search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடத்துக்குளத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
    X

    உடுமலையில் அ.தி.மு.க. வின் 52-வது தொடக்க விழா நடைபெற்ற காட்சி. 

    மடத்துக்குளத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா

    • அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    உடுமலை:

    .தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×