search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman molested"

    • இளம்பெண் முக்கோட்டி கோவில் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த காவலாளியிடம் சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்தார்.
    • காவலாளி உடனடியாக 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரி தொண்டவாடா வனப்பகுதிக்கு நேற்று இரவு ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை கடத்தி வந்து ஆட்டோவில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டார். இருப்பினும் அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

    அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த இளம்பெண் முக்கோட்டி கோவில் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த காவலாளியிடம் சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்தார். காவலாளி உடனடியாக 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    போலீசாரை கண்டதும் 4 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர்.

    போலீசார் அவர்களை விரட்டி சென்று இரவு முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து இளம்பெண் சந்திரகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணை கடத்திச்சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியை வாலிபர் ஒருவர் செல்போனில் லைவ் ஆக காட்டிய அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
    • காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

    போபால்:

    குவாலியூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கும் 20 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

    இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். மேலும் மாலை நேரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். காதலன் மீது இருந்த நம்பிக்கையில் அவள் தன்னையே அவனிடம் ஒப்படைத்தாள். இது தான் அவளுக்கு வினையாக முடிந்தது. ஒருநாள் அந்த வாலிபர் காதலியை ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றான். அவனுடன் நண்பன் ஒருவனும் சென்றான்.

    நண்பனுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு காதலன் வற்புறுத்தினான். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்தாள். இதனால் 2 பேரும் சேர்ந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பின்னர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உனது தந்தையையும், சகோதரரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். இதனால் பயந்து போன அந்த பெண் இதுபற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் மனசுக்குள்ளேயே வைத்து இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 2 பேரும் கடந்த ஒரு ஆண்டாக அவளை பாலியல் சித்ரவதை செய்து வந்தனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்தனர்.

    அதில் ஒருவன் அந்த பெண்ணை காதலன் கற்பழிப்பதை தனது நண்பர்களுக்கு செல்போனில் 'லைவ்' ஆக காட்டினான். இதனை அவர்கள் பார்த்து ரசித்து வந்தனர்.

    அதை அறிந்த அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தாள். ஆனால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி தங்களது ஆசைக்கு இணங்க வைத்தனர். இதனால் பயந்து போய் அவள் பெற்றோருக்கு கூட இதை சொல்லாமல் மறைத்து விட்டாள். இந்தநிலையில் அவளுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

    மாப்பிள்னை பார்த்து நிச்சயமும் செய்தனர். இந்த சூழ்நிலையில் இதை அறிந்த காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

    அதன் பிறகுதான் இளம்பெண்ணின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தது. இதுதொடர்பாக அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (31). ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் மாதவரத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் தீபன் சக்கரவர்த்தி வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    இதுபற்றி அந்தப் பெண் கேட்டதற்கு தீபன் சக்ரவர்த்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் தீபன் சக்ரவர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
    விருத்தாசலம் அருகே நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா பெரியகோட்டிமூளை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 26). இவரது நண்பர் விஜயேந்திரன். இவருக்கு 16 வயதில் காதலி ஒருவர் உள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி வாலிபர் சத்தியமூர்த்தி தனது நண்பனின் காதலியிடம் விஜயேந்திரன் கோவையில் வி‌ஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை பார்க்க வரும்படி அழைத்தார்.

    அதற்கு அந்த இளம்பெண் மறுத்து விட்டார். உடனே சத்தியமூர்த்தி வராவிட்டால் போலீஸ் வழக்கு பதிவாகிவிடும் என மிரட்டினார். இதனைத்தொடர்ந்து அந்த இளம்பெண் சத்தியமூர்த்தியுடன் கோவைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவரை திருப்பூருக்கு அழைத்து சென்று அங்கு வைத்து ஒரு வாரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர் தன் மகளை காணவில்லை என சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் ஸ்ரீமுஷ்ணம் பஸ்நிலையத்தில் சத்தியமூர்த்தி அந்த இளம்பெண்ணுடன் பஸ்சில் வந்து இறங்கினார். உடனே அங்கு நின்ற போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் மகிளா நீதீமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை வழக்கு விசாரணை தொடங்கியது. சத்தியமூர்த்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சத்தியமூர்த்திக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

    இந்தவழக்கில் அரசு சார்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நண்பரை தாக்கி துரத்தி விட்டு இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீசிட்டியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது. இங்கு இயங்கிவரும் செல்போன் தொழிற்சாலை ஒன்றில் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வி என்பவரும், (பெயர் மாற்றப்பட்டுள்ளது). காக்கிநாடாவை சேர்ந்த ராஜா என்பவரும் சேலை செய்து வருகின்றனர்.

    நண்பர்களான இவர்கள் 2 பேரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஸ்ரீசிட்டியில் இருந்து சூலூர்பேட்டை ரெயில் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் புக்காரா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக அவர்கள் அங்கு காத்திருந்தனர்.

    தனியாக இருந்த அவர்களை நோட்டமிட்ட 5 வாலிபர்கள் அங்கு சென்று ராஜாவை தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு அவரை அடித்து விரட்டினர்.

    பின்னர் இளம்பெண் செல்வியை தரதரவென தண்டவாளம் வழியாக இழுத்துச் சென்று ரெயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் கிடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே ரெயில் நிலையம் வழியாக ரோந்து சென்ற போலீசாரிடம் தனக்கும் இளம் பெண்ணுக்கும் நேர்ந்த கொடுமை குறித்து ராஜா கூறினார்.

    இதையறிந்த மர்ம கும்பல் செல்வியை வேறு இடத்துக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் சூலூர்பேட்டை நெடுஞ்சாலை அருகே நேற்று காலை அதிக ரத்தப்போக்குடன் செல்வி குற்றுயிருராக கிடந்துள்ளார்.

    இதைக் கண்ட போலீசார் உடனடியாக பெண் போலீசாரை அங்கு வரவழைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சூலூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து செல்வி புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சூலூர்பேட்டையை சேர்ந்த 5 வாலிபர்கள் குடிபோதையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்த டி.எஸ்.பி. பாபு ராஜேந்திரபிரசாத் கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட செல்வி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் அளித்த புகாரில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் பற்றிய சில விவரங்களை தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
    கும்பகோணம் அருகே இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஜவுளிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த திருபுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் சுமார் 21 வயது நிரம்பிய இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சின்னப்பா (வயது 43), சேக் முகைதீன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கற்பழிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜவுளிக்கடை உரிமையாளரை கைது செய்ய கோரி, இளம்பெண் தாய் மதுரை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி தஞ்சை மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனால் தலைமறைவாக இருந்து வந்த ஜவுளிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருபுவனம் சன்னதி தெருவை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரை தேடி பிடித்து இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். சென்னையில் தலைமறைவாக இருந்து வந்த அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் மேலும் விசாரணை நடத்துவதற்கு போலீசார், கும்பகோணத்துக்கு அழைத்து வருகின்றனர்.

    இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஜவுளிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஏற்காட்டிற்கு காதலனுடன் வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 டிரைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஏற்காடு:

    ஈரோட்டை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது32). திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது காதலியுடன் கடந்த 26-ந் தேதி ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தார்.

    இருவரும் ஏற்காட்டை சுற்றி பார்த்த பின்னர் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். அப்போது வாசுதேவன் மது அருந்தினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த காதலி தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு அண்ணா பூங்கா பகுதிக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து வாசுதேவன் வந்தார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜெரினாக்காட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயகுமார் (37), மற்றும் கார் ஓட்டுனர் ஆரோக்கியதாஸ் (32) ஆகிய இருவரும் வாசுதேவனின் காதலியிடம் என்ன தகராறு என நைசாக பேச்சு கொடுத்தனர்.

    அவர் பேசிக்கொண்டிக்கும் போது வாசுதேவன் அங்கு வந்தார். 2 பேரையும் போலீஸ் நிலையத்தில் கொண்டு விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றிய அவர்கள் வாசுதேவன் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து விட்டு அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளினர்.

    பின்னர் டிரைவர்கள் 2 பேரும் சேர்ந்து வாசுதேவனின் காதலியை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றனர், ஆரோக்கியதாஸ் பாதி வழியில் இறங்கிவிட்டார்.

    விஜயகுமார் ஏற்காட்டில் தனக்கு தெரிந்த தங்கும் விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். பின்னர் நேற்று அதிகாலை 1.45 க்கு அந்த பெண்ணை சேலம் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு ஏற்காடு வந்தார்.

    இது குறித்து வாசுதேவன் ஏற்காடு போலீஸ் நிலையத்திலும், வாசுதேவனின் காதலி சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் காவல் புகார் கொடுத்தனர்.

    ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஒண்டிக்கடை பகுதியில் இருந்த விஜயகுமார் மற்றும் ஆரோக்கியதாஸ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரனை நடத்தினர். மேலும் சேலம் ரூரல் டி.எஸ்.பி. சூர்ய நாரயணன் ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு வந்து அவர்களிடம் விசாரனை நடத்தினார்.

    விசாரணை முடிவில் விஜயகுமார் மீது கற்பழிப்பு, வழிப்பறி, மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும், ஆரோக்கியதாஸ் மீது வழிப்பறி, மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் இன்று சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  #Tamilnews
    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் கண்ணன் (வயது 22). இவர் பேஸ்புக் மூலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயதான ஒரு பெண்ணிடம் பழகினார். பின்னர் பேஸ்புக் மேசஞ்சர் மூலம் அவரிடம் இருந்து நைசாக செல்போன் எண்ணை வாங்கினார்.

    இதையடுத்து ராஜேஸ் கண்ணன் செல்போன் எண்ணை தனது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்- அப் மூலம் தொடர்பு கொண்டு பேசி நட்பை ஏற்படுத்தினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்து வந்தனர்.

    அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை ராஜேஸ் கண்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜேஸ் கண்ணனிடம் வற்புறுத்தினார். ஆனால் அவர், திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்த அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து கதறினார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    தன்னை காதலித்து ஏமாற்றிய ராஜேஸ்கண்ணன் மீது அவர் மல்லியக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×