search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சட்டமன்றத்தொகுதியில் அ.தி.மு.க. பூத் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சட்டமன்றத்தொகுதியில் அ.தி.மு.க. பூத் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • பூத் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சட்ட மன்றத் தொகுதி பூத் பொறுப்பா ளர்கள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான ராஜலெட்சுமி கலந்து கொண்டார். கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 சட்டமன்ற தொகு திக்குட்பட்ட அனைத்து பூத் பகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றும் பூத் நிர்வாகி களை அந்தந்த பூத்களில் அமைத்தும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களை பூத் பணிகளில் பணி யாற்றிடவும், வெகு விரைவில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைத்து தலைமைக்கு விரைவில் வழங்கிட பணியாற்றிட வேண்டும். தற்போது நடைபெற்று வருகின்ற புதிய வாக்காளர் சேர்ப்பு முகாமில் 3 தொகு திக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பா ளர்கள் நேரடியாக சென்று வாக்காளர் சேர்ப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மருங்கூர் பேரூராட்சி பகுதியில் பூத் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மருங்கூர் பேரூராட்சி செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    இந்த கூட்டங்களில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சிவசெல்வராஜன், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு என்ற ஜெயசந்திரன், மாநில மகளிரணி துணை செயலாளர் ராணி, மாநில விவசாய அணி துணை செயலாளர் தாணு பிள்ளை, வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார், கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நரசிங்கமூர்த்தி, மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, கழக நிர்வாகிகள், ஊராட்சி சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×