search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதி இன்றி"

    • அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    • அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆங்காங்கே வாகன சோதனை, ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் கோபி உள் கோட்டம் மற்றும் ஈரோடு டவுன் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ப னை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பெருந்துறை, தாளவாடி, சத்திய மங்கலம், பவானி போன்ற பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்த அனுமதி கொடுத்ததற்காகவும்,

    அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டதாகவும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 32 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.

    ஈரோடு, 

    கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஈ.செட்டிபாளையம், தடப்பள்ளி வாய்க்கால் கரை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் நம்பியூர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (58) என்பதும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மாவட்டம் முழுவதும் 115 டாஸ்மாக் கடைகளில் சுமார் 20 பார்கள் மட்டுமே அனுமதியுடன் இயங்கியது
    • மது விற்பனை செய்ததாக 25-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    தஞ்சாவூர் மதுபான கடையில் மதுபானம் அருந்திய 2 பேர் பலியா னார்கள். விழுப்புரம் மாவட் டத்தில் விஷ சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்ட வரும் பலியான நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அனுமதியின்றி மது விற்பனை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியின்றி இயங்கும் பார்கள் மீதும் நடவ டிக்கையை மேற்கொள்ளப் பட்டது. குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். கடந்த 2 நாட்களில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததாக 25-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில் களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட வர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி இயங்கும் பார்களை மூடுவதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 115 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் சுமார் 20 பார்கள் மட்டுமே அனுமதியுடன் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி செயல்பட்டு அனைத்து பார்களையும் மூட நடவடிக்கை மேற் கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் சுமார் 90 பார்கள் அனுமதி இன்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பார்களை அதிகாரிகள் மூடினார்கள்.

    • கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
    • தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழு வதும் போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்படி தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாள வாடி சி ஹெச் நகர் ரோடு, சோதனை சாவடி அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடமிருந்த 12 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர் தாளவாடி அடுத்த திகினாரை, அம்பேத்கர் தெருவை சேர்ந்த பசுண்ணா (38) என்ன தெரிய வந்தது.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர்.

    இதேப்போல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது சித்தோடு அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்த 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×