search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க."

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • பூத் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சட்ட மன்றத் தொகுதி பூத் பொறுப்பா ளர்கள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான ராஜலெட்சுமி கலந்து கொண்டார். கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 சட்டமன்ற தொகு திக்குட்பட்ட அனைத்து பூத் பகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றும் பூத் நிர்வாகி களை அந்தந்த பூத்களில் அமைத்தும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களை பூத் பணிகளில் பணி யாற்றிடவும், வெகு விரைவில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைத்து தலைமைக்கு விரைவில் வழங்கிட பணியாற்றிட வேண்டும். தற்போது நடைபெற்று வருகின்ற புதிய வாக்காளர் சேர்ப்பு முகாமில் 3 தொகு திக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பா ளர்கள் நேரடியாக சென்று வாக்காளர் சேர்ப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மருங்கூர் பேரூராட்சி பகுதியில் பூத் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மருங்கூர் பேரூராட்சி செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    இந்த கூட்டங்களில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சிவசெல்வராஜன், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு என்ற ஜெயசந்திரன், மாநில மகளிரணி துணை செயலாளர் ராணி, மாநில விவசாய அணி துணை செயலாளர் தாணு பிள்ளை, வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார், கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நரசிங்கமூர்த்தி, மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, கழக நிர்வாகிகள், ஊராட்சி சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் முன்னாள் எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான அன்வர்ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன் தாஸ்பாண்டியன் , முன்னாள் எம்.பி.யும், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், பேரூர் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை, ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ்,இருளப்பன், காளிமுத்து, விவேகானந்தர், கவுன்சிலர் பவானி, மகளிர் அணி செயலாளர்கள் விஜய ராணி, இசக்கியம்மாள், பூத் பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • தேவர் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகையா, ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலா ளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகர பொருளாளர் வேலுச்சாமி, அவை தலைவர் அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி ராமநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், சரவணகுமார், பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, தலைமை பேச்சாளர் ராமசுப்பிர மணியன், குருவிகுளம் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் நிவாஸ், செந்தில்குமார், குட்டி மாரியப்பன், வெள்ளி முருகன், குமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திலகர்திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி அ.தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் வரும் 4-ம் தேதி (சனிக்கிழமை) மாலையில் திலகர்திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது .

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதனை முன்னிட்டு பொதுக்கூட்டம் ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 4-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் தஞ்சை திலகர் திடலில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் என்.எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அனைவரும் இணைந்து பந்தக்கால் நட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், கரந்தை பஞ்சு, மருத்துவ கல்லூரி பகுதி நிர்வாகி மனோகர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், கவுன்சிலர்கள் கோபால், காந்திமதி, மகளிரணி சித்ரா அங்கப்பன், நிர்வாகி முத்துமாறன், முன்னாள் மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் ரெங்கப்பா, திராவிட கூட்டுறவு வங்கி இயக்குனர் மகேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், அம்மா பேரவை துணை தலைவர் பாலை ரவி, ரெங்கப்பா, கேபிள் செந்தில், தென்னரசன், பிள்ளையார்பட்டி சந்தானம், கடகடப்பை ராஜா, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி ஸ்டாலின் செல்வராஜ், ஐ.டி.விங்க் நடராஜன், மனோ சுப்பிரமணியன், பாண்டியன், முருகேசன், வெங்கடேஸ்வரன், பிரகதீஸ், சித்தார்த்தன், மாணவரணி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊத்துமலையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    ஆலங்குளம்:

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஊத்துமலையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டி யன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எச்.எம்.பாண்டியன் தொகுப்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் மருதப்பபுரம் பாண்டியராஜன், அவைத்தலைவர் சண்முக சுந்தரம், துணை செயலாளர் முத்துலெட்சுமி, பசுவதி, வீராணம் வீரபாண்டியன், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், நெல்லை வீரபெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட மகளிர்அணி செயலாளர் சந்திரகலா, மாவட்ட மாணவரணி செய லாளர் பிரேம்குமார், மாவட்ட தொழிற்சங்க செய லாளர் குத்தாலிங்கம், மாவட்ட விவசாய அணி கிருஷ்ணசாமி, மாவட்ட ஐடி விங் மகபூப் மசூது, ஒன்றிய செயலாளர்கள் தென்காசி சங்கரபாண்டியன், கீழப்பாவூர் மேற்கு அமல்ராஜ், கிழக்கு இருளப்பன், ஆலங்குளம் தெற்கு பாலகிருஷ்ணன், கடையம் வடக்கு அருவேல் ராஜ், கடையம் தெற்கு முருகேசன், பாப்பாக்குடி டி.கே.சுப்பிரமணியன், கடையநல்லூர் தெற்கு ஜெயக்குமார், நகர செயலாளர்கள் தென்காசி சுடலை, சுரண்டை சக்திவேல், பேரூர் செயலாளர்கள் மேலகரம் வக்கீல் கார்த்திக் குமார், குற்றாலம் சேர்மன் கணேஷ் தாமோதரன், சுந்தரபாண்டியபுரம் முத்துராஜன், ஆலங்குளம் கேபி சுப்பிரமணியன், கீழப்பாவூர் ஜெயராமன், முக்கூடல் சகாய அருள் வில்சன், பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, வக்கீல் அணி சிவக்குமார், ஆலங்குளம் சாந்தகுமார், ராமச்சந்திரன், சதீஷ்குமார், ஜோதி முருகன், முத்துராஜ், வீரபாண்டியன், திருமலைக்குமார், வேல்துரை, ஊத்துமலை இளைய ராஜா குமரேசராஜா, ஊத்துமலை கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கருவந்தா தானியேல் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் கருப்பசாமி நன்றி கூறினார்.

    • தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது
    • இளம்பெண் இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஆரல்வாய்மொழி :

    தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக ஆரல்வாய்மொழி தனியார் மண்டபத்தில் பூத் நிர்வாகிகள் இளம்பெண் இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மேலிடப்பார்வையாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டு பேசியதாவது:-

    ஏழை, எளிய மக்களின் நலம்காக்க பாடுபட்ட இயக்கம் அ.தி.மு.க.. ஆனால் தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றுகிற தி.மு.க. அரசை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் அட்சய கண்ணன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி கிருஷ்ணதாஸ், ஆரல்வாய்மொழி நகர செயலாளர் சுடலையாண்டி, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், ஆரல் வாய்மொழி பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பாலகிருஷ்ணன், தாழக்குடி பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரோகினி அய்யப்பன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் நவமணி, மோகன் வள்ளி யம்மாள் கிளை கழக நிர்வாகிகள் துணை செல்வன், கச்சேரி நாக ராஜன், சிவசங்கரன், இணை செயலாளர் பேச்சி யம்மாள், அமுதா உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடந்தது.
    • கூட்டத்தில் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து வரும் பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமிபாண்டியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.

    • ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, செல்வ மோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, மகளிர்அணி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ்பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி, பொதுக்குழு உறுப்பினர்கள் கசமுத்து, பாண்டிய ராஜ், அண்ணா தொழிற்சங்கம் கந்தசாமிபாண்டியன், சார்பணி மாவட்ட செயலாளர்கள், காத்தவராயன், சந்திரகலா, பிரேம்குமார், கிருஷ்ணசாமி, நெல்லை முகிலன், சுப்பையா என்ற ராஜ், சிவசீதாராம், வக்கீல் சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், என். ஹெச்.எம்.பாண்டியன், ஜெயக்குமார், அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், இருளப்பன், நகர செயலாளர்கள் சுடலை, சக்திவேல், பேரூர் செயலாளர்கள் கணேஷ் தாமோதரன், கார்த்திக்குமார், முத்துராஜன், ஜெயராமன், சுப்பிரமணியன், வில்சன், சங்கர், பூத் கமிட்டி அமைக்கும் பொறுப்பாளர்கள் பாலமுருகன், ராமசுப்பிரமணியன், சாமி ஆசாரி, பரசுராமன், வக்கீல்கள் செல்லத்துரை பாண்டியன், ரங்கராஜ், சதீஷ்குமார், சாந்தகுமார், ராமச்சந்திரன், ஜோதி முருகன், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, கவுன்சிலர் உமா மகேஸ்வரன் மற்றும் ராமமூர்த்தி, ஜெயபால கண்ணன், குணம் என்ற உத்தர குண பாண்டியன், ஐவராஜா, தமிழ் என்ற ராமசாமி, மணி, சுந்தர், குத்தாலிங்கம், பாலமுருகன், பாஸ்கர், சேவியர் ரஜினி, ராசு, தங்கச்சாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடந்தது
    • அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அயராது பாடுபடுவது

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வா கிகள் ஆலோசனை கூட்டம் அஞ்சுகிராமத்தில் நடை பெற்றது. கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலா ளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன், அழகப்பபுரம் பேரூர் செய லாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பகவதி குமார் என்ற கண்ணன், ஊராட்சி கழக பொறுப்பா ளர்கள் லீன், செல்லப்பெரு மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜ பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜெஸீம் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி னார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்தை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நியமனம் செய்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரி விப்பது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிக்காக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அயராது பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளராக பதவியேற்றுள்ள ஜெஸீம்-க்கு நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. அ.தி.மு.க. கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை இந்த மாதம் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும், வடக்கு ஒன்றியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறை வேற்றப் பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் லெட்சுமணன், செல்லம்பிள்ளை, வீரபத்தி ரன், விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • செல்லம்பட்டி ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பாண்டி இல்ல விழா நாளை நடக்கிறது.
    • அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி மாயத்தேவர்- சோங்கம்மாள், விராலி மாயன்பட்டி சீனிபேயத் தேவர்- புஷ்பம் ஆசீர்வா தத்துடன் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி கள் நல்லாசியுடன் கூட்டுறவு வங்கி தலைவரும் செல்லம் பட்டி ஒன்றிய அ.தி.மு.க இளைஞர் பாசறை செயலா ளர் வடக்கம்பட்டி பாண்டி-லெட்சுமி கயல்விழி ஆகி யோரின் இல்ல விழா சட்ட மன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மூனாண்டிபட்டி வி.கே.எஸ்.மஹாலில் நாளை நடக்கிறது.

    விழாவில் முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ, அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் மதுரை கிழக்கு மாவட்ட செய லாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் நீதிபதி மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள், உறவினர் கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.சுந்தர பாண்டியனை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்து உத்தர விட்டுள்ளார்.

    இவர் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் மாநில நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்

    • அ.தி.மு.க. குற்றச்சாட்டு
    • புதுவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்பாடம் முதல் பாடமாக அரசு கொண்டுவர வேண்டும்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன், உருளை யன்பேட்டை தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சரஸ்வதி மகாலில் இன்று நடந்தது.

    தொகுதி செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அன்பழகன் உடையார், சிவக்குமார், ராமலிங்கம், நாக.லோகநாதன், சுரேஷ்குமரன், பர்கத், ராஜா, ஜெயராஜ், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மோட்சநாதன், நந்தன், ஆனந்தராஜ், ஆறுமுகம், துரைசாமி, இளவழகி, சாவித்திரி, மதி, பாபு, பாலசுப்ரமணியன், சம்னேஸ், வளர்மணி, அப்துல்ரகுமான், ஜக்மால், டெய்சிக் கிளாரா, பாலசுப் பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் அதி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நலன் கருதி வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை நம்மை நம்பி பொதுச்செயலாளர் எடுத்து வருகிறார். அவர் இடும் பணியை தொய்வின்றி செய்ய வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

    தேசிய கல்வி கொள்கையை முன்னிறுத்தி புதுவையில் மாணவர்களை தி.மு.க.வினர் தவறாக கொண்டு செல்கின்றனர்.

    தாய் மொழியான தமிழ் தேசிய கல்வி கொள்கையால் பாதிக்க வாய்ப்பில்லை. மாணவர்களை வைத்து தி.மு.க. நடு வீதியில் போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது.

    புதுவையில் உள்ள எந்த தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் இல்லை. தேசிய கல்வி கொள்கையை மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள நிலையில், புதுவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்பாடம் முதல் பாடமாக அரசு கொண்டுவர வேண்டும்.

    உருளையன்பேட்டை தொகுதி இளைஞர்கள் பலர் முன்பு இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வை நம்பி தங்களது வாழ்க்கையை இழந்துள்ள–னர். அவர் சுயநலத்துக்காக வியா–பாரிகளை தூண்டி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளான புதிய பஸ் நிலையம், அண்ணாதிடல், பெரிய–மார்க்கேட் கட்டு–மான பணி–களை நிறுத்தியுள்ளார்.

    நடந்து செல்ல கூட வழியில்லாத மார்க்கெட் பகுதியை நவீனப்படுத்த வியாபாரிகளை முன்னி றுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கின்றன. மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப வியாபாரிகள் உண்மை நிலையை உணர்ந்து அரசுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரவு, எம்.ஏ.கே. கருணாநிதி, குணசேகரன், உமா, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழகத் துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி, உழவர் கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற் சங்க பேரவை செயலாளர் பாப்பு சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×