search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்பாசி"

    பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் யார்?” என்ற கேள்விக்கு முன்னாள் பிரதமர் அப்பாசி நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப் என பதில் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் 25-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தலுக்கு முந்தைய வன்முறை சம்பவங்கள் அங்கு நடந்து வருகின்றன. 172 இடங்களில் வெற்றி பெறுகிற கட்சி, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும்.

    தற்போது நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகள் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.



    கருத்துக்கணிப்புகளில் நவாஸ் ஷெரீப் கட்சி முந்துகிறது.

    இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், ‘பனாமா கேட்’ ஊழலில் பதவி இழந்தபோது பிரதமர் பதவிக்கு வந்த அப்பாசியிடம், ‘தி டான்’ நாளேடு தரப்பில் சிறப்பு பேட்டி கண்டனர். அப்போது “பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “ஷாபாஸ் ஷெரீப் தான் (இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி) அடுத்த பிரதமர். இருப்பினும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பிரதமர் யார் என்கிற விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி இறுதி முடிவு எடுப்போம்” என பதில் அளித்தார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, “நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோருக்கு எதிரான வழக்கில் இதுவரை இல்லாத வகையில் ஒருதலைப்பட்சமாக வழக்கு விசாரணை நடைபெற்றது” என்றும் அவர் சாடினார்.

    முன்னாள் உள்துறை மந்திரி சவுத்ரி நிசாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காதது பற்றிய கேள்விக்கு அப்பாசி பதில் அளிக்கையில், “அவர் டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. ஒவ்வொருவரும், ஏன் நவாஸ் ஷெரீப், ஷாபாஸ் ஷெரீப், மரியம் நவாஸ் உள்ளிட்டவர்களே டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தனர்” என்று கூறினார்.  #tamilnews 
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. #Abbasi #Pakistan
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. அவர் மீது தேர்தல் தீர்ப்பாயம் பிறப்பித்த தடை ரத்து செய்யப்பட்டது.

    பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிற பாகிஸ்தானில் வரும் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி என 3 கட்சிகள் இடையேயும் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரத்தில் அனல் வீசுகிறது.

    இந்த நிலையில், ராவல்பிண்டி-1 (என்.ஏ. 57) தொகுதியில் போட்டியிட முன்னாள் பிரதமர் அப்பாசி (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ்) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    ஆனால் அவர் நேர்மையானவர் அல்ல, மதிநுட்பம் மிகுந்தவர் அல்ல என்று கூறி வாழ்நாள் தடை விதித்து, அவர் ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதித்து பஞ்சாப் மாகாண தேர்தல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பாசி, லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டின் மீது நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வி தலைமையில் 2 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணை நடந்தது.

    இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொகுதி தேர்தல் அதிகாரி தனது பதில் மனுவை நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வியிடம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் விசாரணையின்போது, அப்பாசி சார்பில் ஆஜரான வக்கீல், “வேட்பு மனுவில் கேட்கப்பட்டு உள்ள எல்லா கேள்விகளுக்கும் அப்பாசி பதில் அளித்து உள்ளார். அப்படி இருந்தும், சட்டத்துக்கு முரணாக அவருக்கு எதிராக இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் அவர் தந்து உள்ளார்” என்று கூறினார்.

    மேலும், “தேர்தல் தீர்ப்பாயம் தனது வரம்பை மீறி உள்ளது, ஒன்று வேட்பு மனுவை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். அதற்குத்தான் தேர்தல் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இருக்கிறது. வாழ்நாள் தடை விதிக்க அதிகாரம் இல்லை” என்றும் அவர் வாதிட்டார். முடிவில் பஞ்சாப் தேர்தல் தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து, அப்பாசி ராவல்பிண்டி-1 தொகுதியில் இருந்து போட்டியிட அனுமதி அளித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    இதே போன்று இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் ஜீலம் (என்.ஏ. 67) தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த பவாத் சவுத்ரிக்கும் பஞ்சாப் தேர்தல் தீர்ப்பாயம் வாழ்நாள் தடை விதித்து இருந்தது. அவரும் லாகூர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கும் நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வி தலைமையில் 2 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

    இரு தரப்பு வாதத்துக்கு பின்னர் அவர் மீதான வாழ்நாள் தடையையும் நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர். அவர் ஜீலம் தொகுதியில் போட்டியிட அனுமதியும் அளித்தனர்.  #Abbasi #Pakistan #tamilnews
    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் பிரதமர் அப்பாசி போட்டியிட தடை இல்லை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #ShahidKhaqanAbbasi #NAElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவருமான அப்பாசி, இஸ்லாமாபாத் (என்.ஏ-53) தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (குலாலாய்) கட்சி தலைவர் ஆயிஷா குலாலாய் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அவர்களின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருப்பதாக கூறி தொகுதி தேர்தல் அதிகாரி முகமது அத்னன் கான் நிராகரித்தார்.

    இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்கள்.

    அந்த முறையீடுகளை நீதிபதி மோசின் கயானி நேற்று விசாரித்தார். விசாரணை முடிவில் அவர்கள் இருவரது வேட்பு மனுக்களும் ஏற்கப்படவேண்டும் என்றும், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் உத்தரவிட்டார். 2017-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் சட்டம் பிரிவு 62, சிறு சிறு தவறுகள் வேட்பு மனுவில் இருந்தால், அதை விட்டு விட்டு வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள அனுமதி அளித்து உள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.  #ShahidKhaqanAbbasi #NAElection #Tamilnews 
    ×