search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former Prime Minister"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி சிங்கம்புணரியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
    சிங்கம்புணரி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி சிங்கம்புணரியில் அனைத்து கட்சியினர்கள் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் விதமாக சிங்கம்புணரி புசலியம்மாள் மருத்துவமனை முன்பு இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் மவுன ஊர்வலமாக வந்து சிங்கம்புணரி அண்ணாசிலை முன்பு வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதையொட்டி சிங்கம்புணரி பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மவுன ஊர்வலத்தில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர் செந்தில் குமார், நகர தலைவர் வசிகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ராம, அருணகிரி, மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் சிங்கை தருமன், காங்கிரஸ் நகர தலைவர் பழனிவேல்ராஜன் மற்றும் தி.மு.க சார்பில் நகரச் செயலாளர் யாகூப், பொதுக்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், அம்பலமுத்து, அ.தி.மு.க சார்பில் முன்னாள் கவுன்சிலர் குணசேகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொன்பகீரதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. #Abbasi #Pakistan
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. அவர் மீது தேர்தல் தீர்ப்பாயம் பிறப்பித்த தடை ரத்து செய்யப்பட்டது.

    பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிற பாகிஸ்தானில் வரும் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி என 3 கட்சிகள் இடையேயும் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரத்தில் அனல் வீசுகிறது.

    இந்த நிலையில், ராவல்பிண்டி-1 (என்.ஏ. 57) தொகுதியில் போட்டியிட முன்னாள் பிரதமர் அப்பாசி (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ்) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    ஆனால் அவர் நேர்மையானவர் அல்ல, மதிநுட்பம் மிகுந்தவர் அல்ல என்று கூறி வாழ்நாள் தடை விதித்து, அவர் ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதித்து பஞ்சாப் மாகாண தேர்தல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பாசி, லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டின் மீது நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வி தலைமையில் 2 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணை நடந்தது.

    இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொகுதி தேர்தல் அதிகாரி தனது பதில் மனுவை நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வியிடம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் விசாரணையின்போது, அப்பாசி சார்பில் ஆஜரான வக்கீல், “வேட்பு மனுவில் கேட்கப்பட்டு உள்ள எல்லா கேள்விகளுக்கும் அப்பாசி பதில் அளித்து உள்ளார். அப்படி இருந்தும், சட்டத்துக்கு முரணாக அவருக்கு எதிராக இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் அவர் தந்து உள்ளார்” என்று கூறினார்.

    மேலும், “தேர்தல் தீர்ப்பாயம் தனது வரம்பை மீறி உள்ளது, ஒன்று வேட்பு மனுவை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். அதற்குத்தான் தேர்தல் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இருக்கிறது. வாழ்நாள் தடை விதிக்க அதிகாரம் இல்லை” என்றும் அவர் வாதிட்டார். முடிவில் பஞ்சாப் தேர்தல் தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து, அப்பாசி ராவல்பிண்டி-1 தொகுதியில் இருந்து போட்டியிட அனுமதி அளித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    இதே போன்று இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் ஜீலம் (என்.ஏ. 67) தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த பவாத் சவுத்ரிக்கும் பஞ்சாப் தேர்தல் தீர்ப்பாயம் வாழ்நாள் தடை விதித்து இருந்தது. அவரும் லாகூர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கும் நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வி தலைமையில் 2 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

    இரு தரப்பு வாதத்துக்கு பின்னர் அவர் மீதான வாழ்நாள் தடையையும் நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர். அவர் ஜீலம் தொகுதியில் போட்டியிட அனுமதியும் அளித்தனர்.  #Abbasi #Pakistan #tamilnews
    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் பிரதமர் அப்பாசி போட்டியிட தடை இல்லை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #ShahidKhaqanAbbasi #NAElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவருமான அப்பாசி, இஸ்லாமாபாத் (என்.ஏ-53) தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (குலாலாய்) கட்சி தலைவர் ஆயிஷா குலாலாய் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அவர்களின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருப்பதாக கூறி தொகுதி தேர்தல் அதிகாரி முகமது அத்னன் கான் நிராகரித்தார்.

    இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்கள்.

    அந்த முறையீடுகளை நீதிபதி மோசின் கயானி நேற்று விசாரித்தார். விசாரணை முடிவில் அவர்கள் இருவரது வேட்பு மனுக்களும் ஏற்கப்படவேண்டும் என்றும், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் உத்தரவிட்டார். 2017-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் சட்டம் பிரிவு 62, சிறு சிறு தவறுகள் வேட்பு மனுவில் இருந்தால், அதை விட்டு விட்டு வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள அனுமதி அளித்து உள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.  #ShahidKhaqanAbbasi #NAElection #Tamilnews 
    ஊழல் வழக்கு விசாரணை குறித்து நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். #NawazSharif #PakistanCourt
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து இருந்ததை ‘பனாமா லீக்ஸ்’ வெளியிட்டு இருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

    இந்த ஊழல் வழக்கில் நவாஸ் குடும்பத்தினர் மீது விசாரணை நடத்தி வரும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு, இந்த வழக்கில் சாட்சியம் அளிக்குமாறு நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோருக்கு உத்தரவிட்டு இருந்தது. இதற்காக 128 கேள்விகள் அடங்கிய பட்டியலை நவாஸ் ஷெரீப்பின் வக்கீலிடம் நீதிபதி ஒப்படைத்து இருந்தார்.

    அதன்படி இந்த வழக்கில் நேற்று நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது லண்டன் அவென்பீல்டு குடியிருப்பில் வாங்கப்பட்டுள்ள வீடுகள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘லண்டன் சொத்துகளை வாங்கவோ, அதற்கு உதவி புரியவோ இல்லை’ என கூறினார். மேலும் அந்த சொத்துக்கு தான் உரிமையாளர் இல்லை என மறுத்த நவாஸ் ஷெரீப், அதற்கான பணப்பரிமாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.  #NawazSharif #PakistanCourt
    ×