
    • அதன்படியே அவர் எய்த அம்பு விழுந்த இடம் தான் அந்த அரச மரம்.

    ஒவ்வொரு குருசாமியும், கன்னிசாமிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய தகவல் இது.

    சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க 18 படிகள் ஏறுவதற்கு முன்பு அங்கே ஒரு அக்னி குண்டம் இருக்கும்.

    அங்குதான் தேங்காய்களை போடுவார்கள். அதன் அருகில் ஓர் அரச மரம் இருக்கிறது. அது விசேஷமானது.

    அய்யப்பன் மகிஷியை வதம் செய்த பின்னர்தான் அவருடைய அவதார காரணம் பூர்த்தியானது.

    அதன் பின்னர் சபரிமலையில் தவம் இருப்பதற்காக அங்கிருந்து ஓர் அம்பை எய்ததாகவும், அது எந்த இடத்தில் விழுகிறதோ

    அங்கு தனக்கு கோவில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார் அய்யப்பன்.

    அதன்படியே அவர் எய்த அம்பு விழுந்த இடம்தான் அந்த அரச மரம்.

    எனவே அந்த மரத்தின் முன்னால் நின்று நாம் வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக அய்யப்பன் அருளால் நிறைவேறும்.

    • ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!
    • ரட்ச ரட்ச மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம

    அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து இரட்சித்து அருள வேண்டும்.

    ஓம் சத்தியமான பதினெட்டாம்படி மேல்

    வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன்

    அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!

    காசி, இராமேஸ்வரம், பாண்டி, மலையாளம்

    அடக்கியாளும், ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன்

    ஐயன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!

    பூதநாத சதானந்த சர்வ பூத தயாபரா

    ரட்ச ரட்ச மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

    சுவாமியே சரணம் அய்யப்பா!

    • தீபத்தை சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை.
    • கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம்.

    தீபத்தை சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை.

    இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.

    கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம்.

    அவை எந்தெந்த இடங்கள், அந்த இடங்களில் தீபம் ஏற்றுவதால் என்னென்ன பலன்கள் என்பது குறித்து விரிவாக அறிவோம்.

    கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்

    திண்ணைகளில்: நான்கு விளக்குகள்

    மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்

    நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்

    நடைகளில்: இரண்டு விளக்குகள்

    முற்றத்தில்: நான்கு விளக்குகள்

    இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால் நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்.

    தீய சக்திகள் விலகியோடும்.

    பூஜைஅறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.

    சமையல் அறையில்: ஒரு விளக்கு அன்ன தோஷம் ஏற்படாது.

    தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

    பின்கட்டு பகுதியில்: நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.

    ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில் மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது.

    ஆகையால் வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.

    தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால் தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம்.

    • அய்யன் அய்யப்பன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டியபடி அருள்கிறார்.
    • அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார்.

    அய்யன் அய்யப்பன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டியபடி அருள்கிறார்.

    நம்மில் பலரும் சுவாமி சின்முத்திரையை தமது கால் மூட்டின் மீது வைத்திருப்பதாக நினைக்கிறார்கள்.

    அப்படியல்ல, அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார்.

    இது நம்மை இந்த அண்ட சராசரத்துடன் தொடர்புகொள்ள வழி நடத்தும்.

    சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் என மூன்று நிமிர்ந்த விரல்களும் அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை குறிக்கும்.

    ஆள்காட்டி விரல் ஆத்மாவை குறிக்கிறது.

    (நாம்&ஜீவாத்மா) கட்டைவிரல் பரமாத்மாவை குறிக்கும் இந்த இரண்டு விரல்களின் இணைப்பு அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை அகற்றி ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையவேண்டும் என்பதைக் குறிக்கும்.

    இந்த சின்முத்திரைக்கு இன்னும் நிறைய விளக்கங்கள் உள்ளன. நான் ஒன்றை மட்டும்தான் விளக்கியிருக்கிறேன்.

    • பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது.
    • அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையை துவங்குவர்.

    பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது.

    அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையை துவங்குவர்.

    இதன்படி ஒருவர் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து

    பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும்.

    இதன்படி செய்ய அவர் கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையிட்டால் தான்

    மகர ஜோதி தரிசனத்துக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.

    இதனால்தான் விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தனர்.

    • மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலி, முத்தாயம்பகையம் நடக்கிறது
    • கோவை ஸ்ரீ அய்யப்பசேவா சங்க செயலாளர் கே.விஜயகுமார் அறிவிப்பு

    கோவை,

    கோவை சித்தாபுதூர் அய்யப்ப சாமி பொற்கோவிலில் மண்டல பூஜை விழா வருகிற 17 -ந் தேதி (வெள்ளிக்கிழமை)தொடங்குகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிய வருவது வழக்கம்.

    அய்யப்பசாமி மண்டல பூஜை விழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் 12-ந்தேதி செவ்வாய்க்கிழமை வரை ஆலய தந்திரி பிரம்மஸ்ரீ சிவபிரசாத் நம்பூதிரி தலைமையில் புகழ்பெற்ற தாந்திரீக ஆச்சாரியார்கள் முன்னிலையில் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு காரிய சித்திக்கான சிறப்பு அர்ச்சனைகள், சனிதோஷ சாந்திஜெபம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 13-ந்தேதி அய்யப்பசாமிக்கு களபாபிஷேகம் நடைபெறும்.

    மண்டல பூஜை விழாவை முன்னிட்டு 16 -ந்தேதி சனிக்கிழமை அகண்டநாம பஜனையும், 17 -ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது.27-ந்தேதி புதன்கிழமை மகாகணபதி ஹோமம், மண்டல விளக்கு பூஜை நடக்கிறது. அன்றையதினம் மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

    மேலும் இருமுடி கட்டி சபரிமலை பயணம் செல்ல வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அய்யப்ப சேவாசங்கம் செய்து வருகிறது.ஜனவரி 15-ந்தேதி திங்கட்கிழமை மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலியும், மாலையில் மகா தீபாராதனை, முத்தாயம்பகையும் நடைபெறும்.

    இந்த தகவலை கோவை ஸ்ரீ அய்யப்பசேவா சங்க செயலாளர் கே.விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.

    • மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம்.
    • நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது.

    நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் தோன்றிய மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம். மயிலையில் நீங்கள் எந்ததெருவுக்குள் சென்றாலும் நிச்சயம் ஏதாவது ஒரு ஆலயத்தை காண்பீர்கள்.

    இந்த சிறப்பின் ஒரு அம்சமாக மயிலையில் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் இருந்து மிக, மிக எளிதாக இந்த ஆலயத்தை சென்று அடையலாம்.

    லஸ்சில் இருந்து சாந்தோம் செல்லும் அந்த சாலையில் சென்றால் இடதுபுறம் பெரிய ஆர்ச் நம்மை வரவேற்கும். அந்த வழியில் சென்றால் அது கோவில் அருகில் நம்மை கொண்டு போய் சேர்த்துவிடும்.

    முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிக, மிக சிறிய கோவில். கிழக்குதிசை நோக்கிய இத்தலத்தில் பெரிய பெரிய பிரகாரங்களோ, பிரமாண்ட கோபுரங்களோ, விமானங்களோ இல்லை. சாலையோரத்தில் உள்ள இத்தலத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. அந்த கோபுரத்தில் மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரியின் சுதை வடிவங்கள் எழில்மிகு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

    கோபுர தரிசனம் செய்து விட்டு உள்ளே நுழைந்தால் இடது பக்கம் 2 பெரிய அரச மரங்கள் நிற்பதை காணலாம். அதன் கீழ் விநாயகரும், நாகர் சிலைகளும் உள்ளன.

    விநாயகரை வணங்கி முண்டகக்கண்ணியம்மனை வழிபட செல்லலாம். அம்மன் ஓலைக்குடிசையில் இருக்கிறாள். அவளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த மகாமண்டபத்தில் வரிசையில் நின்று முண்டகக்கண்ணி தாயை பொறுமையாக, கண்குளிர கண்டு நன்றாக தரிசனம் செய்யலாம். காலையில் சென்றால் அபிஷேகத்தையும் மாலையில் சென்றால் அலங்காரத்தையும் பார்க்கலாம்.

    வேப்பிலை பாவாடை உடுத்தி, வெள்ளி கைபொருத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மனை தரிசிக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். அவள் தரும் பிரசாதமே அம்மை நோய், விஷக்கடி, பில்லி, சூனியம், கடும் காய்ச்சல் போன்றவற்றுக்கு மருந்தாக உள்ளது.

    முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்ட பிறகு பிரகாரத்தை சுற்றி வரலாம். ஒரே ஒரு பிரகாரம் தான். பிரகாரத்தை சுற்றத் தொடங்கியதும் அருகில் தனி அறை போல உள்ள அமைப்பினுள் சில சன்னதிகள் இருப்பதை காணலாம்.

    ஞானஜோதி நர்த்தன விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், அன்னபூரணி, அய்யப்பன், வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி, ஆஞ்சநேயர், வள்ளலார் தனி தனி சன்னதிகளில் உள்ளனர். அந்த அறையின் ஒரு பகுதி சுவரில் சித்த புருஷர்களும், மகான்களும் படங்களில் உள்ளனர்.

    இதையடுத்து வெளியில் வந்து மீண்டும் பிரகாரத்தை தொடர்ந்தால், முண்டகக்கண்ணி அம்மன் கருவறையின் பின்பகுதி வரும். அங்கு தான் ஆதியில் அம்மன் தோன்றிய அரச மரம் உள்ளது. அதனுள் தான் நாகம் குடிகொண்டுள்ள புற்று உள்ளது.

    இந்த புற்று பகுதிக்கு பெண்கள் அதிக அளவில் முட்டைகளை சமர்ப்பித்து பால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    அருகிலேயே நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது. அங்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். இந்த பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டால் அம்மனின் அருள்பார்வை கிட்டும் என்று பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. எனவே இந்த இடத்தில் பொங்கல் வைக்க பெண்கள் போட்டி போடுவது உண்டு. இந்த பகுதியை பொங்கல் மண்டபம் என்று அழைக்கிறார்கள்.

    இதையடுத்து அம்மனின் இடதுபுற பக்கவாட்டில் தனி சன்னதியில் உற்சவர் அம்மன் இருப்பதை காணலாம். சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் உள்ளாள்.

    ஆலய கிணறு, மடப்பள்ளியை கடந்து சென்றால் தான் உற்சவரை கண்டு வழிபட முடியும். உற்சவர் சன்னதி இடதுபுறம் சப்த கன்னியர்கள் உள்ளனர். அந்த சன்னதி அமைப்பின் இருபுறமும் ஜமத்கனி முனிவரும் அவரது மகன் பரசுராமரும் உள்ளனர்.

    இவர்களை வழிபட்டால் அத்துடன் வழிபாடு முடிந்தது. அந்த அளவுக்கு இந்த ஆலயம் மிக சிறிய ஆலயமாக உள்ளது. முண்டகக்கண்ணி அம்மன், நாகர் இருவரையும் தான் மக்கள் அதிகமாக வழிபடுகிறார்கள்.

    வழிபாடுகள் முடிந்ததும் ஆலயத்தின் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமரலாம். பிறகு மற்றொரு வாயில் வழியாக வெளியேறலாம். மயிலை பக்கம் போகும் போது அவசியம் முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு அருள் பெறுங்கள்.

    ×