search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shahid Khaqan Abbasi"

    உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் 360 டன் கோதுமை அன்பளிப்பாக அனுப்பியது. #Pakistangiftedwheat
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் கொத்து கொத்தாக மக்களை கொன்று குவிக்கின்றனர்.

    அண்டைநாடான ஆப்கானிஸ்தானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கோதுமை அனுப்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன் அடிப்படையில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அனுப்பிவைத்த 360 டன் கோதுமையை தோர்காம் எல்லைப்பகுதியில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பெற்று கொண்டனர். #Pakistangiftedwheat #360tonswheat
    பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் யார்?” என்ற கேள்விக்கு முன்னாள் பிரதமர் அப்பாசி நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப் என பதில் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் 25-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தலுக்கு முந்தைய வன்முறை சம்பவங்கள் அங்கு நடந்து வருகின்றன. 172 இடங்களில் வெற்றி பெறுகிற கட்சி, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும்.

    தற்போது நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகள் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.



    கருத்துக்கணிப்புகளில் நவாஸ் ஷெரீப் கட்சி முந்துகிறது.

    இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், ‘பனாமா கேட்’ ஊழலில் பதவி இழந்தபோது பிரதமர் பதவிக்கு வந்த அப்பாசியிடம், ‘தி டான்’ நாளேடு தரப்பில் சிறப்பு பேட்டி கண்டனர். அப்போது “பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “ஷாபாஸ் ஷெரீப் தான் (இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி) அடுத்த பிரதமர். இருப்பினும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பிரதமர் யார் என்கிற விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி இறுதி முடிவு எடுப்போம்” என பதில் அளித்தார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, “நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோருக்கு எதிரான வழக்கில் இதுவரை இல்லாத வகையில் ஒருதலைப்பட்சமாக வழக்கு விசாரணை நடைபெற்றது” என்றும் அவர் சாடினார்.

    முன்னாள் உள்துறை மந்திரி சவுத்ரி நிசாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காதது பற்றிய கேள்விக்கு அப்பாசி பதில் அளிக்கையில், “அவர் டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. ஒவ்வொருவரும், ஏன் நவாஸ் ஷெரீப், ஷாபாஸ் ஷெரீப், மரியம் நவாஸ் உள்ளிட்டவர்களே டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தனர்” என்று கூறினார்.  #tamilnews 
    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் பிரதமர் அப்பாசி போட்டியிட தடை இல்லை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #ShahidKhaqanAbbasi #NAElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவருமான அப்பாசி, இஸ்லாமாபாத் (என்.ஏ-53) தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (குலாலாய்) கட்சி தலைவர் ஆயிஷா குலாலாய் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அவர்களின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருப்பதாக கூறி தொகுதி தேர்தல் அதிகாரி முகமது அத்னன் கான் நிராகரித்தார்.

    இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்கள்.

    அந்த முறையீடுகளை நீதிபதி மோசின் கயானி நேற்று விசாரித்தார். விசாரணை முடிவில் அவர்கள் இருவரது வேட்பு மனுக்களும் ஏற்கப்படவேண்டும் என்றும், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் உத்தரவிட்டார். 2017-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் சட்டம் பிரிவு 62, சிறு சிறு தவறுகள் வேட்பு மனுவில் இருந்தால், அதை விட்டு விட்டு வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள அனுமதி அளித்து உள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.  #ShahidKhaqanAbbasi #NAElection #Tamilnews 
    ×