search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்டகாசம்"

    • சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் ஒற்றை காட்டு யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.
    • எனவே வனத்துறை விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது. இதில் கருப்பன் என்ற ஒற்றை யானை திகனாரை மற்றும் தர்மாபுரம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து 2 விவசாயிகளை கொன்றது.

    இந்த ஆட்கொல்லி யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த யானையை விரட்ட பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என இரண்டு கும்கி யானைகள் தாளவாடி அடுத்த இரியபுரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    அதை தொடர்ந்து கருப்பன் யானையை வனத்துறையினர் கும்கியானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினர்.

    இந்நிலையில் ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகனாரை அருகே உள்ள ஜோரகாடு பகுதியை சேர்ந்த மாதேவசாமி (28) என்பவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் ஒற்றை காட்டு யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு சென்ற விவசாயி ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதம் செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி வனத்துறைக்கும் அருகில் இருந்த விவசாயிகளுக்கும் தகவல் அளித்தார். பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் சென்றது. இதில் 1 ஏக்கர் கரும்பு சேதம் ஆனது. கருப்பன் ஆட்கொல்லி யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் இருக்கும் நிலையில் கருப்பன் யானை இரியபுரம் கிராமத்தில் இருந்து தற்போது திகனாரை கிராமத்திக்கு சென்றுள்ளதால் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறை விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை வைத்துள்ளனர்.

    • தாளவாடி அருகே வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து கொன்றது.
    • மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தாளவாடி வனச் சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரசுவாமி (49)இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார் வழக்கம் போல் மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார் நேற்று மதியம் மாடுகளை அழைத்தை வர சென்ற போது ஓரு பசு மாடு இறந்துகிடந்தது மாடு இறந்துகிடந்த இடம் கர்நாடக வனப்பகுக்கு உட்பட்டது.

    இதுபற்றி தாளவாடி வனத்துறை மற்றும் கர்நாடக வனத்துறைக்கு தகவல் அளித்தார் சம்பவயி–டத்திக்கு வந்த வனத்துறை இறந்த மாட்டை ஆய்வு செய்தனர் புலி தாக்கி பசு மாடு இறந்தது தெரியவந்தது.

    இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக கால்நடை வளர்போர் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-

    கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்றனர்.

    ×