search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup Soccer"

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது.
    • சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யாருமே எதிர் பார்க்காத வகையில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி பெனால்டி மூலம் கோல் அடித்தார். சவுதி அரேபியா தரப்பில் 48-வது நிமிடத்தில் சலோ அல்ஷெகரியும், 53-வது நிமிடத்தில் சலீம் அல்வாஸ்ரியும் கோல் அடித்தனர்.

    அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோற்றாலும் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அணி அடித்த 3 கோல்கள் ஆப்சைடாக அறிவிக்கப்பட்டது. மேலும் அர்ஜென்டினா வீரர்கள் அடித்த பல ஷாட்களை சவுதி அரேபியா கோல் கீப்பர் தடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

    32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு இத்தாலியில் 1990-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அந்த அணி ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. தற்போது ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்துள்ளது.

    இந்த தோல்வியால் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மிகுந்த வருத்தம் அடைந்தார். தோல்விக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் மனது வலிக்கிறது. 2-வது பாதி ஆட்டத்தில் 5 நிமிடங்கள் செய்த தவறு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 1-2 என்ற கோல் கணக்கில் பின் தங்கிய பிறகு அதில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது.

    சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். இந்த தோல்வியை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

    நாங்கள் கடினமாக போராடினோம். அதே நேரத்தில் தோல்விக்கு சாக்குகள் எதுவும் கூற விரும்பவில்லை. நாங்கள் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாட இருக்கிறோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சிப்போம்.

    இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.

    இந்த தோல்வியால் அர்ஜென்டினாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    அர்ஜென்டினா எஞ்சிய ஆட்டங்களில் மெக்சிகோ, போலந்துடன் மோத வேண்டி உள்ளது. இந்த இரண்டு ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தோற்றால் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி விடும்.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.

    முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    • நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • பிரான்ஸ் அணி பல வீனமான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று முதல் 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    லுசாயில் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் 'சி' பிரிவில் உள்ள அர்ஜென்டினா-சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. 2 முறை சாம்பியனான அந்த அணி உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. 18-வது உலக கோப்பையில் விளையாடும் அர்ஜென்டினா அணி சவுதியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகள் மோதிய 4 ஆட்டத்தில் அர்ஜென்டினா இரண்டில் வெற்றி பெற்றது. 2 போட்டி 'டிரா' ஆனது. 80 ஆயிரம் ரசிகர்கள் அமரும் ஸ்டேடியத்தில் போட்டி நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் 'டி' பிரிவில் உள்ள டென்மார்க்-துனிசியா அணிகள் மோதுகின்றன.

    ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த டென்மார்க் தர வரிசையில் 10-வது இடத்தில் உள்ளது. 6-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள துனிசியா 30-வது இடத்தில் இருக்கிறது. டென்மார்க் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. துனிசியா 'டிரா' செய்யும் வகையில் விளையாடும். அல்ரேயானில் உள்ள எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் போட்டி நடக்கிறது.

    இரு அணியும் இதற்கு முன்பு ஒரு முறை மோதிய ஆட்டத்தில் டென்மார்க் வெற்றி பெற்றது.

    3-வது ஆட்டம் இந்திய நேரப்படி 9.30 மணிக்கு தோகாவில் உள்ள ஸ்டேடி யம் 974-ல் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் உள்ள மெக்சிேகா-போலந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 8 ஆட்டத்தில் மோதியுள்ளன. மெக்சிகோ 3 ஆட்டத்திலும், போலந்து 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி 'டிரா' ஆனது.

    நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் 'டி' பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அல்வராகாவில் உள்ள அல் ஜனோபா மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.

    பிரான்ஸ் அணி பல வீனமான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும். அந்த அணி தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 38-வது வரிசையில் உள்ளது. இரு அணிகள் மோதிய 5 போட்டியில் பிரான்ஸ் 3-ல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் 'டிரா' ஆனது.

    • சவுதி அரேபியா, ஈரான், ஓமன், கத்தார், பஹ்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • துருக்கி நாட்டில் முட்டை விலையை இருமடங்காக உயர்த்தி விட்டது.

    நாமக்கல்:

    இந்திய அளவில் முட்டைகள் அதிகம் உற்பத்தியாகும் மண்டலமாக நாமக்கல் உள்ளது. இங்கு ஆயிரத்து நூறு கோழி பண்ணைகள் மூலம் நாள்தோறும் 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் சத்துணவு திட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து 80 சதவீத முட்டைகள் அனுப்பப்படுகின்றன.

    சவுதி அரேபியா, ஈரான், ஓமன், கத்தார், பஹ்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக அரேபிய நாடுகளான துபாய், ஓமன், கத்தாருக்கு மட்டும் மாதம் 1.50 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது கத்தார் நாட்டில் கடந்த 20-ம் தேதி தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த மாதம் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்க சுமார் 32 நாட்டு வீரர்களும், பார்வையாளர்களும் முகாமிட்டுள்ளனர் .இதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக துருக்கி, உக்கரைன் நாடுகளில் இருந்து கத்தாருக்கு முட்டை விற்பனைக்கு வரும். உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால் முட்டை கொள்முதல் தடைப்பட்டுள்ளது .

    இந்த நிலையில் துருக்கி நாட்டில் முட்டை விலையை இருமடமாக உயர்த்தி விட்டது. இதனால் நாமக்கல் மண்டலத்திலிருந்து முட்டைகள் கொள்முதல் செய்யும் பணியை கத்தார் மற்றும் பிற அரபிய நாடுகள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் மாதம் 1.50 கோடி முட்டைகள் என்ற நிலையானது தற்போது மாறி 4 கோடியாக அதிகரித்துள்ளது.

    கேரளாவில் ஏற்பட்ட பறவை காய்ச்சலால் முடங்கி கிடந்த கோழி பண்ணையாளர்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து நாமக்கல் மண்டல முட்டை ஏற்றுமதியாளரும் கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி பண்ணை உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் செந்தில் கூறியதாவது:-

    2010, 2018-ம் ஆண்டு வரையில் ஏற்றுமதியானது மிகவும் நலிவடைந்து இருந்தது. மொத்தமாகவே மாதத்தில் 1.50 கோடி முட்டைகள் தான் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின .தற்போது கத்தாரில் நடைபெறும் உலக கோப்பையால் அங்கு முட்டையின் தேவை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சென்று கொண்டிருந்த 50 லட்சம் முட்டைகள் என்பது 1.50 கோடியாக உயர்ந்துள்ளது. இதர அரபு நாடுகளுக்கு 2.50 கோடி முட்டைகள் அனுப்பப்படுகின்றன. தினசரி 3 கண்டெய்னர்களில் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    கால்பந்து போட்டிகள் முடிவடையும் வரையில் ஏற்றுமதி அதிகரித்து காணப்படும் .அதன்பிறகு படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. முட்டை ஏற்றுமதி மானியம் 7 சதவீ தத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைந்து விட்டது. இதனை மீண்டும் 7 சதவீதமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அப்படி சூழல் ஏற்பட்டால் முட்டை ஏற்றுமதி மீண்டும் வளர்ச்சி பெரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சியின் சிலையும் அவரது வீட்டை அலங்கரிக்கிறது.
    • உலக கோப்பை கால்பந்து நடக்கும் இந்த தருணத்தில் அவர் தனது வீட்டையும், 30 ஆண்டாக நடத்தும் டீ கடையையும் நீலநிறமாக மாற்றி விட்டார்.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் அர்ஜென்டினா அணிக்கு அந்த நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தீவிர ரசிகர் தனது வீடு, டீ கடை முழுவதையும் அர்ஜென்டினா அணியின் தேசிய கொடிக்குரிய நிறத்தில் வர்ணம் தீட்டி கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இச்சாபுர் என்ற ஊரை சேர்ந்தவர் ஷிப் ஷங்கர் பத்ரா (வயது 54). கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடியவர். 1986-ம் ஆண்டு அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்றதில் இருந்து அந்த அணியின் தீவிரமான ரசிகராக மாறி விட்டார்.

    உலக கோப்பை கால்பந்து நடக்கும் இந்த தருணத்தில் அவர் தனது வீட்டையும், 30 ஆண்டாக நடத்தும் டீ கடையையும் நீலநிறமாக மாற்றி விட்டார். சுற்றி அர்ஜென்டினா கொடிகள் கட்டப்பட்டு உள்ளன. நீல, வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் அவரது வீட்டில் எங்கு பார்த்தாலும் அர்ஜென்டினா அணி வீரர்களின் புகைப்படங்களே தென்படுகின்றன. அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சியின் சிலையும் அவரது வீட்டை அலங்கரிக்கிறது.

    இதை பார்க்கவே அவரது டீ கடைக்கு பலரும் படையெடுத்து வருகிறார்கள். 'அர்ஜென்டினா அணி என்றால் எனக்கு உயிர். மெஸ்சிக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டி. அவர் கோப்பையை வென்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதற்காக தினமும் பிரார்த்திக்கிறேன். அவரது 35-வது பிறந்த நாளை கேக் வெட்டி பெரிய அளவில் கொண்டாட இருக்கிறோம்' என்று பத்ரா குறிப்பிட்டார்.

    • 11-வது முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்க தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளது.
    • ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள செனகல் 18-வது தரவரிசையில் இருக்கிறது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் உள்ள அரபு நாடான கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், போட்டியை நடத்தும் கத்தார் உள்பட 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டிக்காக கடந்த 12 ஆண்டுகளில் கத்தார் அரசு 18 லட்சம் கோடி வரை செலவிட்டு உள்ளது. தலைநகர் தோகா, அல்கோரி, லுசைல், அல்ரேயான், அல்வர்க்கா ஆகிய நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டி நடைபெறுகிறது.

    நேற்றைய தொடக்க ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள ஈக்வடார்-கத்தார் அணிகள் மோதின. இதில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வாலென்சியா இந்த 2 கோல்களையும் அடித்தார்.

    2-வது நாளான இன்று 3 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு அல்ரேயானில் உள்ள கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன.

    தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஐரோப்பியா கண்டத்தில் உள்ள இங்கிலாந்து வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள ஈரான் 20-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தை வீழ்த்துவது சவாலானது. இதனால் 'டிரா' செய்ய ஈரான் போராடும். இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.

    2-வது ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது. தோகாவில் உள்ள அல்துமமா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள செனகல்-நெதர் லாந்து அணிகள் மோதுகின்றன.

    தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது. 3 முறை இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை இழந்த அந்த அணி செனகலுடன் ஒப்பிடுகையில் வலுவானதாகும்.

    ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள செனகல் 18-வது தரவரிசையில் இருக்கிறது. இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. அல்ரேயானில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    11-வது முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்க தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளது. 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பையில் களம் புகுந்துள்ளது. அந்த அணி தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்க கடுமையாக போராடும்.

    இரு அணியும் 2 முறை மோதி இருந்தன. இதில் 2003-ம் ஆண்டு மோதிய ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. 2020 போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா, தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி.

    தோகா:

    உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஏ பிரிவு - கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

    பி பிரிவு - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

    சி பிரிவு - அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

    டி பிரிவு - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

    இ பிரிவு - ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

    எப் பிரிவு - பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

    ஜி பிரிவு - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

    எச் பிரிவு - போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக் அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

    டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடக்கிறது.

    உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.

    தோகா:

    உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    1930-ம் ஆண்டு உருகுவேயில் உலக கோப்பை கால்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 13 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி உருகுவே சாம்பியன் பட்டம் பெற்றது.

    அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடந்து வருகிறது. இரண்டாம் உலக போர் காரணமாக 1942 மற்றும் 1946-ம் ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக உலக கோப்பை போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்தது. இதில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நாளை (20-ந் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன.

    இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் விவரம்:-

    கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ('ஏ' பிரிவு), இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் (பி), அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து (சி), பிரான்ஸ் ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா (டி), ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான் (இ), பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா (எப்), பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் (ஜி), போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா (எச்).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். டிசம்பர் 2-ந் தேதியுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக்அவுட்டுக்கு தகுதி பெறும்.

    டிசம்பர் 3 முதல் 6-ந் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

    டிசம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ந் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ந் தேதி நடக்கிறது.

    பிரேசில் அதிகபட்சமாக 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, இத்தாலி தலா 4 முறையும் அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே தலா 2 முறையும், இங்கிலாந்து, ஸ்பெயின் தலா 1 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

    4 முறை சாம்பியனான இத்தாலி இந்த முறையும் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

    உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.

    இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), லெவன்டோஸ்கி (போலந்து), எம்பாப்பே (பிரான்ஸ்), ரொனால்டோ (போர்ச்சுக்கல்), கெவின் டு புருயின் (பெல்ஜியம்), கரீம் பென்சிமா (பிரான்ஸ்), நெய்மர் (பிரேசில்), ஹாரிகேன் (இங்கிலாந்து), மோட்ரிச் (குரோஷியா) போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் முத்திரை பதிக்கும் வகையில் ஆடுவார்கள்.

    தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. 'ஏ' பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    தொடக்க விழாவில் பிரபல பி.டி.எஸ். பாடகர் ஜங்குக் மற்றும் அமெரிக்க குழுவான ஐட்பீஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து பாடகர் பதேகி வில்லியம்ஸ், நோரா பதவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். கொலம்பிய பாடகி ஷகிரா தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விலகினார்.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல்வேறு அணிகளுக்கு வரவேற்பு கொடுக்க கடந்த வாரம் கத்தார் நூற்றுக்கணக்கான போலி ரசிகர்களுக்கு பணம் வழங்கியது என செய்தி வெளியானது.
    • உலகக் கோப்பைக்கான மைதானங்களை கட்டமைக்கும்போது கத்தார் அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    கத்தாரில் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக அனைத்து நாடு வீரர்களும் கத்தார் வந்த வண்ணம் உள்ளனர்.

    அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் கத்தார் வந்தடைந்தபோது, அவர்கள் இந்திய ரசிகர்கள் டிரம்ப் வாசித்து வெகு விமர்சையாக வரவேற்றனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தது அனைவரையும் ஆச்சர்யமாக இருந்தது. மேலும், வரவேற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    இந்த நிலையில், ரசிகர்களை போட்டி அமைப்பாளர்கள் பணம் கொடுத்து அழைத்து வந்து வரவேற்பு அளித்தார் என விமர்சனம் எழுந்தது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என போட்டிக்கான உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.

    பல்வேறு அணிகளுக்கு வரவேற்பு கொடுக்க கடந்த வாரம் கத்தார் நூற்றுக்கணக்கான போலி ரசிகர்களுக்கு பணம் வழங்கியது என செய்தி வெளியானது. இதை கத்தார் மறுத்த நிலையில் தோகா வந்தடைந்த அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிக்கு நூற்றுக்கணக்கான இந்திய ரசிகர்கள் வரவேற்பு அளித்தது கேள்வியை எழுப்பியது. அவர்கள் போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்றிருக்கலாம் என செய்தி பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தள விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    கத்தாரில் வசிக்கும் புலம் பெயர்ந்தவர்களில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இவ்வாறு குவிந்தனரா? அல்லது அதிகாரிகளால் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதா? என்பது தெளிவாக புலப்படவில்லை என விளையாட்டு செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று, அங்கு கூடியிருந்த ரசிகர்களில் சிலரிடம், போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து பணம் வழங்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினோம். அப்படி ஏதும் இல்லை. நாங்கள் கேரளாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்கிலாந்து அணி மற்றும் பிரிமீயர் லீக் குறித்து தெளிவான தெரிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    போட்டிக்கான உயர்மட்ட குழு, ''உலகம் முழுவதிலுமிருந்து வரும் ரசிகர்கள் - அவர்களில் பலர் கத்தாரை தங்கள் வீடாக மாற்றியுள்ளனர். சமீபத்தில் உள்ளூர் சூழ்நிலைக்கு பங்களித்துள்ளனர். நாடு முழுவதும் ரசிகர்கள் அணிவகுப்புகளை ஏற்பாடு செய்து பல்வேறு தேசிய அணிகளை அவர்களது ஹோட்டல்களில் வரவேற்றனர்'' எனத் தெரிவித்துள்ளது.

    உலகக் கோப்பைக்கான மைதானங்களை கட்டமைக்கும்போது கத்தார் அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா, ஜப்பான், அர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே கத்தார் சென்று விட்டன.
    • உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் நேற்று காட்சி போட்டியில் விளையாடியது.

    தோகா:

    உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் வருகிற 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது. போட்டி தொடங்க இன்னும் 3 நாட்களே இருப்பதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்து உள்ளது. இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வளத்தால் அங்கு பணம் கொழிக்கிறது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக அந்நாட்டு அரசு கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து வருகிறது.

    உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் கத்தார் வந்த வண்ணமாய் உள்ளன. அமெரிக்கா, ஜப்பான், அர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே கத்தார் சென்று விட்டன.

    இந்த நிலையில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தோகா சென்றடைந்தன. அந்நாட்டு வீரர்களுக்கு கத்தாரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டு அணியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல்களுக்கு சென்று பிறகு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் நேற்று காட்சி போட்டியில் விளையாடியது. அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    • போட்டியில் களம் இறங்க மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
    • உலக கோப்பை கால்பந்தில் வாகை சூடுவது யார்? என்பதை கணிப்பது மிகவும் கடினம்.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

    அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் (இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) சந்திக்கின்றன. இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வரும் 35 வயதான நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சிக்கு (அர்ஜென்டினா) இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கலாம்.

    அவரிடம் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மெஸ்சி கூறுகையில், 'இது பற்றி விவாதிக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட அணிகள் குறித்து தான் நாம் பேசுகிறோம். மற்றவர்களை விட பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு சற்று வாய்ப்பு அதிகமிருப்பதாக நினைக்கிறேன்.

    ஆனால் உலக கோப்பை கால்பந்தில் வாகை சூடுவது யார்? என்பதை கணிப்பது மிகவும் கடினம். சவால் நிறைந்த இந்த போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். போட்டியில் களம் இறங்க மிகவும் ஆர்வமாக உள்ளோம். ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம்' என்றார். 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் அர்ஜென்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் சவுதிஅரேபியாவை 22-ந்தேதி எதிர்கொள்கிறது.

    • கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடி
    • 2018-ம் ஆண்டு ரஷியாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.

    தோகா:

    உலகின் 2-வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழா, உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018ம் ஆண்டு நடந்தது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 20-ந் தேதி கத்தாரில் தொடங்குகிறது. டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் கால்பந்து திருவிழா நடக்கிறது.

    இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெற்று உள்ளது. மீதமுள்ள 31 அணிகளும் தகுதி சுற்று மூலம் தேர்வு பெற்றன.

    இந்த 32 நாடுகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வோரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெரும்.

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் பரிசு தொகை விவரம் வெளியாகி உள்ளது. மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும். இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதலாகும். 2018-ம் ஆண்டு ரஷியாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.

    சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். 2-வது இடத்துக்கு ரூ.244 கோடி வழங்கப்படும். 3-வது இடத்துக்கு ரூ.219 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.203 கோடியும் கிடைக்கும்.

    கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடியும், 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

    ×