search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க."

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடந்தது.
    • கூட்டத்தில் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து வரும் பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமிபாண்டியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.

    • ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, செல்வ மோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, மகளிர்அணி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ்பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி, பொதுக்குழு உறுப்பினர்கள் கசமுத்து, பாண்டிய ராஜ், அண்ணா தொழிற்சங்கம் கந்தசாமிபாண்டியன், சார்பணி மாவட்ட செயலாளர்கள், காத்தவராயன், சந்திரகலா, பிரேம்குமார், கிருஷ்ணசாமி, நெல்லை முகிலன், சுப்பையா என்ற ராஜ், சிவசீதாராம், வக்கீல் சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், என். ஹெச்.எம்.பாண்டியன், ஜெயக்குமார், அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், இருளப்பன், நகர செயலாளர்கள் சுடலை, சக்திவேல், பேரூர் செயலாளர்கள் கணேஷ் தாமோதரன், கார்த்திக்குமார், முத்துராஜன், ஜெயராமன், சுப்பிரமணியன், வில்சன், சங்கர், பூத் கமிட்டி அமைக்கும் பொறுப்பாளர்கள் பாலமுருகன், ராமசுப்பிரமணியன், சாமி ஆசாரி, பரசுராமன், வக்கீல்கள் செல்லத்துரை பாண்டியன், ரங்கராஜ், சதீஷ்குமார், சாந்தகுமார், ராமச்சந்திரன், ஜோதி முருகன், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, கவுன்சிலர் உமா மகேஸ்வரன் மற்றும் ராமமூர்த்தி, ஜெயபால கண்ணன், குணம் என்ற உத்தர குண பாண்டியன், ஐவராஜா, தமிழ் என்ற ராமசாமி, மணி, சுந்தர், குத்தாலிங்கம், பாலமுருகன், பாஸ்கர், சேவியர் ரஜினி, ராசு, தங்கச்சாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடந்தது
    • அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அயராது பாடுபடுவது

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வா கிகள் ஆலோசனை கூட்டம் அஞ்சுகிராமத்தில் நடை பெற்றது. கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலா ளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன், அழகப்பபுரம் பேரூர் செய லாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பகவதி குமார் என்ற கண்ணன், ஊராட்சி கழக பொறுப்பா ளர்கள் லீன், செல்லப்பெரு மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜ பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜெஸீம் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி னார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்தை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நியமனம் செய்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரி விப்பது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிக்காக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அயராது பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளராக பதவியேற்றுள்ள ஜெஸீம்-க்கு நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. அ.தி.மு.க. கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை இந்த மாதம் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும், வடக்கு ஒன்றியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறை வேற்றப் பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் லெட்சுமணன், செல்லம்பிள்ளை, வீரபத்தி ரன், விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • செல்லம்பட்டி ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பாண்டி இல்ல விழா நாளை நடக்கிறது.
    • அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி மாயத்தேவர்- சோங்கம்மாள், விராலி மாயன்பட்டி சீனிபேயத் தேவர்- புஷ்பம் ஆசீர்வா தத்துடன் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி கள் நல்லாசியுடன் கூட்டுறவு வங்கி தலைவரும் செல்லம் பட்டி ஒன்றிய அ.தி.மு.க இளைஞர் பாசறை செயலா ளர் வடக்கம்பட்டி பாண்டி-லெட்சுமி கயல்விழி ஆகி யோரின் இல்ல விழா சட்ட மன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மூனாண்டிபட்டி வி.கே.எஸ்.மஹாலில் நாளை நடக்கிறது.

    விழாவில் முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ, அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் மதுரை கிழக்கு மாவட்ட செய லாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் நீதிபதி மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள், உறவினர் கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.சுந்தர பாண்டியனை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்து உத்தர விட்டுள்ளார்.

    இவர் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் மாநில நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்

    • அ.தி.மு.க. குற்றச்சாட்டு
    • புதுவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்பாடம் முதல் பாடமாக அரசு கொண்டுவர வேண்டும்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன், உருளை யன்பேட்டை தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சரஸ்வதி மகாலில் இன்று நடந்தது.

    தொகுதி செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அன்பழகன் உடையார், சிவக்குமார், ராமலிங்கம், நாக.லோகநாதன், சுரேஷ்குமரன், பர்கத், ராஜா, ஜெயராஜ், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மோட்சநாதன், நந்தன், ஆனந்தராஜ், ஆறுமுகம், துரைசாமி, இளவழகி, சாவித்திரி, மதி, பாபு, பாலசுப்ரமணியன், சம்னேஸ், வளர்மணி, அப்துல்ரகுமான், ஜக்மால், டெய்சிக் கிளாரா, பாலசுப் பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் அதி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நலன் கருதி வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை நம்மை நம்பி பொதுச்செயலாளர் எடுத்து வருகிறார். அவர் இடும் பணியை தொய்வின்றி செய்ய வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

    தேசிய கல்வி கொள்கையை முன்னிறுத்தி புதுவையில் மாணவர்களை தி.மு.க.வினர் தவறாக கொண்டு செல்கின்றனர்.

    தாய் மொழியான தமிழ் தேசிய கல்வி கொள்கையால் பாதிக்க வாய்ப்பில்லை. மாணவர்களை வைத்து தி.மு.க. நடு வீதியில் போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது.

    புதுவையில் உள்ள எந்த தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் இல்லை. தேசிய கல்வி கொள்கையை மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள நிலையில், புதுவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்பாடம் முதல் பாடமாக அரசு கொண்டுவர வேண்டும்.

    உருளையன்பேட்டை தொகுதி இளைஞர்கள் பலர் முன்பு இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வை நம்பி தங்களது வாழ்க்கையை இழந்துள்ள–னர். அவர் சுயநலத்துக்காக வியா–பாரிகளை தூண்டி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளான புதிய பஸ் நிலையம், அண்ணாதிடல், பெரிய–மார்க்கேட் கட்டு–மான பணி–களை நிறுத்தியுள்ளார்.

    நடந்து செல்ல கூட வழியில்லாத மார்க்கெட் பகுதியை நவீனப்படுத்த வியாபாரிகளை முன்னி றுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கின்றன. மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப வியாபாரிகள் உண்மை நிலையை உணர்ந்து அரசுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரவு, எம்.ஏ.கே. கருணாநிதி, குணசேகரன், உமா, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழகத் துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி, உழவர் கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற் சங்க பேரவை செயலாளர் பாப்பு சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

    திருப்பூர்:

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் தென்னம்பாளையம் பகுதி 56-வது வட்டம் சார்பில் கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செரங்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாணவர் அணி துணை செயலாளர் ஹரிபிரசாந்த் தலைமை தாங்கினார். தென்னம்பாளையம் பகுதி செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி பேசும்போது, 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார். தலைமை கழக பேச்சாளர் திரைப்பட இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடந்து.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை

    அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா சிவ கங்கையில் கொண்டாடப் பட்டது. நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் சேவியர் தாஸ், பழனிச்சாமி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வ மணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்தி ணரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலா ளர் சிவதேவ்குமார், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன்.

    காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, மாவட்ட கவுன்சிலர் தேவ ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் சங்கர்ராமநாதன், அமைப்பு சார அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாணவ ரணி அன்பு, சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உருப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா கலந்து கொண்டார்

    குளச்சல் :

    குளச்சல் நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா அண்ணா சிலை அருகே நடைபெற்றது.

    இதில் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமையில் எம். ஜி.ஆர்., ஜெயலலிதா உருப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரவீந்திர வர்சன், ஆனக்குழி சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் சந்துரு, மாவட்ட பொருளாளர் திலக், எஸ்.எம்.பிள்ளை, விஜயகுமார், பஷீர் கோயா, தாசின், மேரி ஜெசிக்கலா, செர்பா, சிட்டி ஷாகுல், வினோத், ஜெகன், அம்பிளிகலா, சிசிலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    உடுமலை:

    .தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் மலர் மாலை அணிவித்தார்.
    • தொடக்க விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூரில் அ.தி.மு.க.வின் 52 -வது தொடக்க விழா கொண்டாடப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமை தாங்கி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், அங்கு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளான தீபொறி அப்பாதுரை,காளிமுத்து, விவேகானந்தர் கவுன்சிலர் பாவனி மற்றும் வார்டு செயலாளர்கள் மகளிர்அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • திருமலையாண்டி பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    அ.தி.மு.க.வின் 52 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண் தங்கம் தலைமையில் தக்கலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சிவ.குற்றாலம், இணை செயலாளர் மேரி கமலாபாய், துணைச் செயலாளர்கள் அல்போன்சாள், கே.ஏ.சலாம், பொருளாளர் சில்வெஸ்டர், ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், கடையால் மணி, மாவட்ட அணி செயலாளர்கள் வக்கீல் அருள் பிரகாஷ் சிங், மகாஜி செல்வகுமார், ஜாண், யூஜின், விஜயகுமார், காசிராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சக்கீர் உசேன், அம்பலகடை பாபு மற்றும் நிர்வாகிகள் முருகன், திருமலையாண்டி பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ×