search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் அருகே இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு- ஜவுளிக்கடை உரிமையாளர் கைது
    X

    கும்பகோணம் அருகே இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு- ஜவுளிக்கடை உரிமையாளர் கைது

    கும்பகோணம் அருகே இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஜவுளிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த திருபுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் சுமார் 21 வயது நிரம்பிய இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சின்னப்பா (வயது 43), சேக் முகைதீன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கற்பழிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜவுளிக்கடை உரிமையாளரை கைது செய்ய கோரி, இளம்பெண் தாய் மதுரை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி தஞ்சை மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனால் தலைமறைவாக இருந்து வந்த ஜவுளிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருபுவனம் சன்னதி தெருவை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரை தேடி பிடித்து இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். சென்னையில் தலைமறைவாக இருந்து வந்த அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் மேலும் விசாரணை நடத்துவதற்கு போலீசார், கும்பகோணத்துக்கு அழைத்து வருகின்றனர்.

    இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஜவுளிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×