search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth suicide"

    • போலீசார் சிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சந்தூர் மண்டலத்திற்குட்பட்ட தஸ்கானிகுடம் கிராமத்தை சேர்ந்தவர் சிவன் (வயது 25). இவர் அந்த பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி மைனர் பெண்ணின் தாயார் தஸ்கானிகுடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் அவரை அடித்து மிரட்டி உள்ளனர். மேலும் சித்ரவதை செய்தனர்.

    இதனால் மனமடைந்த சிவன் வீட்டுக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் சிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த வாகனத்தை சிவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

    சிவன் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர்.

    இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த 19-ந்தேதி காதலி திடீரென சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார்.
    • உயிருக்கு உயிராக காதலித்தவர் இறந்ததால் மிகவும் மனவேதனையில் தவித்தார்.

    பொன்னேரி:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோகித்குமார்(வயது21). கூலித்தொழிலாளி. இவர் மீஞ்சூரை அடுத்த கேசவபுத்தில் தங்கி வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க கட்டுமான பணியில் வேலைபார்த்து வந்தார். இவர் அவரது சொந்த ஊரில் உள்ள இளம்பெண்னை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி காதலி திடீரென சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் ரோகித்குமார் அதிர்ச்சி அடைந்தார். உயிருக்கு உயிராக காதலித்தவர் இறந்ததால் மிகவும் மனவேதனையில் தவித்தார். அவருக்கு உடன் இருந்த நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இதற்கிடையே அறையில் தனியாக இருந்த ரோகித்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து உடன் தங்கி இருந்தவர்கள் வந்த போது ரோகித்குமார் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடை கைப்பறி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதலி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் உடன் தங்கியிருந்த நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு வாரமாக மனைவி, குழந்தைகள் தன்னுடன் செல்போனில் பேசாததால் விரக்தியில் இருந்த ஜெகதீஷ் மாமியாருக்கு வீடியோ காலில் பேசினார்.
    • மனைவி, குழந்தைகளுடன் வேறு ஒரு நபருடன் சென்று விட்டதாக சந்தேகமடைந்த ஜெகதீஷ் மாமியாருடன் விரக்தியில் பேசினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கோனசீமா மாவட்டம், சகினேடி பள்ளியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 27). இவருக்கும் கிழக்கு கோதாவரி மாவட்டம், பாலக்கோடு மண்டலம், கோட்டப்பேட்டையை சேர்ந்த மானசா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஜானு (5), அனுஷா (3) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 13 மாதங்களுக்கு முன்பு ஜெகதீஷ் துபாய்க்கு வேலைக்கு சென்றார். ஜெகதீஷ் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றதால் மானசா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் தங்கி இருந்தார். வேலைக்கு சென்றது முதல் மனைவி குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசி வந்தார். கடந்த வாரம் மானசா தனது குழந்தைகளுடன் திடீரென காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஒரு வாரமாக மனைவி, குழந்தைகள் தன்னுடன் செல்போனில் பேசாததால் விரக்தியில் இருந்த ஜெகதீஷ் நேற்று முன்தினம் மாமியாருக்கு வீடியோ காலில் பேசினார். அப்போது அவரது மாமியார் மானசா மற்றும் அவரது குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார். இதனால் மனைவி, குழந்தைகளுடன் வேறு ஒரு நபருடன் சென்று விட்டதாக சந்தேகமடைந்த அவர் மாமியாருடன் விரக்தியில் பேசினார்.

    வீடியோ காலில் இருந்த அவர் திடீரென அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனைக் கண்ட அவரது மாமியார் கதறி துடித்தார். இதுகுறித்து ஜெகதீஷின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். மனைவி குழந்தைகளை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று தனது மகன் அவர்களாலேயே மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பத்தின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
    • வேலை பார்த்த இடத்தில் பணி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணை அடுத்த 200 அடி ரேடியல் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 13 மாடி உள்ள இந்த குடியிருப்பில் 9-வது தளத்தில் வசித்து வந்தவர் சம்பத் (வயது36). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் அடுக்கு மாடி குடியிருப்பின் 13-வது மாடிக்கு சம்பத் சென்றார். அவர் அங்கிருந்து திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சம்பத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு குடியிருப்பில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பத்தின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. வேலை பார்த்த இடத்தில் பணி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அடுக்குமாடி குடியிருப்பில் 13-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை சில ஆண்டுகளாக சேர்மன் காதலித்து வந்துள்ளார்.
    • காதல் தோல்வியில் முடிந்ததாக எண்ணி சேர்மன் சில நாட்களாக வேறு யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

    பாவூர்சத்திரம்:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சேர்மன்(25). இவர் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் சேர்மனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சேர்மன் தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதற்கு இரு வீட்டாரும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் தனது காதல் தோல்வியில் முடிந்ததாக எண்ணி சேர்மன் சில நாட்களாக வேறு யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தனது மாட்டு தொழுவத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று சேர்மன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகராஜ் வீட்டின் மாடி அறையில் தனது கையில் மின்வயரை சுற்றிக்கொண்டு சுவீட்சை போட்டார்.
    • தற்கொலை குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரியபுளியம்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா. இவரது மகன் சண்முகராஜ் (வயது 37). தொழிலாளியான இவருக்கு திருமணமாகிவிட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் சண்முகராஜ் விரக்தியில் இருந்துள்ளார். அடிக்கடி தனது தாயாரிடம் தனது மனைவியை சமரசம் செய்து சேர்த்து வைக்கும்படி கூறி உள்ளார்.

    இதுகுறித்து பலமுறை மல்லிகாவும் பேசி உள்ளார். ஆனால் மருமகள் வீட்டுக்கு வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகராஜ் வீட்டின் மாடி அறையில் தனது கையில் மின்வயரை சுற்றிக்கொண்டு சுவீட்சை போட்டார். இதில் கண்ணி மைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து சண்முக ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகாசி ஆயில் மில் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் காளிமுத்து (35). ஆட்டோ டிரைவரான இவர் அடிக்கடி மது குடித்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டின் மாடியில் காளிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தந்தை இறந்த நிலையில், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என விஜயக்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
    • விஜயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் போதுப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் விஜயக்குமார் (வயது 29). தொழிலாளி.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கந்தசாமி இறந்து விட்டார். விஜயக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    தந்தை இறந்த நிலையில், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர், நேற்று இரவு திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொடர்ந்து விளையாடி கொண்டே இருந்ததால் மதன்குமாருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.
    • கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் பார்வை குறைபாடு உண்டானது. இதனால் மதன்குமார் கடும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    குனியமுத்தூர்:

    கோவை வெள்ளலூர் கருப்புராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம் (வயது 55). தொழிலாளி.

    இவரது மனைவி நாகலட்சுமி(50). இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மதன்குமார்(25) என்ற மகன் உள்ளார்.

    இவர் பி.எஸ்(ஐ.டி) முடித்து விட்டு உரிய வேலை கிடைக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    வீட்டிலேயே இருந்ததால் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி கிடந்தார். அப்போது அவர் செல்போனில் ஆன்லைன் ரம்மி ஆப்பை டவுன்லோடு செய்து விளையாடி வந்துள்ளார்.

    முதலில் சாதாரணமாக விளையாடிய அவர், அதன் பின்னர் எந்த நேரமும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலேயே மூழ்கி அதற்கு அடிமையாகி விட்டார்.

    தொடர்ந்து விளையாடி கொண்டே இருந்ததால் மதன்குமாருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் பார்வை குறைபாடு உண்டானது. இதனால் அவர் கடும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இதன் காரணமாக மதன்குமார் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று சுப்பிரமணியம் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி நாகலட்சுமியும் வழக்கம் போல ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார்.

    அப்போது வீட்டில் மதன்குமார் மட்டும் தனியாக இருந்தார்.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த மதன்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாலையில் வேலைக்கு சென்ற நாகலட்சுமி வீட்டிற்கு வந்தார். அப்போது மகன் மதன்குமார் வீட்டிற்குள் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் இருந்த நிசாந்த் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • நிசாந்த் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் மனைவி அப்ரினை காதலித்து திருமணம் செய்து உள்ளார்.

    போரூர்:

    சென்னை, எம்.ஜி.ஆர். நகர், கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மகன் நிசாந்த் (வயது24). தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு நிசாந்த், கே.கே. நகர் பகுதியில் நண்பர்களுடன் குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர், தனது மோட்டார் சைக்கிளில் ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் நிலைய ஏட்டு பார்த்திபன் மற்றும் போலீஸ்காரர் கார்த்திக் ஆகியோர் நிசாந்த்தை நிறுத்தி விசாரித்தனர்.

    அப்போது அவர் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தது தெரிந்தது. இதையடுத்து மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக நிசாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அபராத தொகையை செலுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொள்ளும்படி கூறி வண்டியை பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து நிசாந்த் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார். நள்ளிரவு வீட்டுக்கு வந்த நிசாந்த் மோட்டார் சைக்கிளை போலீசார் பறித்து கொண்டதாகவும் காலையில் சென்று அபராத தொகை செலுத்த வேண்டும் என்று மனைவி அப்ரினிடம் கூறி புலம்பினார். மிகவும் மனவேதனையில் இருந்த அவருக்கு மனைவி ஆறுதல் கூறிவிட்டு தூங்கிவிட்டார்.

    இந்த நிலையில் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் இருந்த நிசாந்த் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் அப்ரின் எழுந்து பார்த்த போது கணவர் நிசாந்த் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நிசாந்த் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிசாந்த் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் மனைவி அப்ரினை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண்ணுடன் ஆபாசமாக இருப்பதுபோல் மார்பிங் வீடியோவை மனைவிக்கு அனுப்பியதால் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
    • ராஜேஷ் போட்டோவை மார்பிங் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், இப்ராகிம் பட்டணம் மண்டலம், சுராய பலேனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் இங்கிலாந்து பிரிட்ஜ் கோர்ஸ் நிறுவனத்தில் ஆலோசகராக வேலை செய்து வந்தார். ஆன்லைன் மூலம் இவர் லோன் ஆப்பில் கடன் வாங்கியுள்ளார்.

    வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி செலுத்தி உள்ளார். இருப்பினும் மேலும் ரூ 10 ஆயிரம் கட்ட வேண்டும் என லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் லோன் ஆப் நிறுவனத்தினர் போன் செய்தபோது போனை எடுக்காமல் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷ் வேறு ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போலவும் ஆபாசமான பெண்ணிடம் வீடியோ காலில் பேசுவது போலவும் போட்டோ, வீடியோவை மார்பிங் செய்து அவரது மனைவி ரத்தினகுமாரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தனர்.

    இதனை கண்ட ரத்தினகுமாரி, ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ராஜேஷ் லோன் ஆப் நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவர்கள் இதுபோன்று போட்டோ வீடியோவை மாப்பிங் செய்து அனுப்பியதாக மனைவியிடம் தெரிவித்தார்.

    லோன் ஆப் மூலம் வாங்கிய கடனை அந்த பெண்ணுக்கு தான் செலவு செய்தாயா? வேறு எதற்காக கடன் வாங்கினாய் என சண்டையிட்டார். மேலும் ரத்தினகுமாரி ராஜேஷிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ் நேற்று காலை நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மனைவிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கணவர் அனுப்பிய மெசேஜை பார்த்த ரத்தினகுமாரி அதிர்ச்சி அடைந்து அவருக்கு பலமுறை போன் செய்தார். ராஜேஷ் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது ராஜேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதை கண்டு அவர் கதறி துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இப்ராகிம் பட்டிணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் போட்டோவை மார்பிங் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சதீஷ்குமாருக்கு மாடு முட்டியதில் வயிற்றின் உள்பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி கீரமங்கலம் கிழக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27). இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரை மாடு முட்டியது. இதில் அவரது வயிற்றின் உள்பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் பூரண நலம் பெற முடியவில்லை. மேலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி முருகேசன் துறையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜல்லிக்கட்டு வீரர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்கேன் சென்டர் முன்பு ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்போது பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி:

    பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மரத்தில் இன்று காலை தூக்கு மாட்டிய நிலையில் ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றினர். அவர் பாக்கெட்டில் இருந்த ஒரு செல்போனில் கடைசியாக பேசிய எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர்.

    அப்போது இறந்தவர் கோவை சரவணம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணபாரதி (வயது 37) என தெரியவந்தது. இவர் எதற்காக பழனிக்கு வந்தார்? எங்கே வேலை பார்த்தார்? அரசு ஆஸ்பத்திரியில் யாரை பார்க்க வந்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்கேன் சென்டர் முன்பு ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்போது பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×