search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூரில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
    X

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி. பிரபாகரன் பேசியபோது எடுத்த படம்.

    கீழப்பாவூரில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

    • கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் முன்னாள் எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான அன்வர்ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன் தாஸ்பாண்டியன் , முன்னாள் எம்.பி.யும், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், பேரூர் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை, ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ்,இருளப்பன், காளிமுத்து, விவேகானந்தர், கவுன்சிலர் பவானி, மகளிர் அணி செயலாளர்கள் விஜய ராணி, இசக்கியம்மாள், பூத் பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×