search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Witness"

    • விக்ரம் வேதா, ஜெர்சி, கே13, மாறா உள்ளிட்ட பல டங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
    • இவர் தற்போது நடித்துள்ள “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

    விக்ரம் வேதா, ஜெர்சி, கே13, மாறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் தீபக் இயக்கியுள்ள "விட்னஸ்" படத்தில் நடித்துள்ளார். மேலும், அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

     

    விட்னஸ்

    விட்னஸ்

    இதில் ரோகிணி, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தை "தி பீப்பிள் மீடியா பேக்டரி" சார்பாக டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரிக்க, விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தின் இசையை ரமேஷ் தமிழ்மணி கவனிக்க, கபிலன் பாடல்களை எழுதியுள்ளார்.

     

    விட்னஸ்

    விட்னஸ்

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி இப்படம் நேரடியாக வெளியாகவுள்ளது.  

    • சாட்சியை மிரட்டிய தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • தல்லாக்குளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கல்மேடு, சவுந்தரபாண்டி நகரை சேர்ந்த ரவி என்பவரது மகன் முகேஷ் பாபு (வயது 24). சவர தொழிலாளி. இவர் நேற்று இரவு நாகனாகுளம் வாசுநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை 3 பேர் கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த முகேஷ் பாபு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆலோசனை பேரில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    முகேஷ்பாபு கடந்த 2019-ம் ஆண்டு விஸ்வநாத புரம் கபிலர் தெருவை சேர்ந்த சரத் பாண்டியன் (27) என்பவரை அரிவா ளால் வெட்டி உள்ளார். இதுதொடர்பாக கே.புதூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கடச்சனேந்தல் ஏ.ஆர். நகரை சேர்ந்த கவுரிசங்கர் மகன் ராம் பிரசாத் (23) என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் முகேஷ் பாபு, 'நீ சாட்சி சொல்லக்கூடாது' என்று ராம்பிரசாத்தை மிரட்டிய தாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் சவர தொழிலாளி முகேஷ் பாபுவை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் பிடித்து விசா ரணை நடத்தினர். இதில் அவர்கள் விஸ்வநாதபுரம், கபிலர் தெருவை சேர்ந்த சரத்பாண்டியன் (27), கடச்சனேந்தல் ஏ.ஆர். நகர் கவுரிசங்கர் மகன் ராம் பிரசாத் (23), பனங்காடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் கிஷோர் (23) என்பது தெரிய வந்தது. அவர்களை தல்லாக்குளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊழல் வழக்கு விசாரணை குறித்து நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். #NawazSharif #PakistanCourt
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து இருந்ததை ‘பனாமா லீக்ஸ்’ வெளியிட்டு இருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

    இந்த ஊழல் வழக்கில் நவாஸ் குடும்பத்தினர் மீது விசாரணை நடத்தி வரும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு, இந்த வழக்கில் சாட்சியம் அளிக்குமாறு நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோருக்கு உத்தரவிட்டு இருந்தது. இதற்காக 128 கேள்விகள் அடங்கிய பட்டியலை நவாஸ் ஷெரீப்பின் வக்கீலிடம் நீதிபதி ஒப்படைத்து இருந்தார்.

    அதன்படி இந்த வழக்கில் நேற்று நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது லண்டன் அவென்பீல்டு குடியிருப்பில் வாங்கப்பட்டுள்ள வீடுகள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘லண்டன் சொத்துகளை வாங்கவோ, அதற்கு உதவி புரியவோ இல்லை’ என கூறினார். மேலும் அந்த சொத்துக்கு தான் உரிமையாளர் இல்லை என மறுத்த நவாஸ் ஷெரீப், அதற்கான பணப்பரிமாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.  #NawazSharif #PakistanCourt
    ×