search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை ஏற்றுமதி"

    • கத்தாரில் நடந்துவரும் உலக கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
    • ஜனவரி மாதத்திற்குள் மேலும் 2 கோடி முட்டைகள் வரை கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக ஏற்றுமதியாளர் டாக்டர் பி.வி.செந்தில் கூறினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து குவைத், ஈரான், கத்தார், மாலத்தீவு, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கத்தாரில் நடந்துவரும் உலக கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

    முன்னதாக கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக அது 1½ கோடி முட்டைகளாக கடந்த மாதம் உயர்ந்தது.

    தற்போது மேலும் சுமார் 1 கோடி முட்டைகள் கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 2 கோடியே 50 லட்சம் முட்டைகள் நாமக்கல் மண்டலத்தில் இருந்து கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், வருகிற ஜனவரி மாதத்திற்குள் மேலும் 2 கோடி முட்டைகள் வரை கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாகவும் ஏற்றுமதியாளர் டாக்டர் பி.வி.செந்தில் கூறினார்.

    • சவுதி அரேபியா, ஈரான், ஓமன், கத்தார், பஹ்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • துருக்கி நாட்டில் முட்டை விலையை இருமடங்காக உயர்த்தி விட்டது.

    நாமக்கல்:

    இந்திய அளவில் முட்டைகள் அதிகம் உற்பத்தியாகும் மண்டலமாக நாமக்கல் உள்ளது. இங்கு ஆயிரத்து நூறு கோழி பண்ணைகள் மூலம் நாள்தோறும் 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் சத்துணவு திட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து 80 சதவீத முட்டைகள் அனுப்பப்படுகின்றன.

    சவுதி அரேபியா, ஈரான், ஓமன், கத்தார், பஹ்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக அரேபிய நாடுகளான துபாய், ஓமன், கத்தாருக்கு மட்டும் மாதம் 1.50 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது கத்தார் நாட்டில் கடந்த 20-ம் தேதி தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த மாதம் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்க சுமார் 32 நாட்டு வீரர்களும், பார்வையாளர்களும் முகாமிட்டுள்ளனர் .இதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக துருக்கி, உக்கரைன் நாடுகளில் இருந்து கத்தாருக்கு முட்டை விற்பனைக்கு வரும். உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால் முட்டை கொள்முதல் தடைப்பட்டுள்ளது .

    இந்த நிலையில் துருக்கி நாட்டில் முட்டை விலையை இருமடமாக உயர்த்தி விட்டது. இதனால் நாமக்கல் மண்டலத்திலிருந்து முட்டைகள் கொள்முதல் செய்யும் பணியை கத்தார் மற்றும் பிற அரபிய நாடுகள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் மாதம் 1.50 கோடி முட்டைகள் என்ற நிலையானது தற்போது மாறி 4 கோடியாக அதிகரித்துள்ளது.

    கேரளாவில் ஏற்பட்ட பறவை காய்ச்சலால் முடங்கி கிடந்த கோழி பண்ணையாளர்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து நாமக்கல் மண்டல முட்டை ஏற்றுமதியாளரும் கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி பண்ணை உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் செந்தில் கூறியதாவது:-

    2010, 2018-ம் ஆண்டு வரையில் ஏற்றுமதியானது மிகவும் நலிவடைந்து இருந்தது. மொத்தமாகவே மாதத்தில் 1.50 கோடி முட்டைகள் தான் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின .தற்போது கத்தாரில் நடைபெறும் உலக கோப்பையால் அங்கு முட்டையின் தேவை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சென்று கொண்டிருந்த 50 லட்சம் முட்டைகள் என்பது 1.50 கோடியாக உயர்ந்துள்ளது. இதர அரபு நாடுகளுக்கு 2.50 கோடி முட்டைகள் அனுப்பப்படுகின்றன. தினசரி 3 கண்டெய்னர்களில் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    கால்பந்து போட்டிகள் முடிவடையும் வரையில் ஏற்றுமதி அதிகரித்து காணப்படும் .அதன்பிறகு படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. முட்டை ஏற்றுமதி மானியம் 7 சதவீ தத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைந்து விட்டது. இதனை மீண்டும் 7 சதவீதமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அப்படி சூழல் ஏற்பட்டால் முட்டை ஏற்றுமதி மீண்டும் வளர்ச்சி பெரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • துருக்கியில் முட்டை விலை அதிகரித்துள்ளதால், இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளது.
    • கத்தாரில் அடுத்தவாரம் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்குகிறது. அதற்காக, ஏராளமான சுற்றுலா பயணிகள் கத்தாருக்கு வர உள்ளனர்.

    நாமக்கல்:

    தேசிய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. நாமக்கல்லில் இருந்து, 2007-08ம் ஆண்டில், பக்கின், ஓமன், குவைத், கத்தார் உள்ளிட்ட, 11 வளைகுடா நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளுக்கும், மாதம்தோறும் 12 முதல் 15 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

    இந்நிலையில் 6 மாதமாக இருந்த காலாவதியை, 3 மாதங்களாக குறைக்கப்பட்டதால் இந்திய முட்டைகள் ஏற்றுமதி செய்வது குறைக்கப்பட்டது.

    மேலும், பறவை காய்ச்சல் நோயற்ற முட்டை உற்பத்தி மண்டலங்கள், இதுவரை இந்தியாவில் ஏற்படுத்தவில்லை, அதன் காரணமாகவும், ஐரோப்பிய நாடுகளில் நிர்பந்தத்தாலும், குவைத், ஈரான், துபாய் போன்ற கல்ப் நாடுகளுக்கு 12 ஆண்டுகளாக முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

    ஐரோப்பிய நாடுகள் தங்களது சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலைக்கு முட்டையை இறக்குமதி செய்து, வளைகுடா நாடுகளுக்கு நிர்பந்தம் செய்ததால், இந்திய முட்டை எற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதன் காரணமாகவும் முட்டை ஏற்றுமதி நடைபெறவில்லை. தற்போது, துருக்கியில் முட்டை விலை அதிகரித்துள்ளதால், இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளது.

    இதையடுத்து ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், கத்தார், பக்ரின், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு மட்டுமே மாதம்தோறும் 1.50 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக துருக்கி முட்டை கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது. அதனால், குறைந்த விலையில் உள்ள, இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளது.

    மேலும், கத்தாரில் அடுத்தவாரம் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்குகிறது. அதற்காக, ஏராளமான சுற்றுலா பயணிகள் கத்தாருக்கு வர உள்ளனர். அதனால், முட்டை தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இந்தியாவில் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தற்போது மாதத்துக்கு 5 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதுள்ள கொள்முதல் விலை ஒரே சீராக இருக்கும்பட்சத்தில், ஏற்றுமதியும் வரும், 2023 ஜனவரி வரை நீடிக்கும்.

    மத்திய, மாநில அரசுகள் நாமக்கல் மாவட்டத்தை, பறவை காய்ச்சல் நோயற்ற முட்டை உற்பத்தி மண்டலமாக அறிவித்து சான்றிதழ் வழங்கி, அனைத்து பண்ணையாளர்களும் ஏற்றுமதி செய்யும் வகையில், உருவாக்கி தர வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

    இதன் மூலம் இந்திய முட்டைகள் ஏற்றுமதி முழுவதும் செய்வதற்கு வாய்ப்பாக அமைவதுடன் பண்ணையாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    ×