search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup football"

    • உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,
    • 35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியோடு அதாவது டிசம்பர் 18 ஆம் தேதி ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார். அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்றைய போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

    உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அடுத்த தொடர் வருவதற்கு பல வருடங்கள் ஆகும், என்னால் அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். இப்படி முடித்து கொள்வதே சிறந்தது என அவர் கூறினார்.

    35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.
    • மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இதனை அடுத்து 7-வது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.

    இந்நிலையில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் டிசம்பர் 18 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் தகுதி பெற்ற குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கனவு தகர்ந்தது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 3-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றது.
    • இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரைஇறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது, மொராக்கோ.

    தோகா

    22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு (புதன்கிழமை) அல்பேத் ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. 2-வது ரவுண்டில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் பதம் பார்த்து அரைஇறுதியை எட்டியிருக்கிறது.

    பிரேசில் வெளியேறிய நிலையில் இப்போது அனைவரது கவனமும் பிரான்ஸ் பக்கம் திரும்பியிருக்கிறது. அதுவே அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். 1962-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை தக்க வைக்கும் முதல் அணி என்ற மகத்தான சாதனையை நோக்கி பயணிக்கும் பிரான்ஸ் அணிக்கு கிலியன் எம்பாப்பே (5 கோல்), ஒலிவியர் ஜிரூட் (4 கோல்), கோல் வாய்ப்புகளை உருவாக்கும் கிரீஸ்மான் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்கள். களத்தில் மின்னல் வேகத்தில் ஓடும் இவர்கள் சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் பந்தை வலைக்குள் தள்ளிவிடுவதில் கில்லாடிகள். கேப்டனும், கோல் கீப்பருமான ஹூகோ லோரிசும் அணியின் கட்டமைப்புக்கு பக்கபலமாக இருக்கிறார்.

    பிரான்ஸ் வீரர் ஜூலஸ் கோன்டோ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இது கடினமும், பரபரப்பும் நிறைந்த ஆட்டமாக இருக்கும். ஒரு அணியாக அற்புதமான பயணத்தை மேற்கொண்டு வரும் அவர்கள் சில பெரிய அணிகளை வெளியேற்றி இருக்கிறார்கள். அதனால் மொராக்கோவை நாங்கள் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்வோம். பந்து வசம் இருக்கிறதோ இல்லையோ நாங்கள் மிக தீவிரமாகவும், வேகமாகவும் செயல்பட வேண்டியது அவசியமாகும். அப்போது தான் அவர்களின் வலுவான தற்காப்பு வளையத்தை தகர்த்து முன்னேற முடியும்' என்றார்.

    இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரைஇறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது, மொராக்கோ. அரைஇறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சரித்திர சிறப்பும் உண்டு.

    லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பெற்ற மொராக்கோ 2-வது சுற்றில் கோல் ஏதும் போடாத நிலையில் பெனால்டி ஷூட்-அவுட்டில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை சாய்த்தது. மொராக்கோ கோல் கீப்பர் யாசின் போனோ ஸ்பெயினின் ஷாட்டுகளை எல்லாம் முறியடித்து ஹீரோவாக பிரகாசித்தார். தொடர்ந்து கால்இறுதியில் ஒரே கோலில் போர்ச்சுகலின் கனவை சிதைத்தது.

    நடப்பு தொடரில் 5 கோல்கள் அடித்துள்ள மொராக்கோ ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது. அதுவும் சுயகோல் தான். இதன் மூலம் அவர்களின் தற்காப்பு ஆட்டம் எந்த அளவுக்கு பலமிக்கதாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். அந்த அணியில் யூசப் இன் நெசைரி (2 கோல்), அச்ராப் ஹகிமி, ஹகிம் ஜியேச் ஆகியோர் சிறப்பாக ஆடுகிறார்கள். ஏராளமான மொராக்கோ ரசிகர்கள் குவிந்திருப்பதால் அவர்களின் ஆர்ப்பரிப்பு அந்த அணிக்கு உந்துசக்தியாக இருக்கும்.க்

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 நட்புறவு ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. உலகக் கோப்பையில் இவர்கள் மல்லுகட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ, தாக்குதல் பாணியை கையாளும் பிரான்சுக்கும் அதிர்ச்சி அளிக்குமா அல்லது மொராக்கோவின் தடுப்பு அரணை உடைத்து பிரான்ஸ் 4-வது முறையாக இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • முதல் கோல் அடித்து வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார் மெஸ்சி.
    • முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போடுவதற்கு அர்ஜென்டினா வீரர்கள் தீவிரம் காட்டினார்.

    34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 39 வது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு வீரர் ஜூலியன் அல்வொரஸ் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


    2வது பாதியின் 69 வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை குரோஷியா வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா 6வது முறையாக உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 

    • லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன்.
    • 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

    தோகா:

    பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நேற்று அளித்த பேட்டியில், 'உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்- பிரான்ஸ் அணிகள் மோதும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. இப்போது பிரேசில் வெளியேறி விட்டது. இனி பிரான்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது.

    தடுப்பாட்டம், தாக்குதல், நடுகளம் என்று எல்லா வகையிலும் நிலையான ஒரு அணியாக இருக்கிறது. கிலியன் எம்பாப்பே, இந்த உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி வருகிறார். உடல் மற்றும் தொழில்நுட்ப அளவில் அவரது தரம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுக்கலாம்' என்றார்.

    லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன், ஆனால் ஒரு பிரேசில் வீரராக அல்ல' என்றும் குறிப்பிட்டார். 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

    • குரோஷியா அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.
    • அர்ஜென்டினா அணி அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்ததில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது.

    கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா, இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அந்த அணி எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை. 1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா, அரை இறுதி ஆட்டங்களில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை.

    அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி தமது நாட்டிற்கு உலகக் கோப்பையை பெற்று தர இதுவே கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
    • உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை.

    லுசைல்:

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் , 2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா , ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 4 நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத் தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை. 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

    அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 9 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அரைஇறுதியில் அந்த அணி தோற்றது கிடையாது.

    குரோஷியா பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பினகளத்தில் பலவீனமாக காணப்படுகிறது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. கடைசி நிமிடங்களில் 2 கோல் வாங்கி இருந்தது. இதனால் பின் களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    நட்சத்திர வீரர் மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் 4 கோல்கள் அடித்துள்ளார். முக்கியமான அரைஇறுதியில் அவர் வீரர்களை ஒருங்கிணைப்பது அவசியமானதாகும்.

    ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் , மார்டினஸ் , மொலினா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். கோல்கீப்பர் மார்ட்டினஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். நடுகள வீரர் அகுனா மஞ்சள் அட்டை பெற்றதால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது.

    உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

    மொராக்கோ, பெல்ஜியத்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றில் ஜப்பானையும் , கால் இறுதியில் பிரேசிலையும் பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 6 கோல் போட்டுள்ளது. 3கோல் வாங்கியுள்ளது.

    சிறந்த வீரர்களை கொண்ட குரோஷியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு நுழையும் வேட்கையில் உள்ளது. 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலக கோப்பையில் அந்த அணி அரைஇறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச் , கிராமரிச், பெரிசிச் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். நடுகளம், பின்களத்தில் அந்த அணி மிகவும் வலுவாக இருக்கிறது.

    இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அர்ஜென்டினா 2 ஆட்டத்திலும், குரோஷியா 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    உலக கோப்பையில் மோதிய 2 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. 1998 உலக கோப்பையில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கிலும் , கடந்த உலக கோப்பையில் குரோஷியா 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றன. இதற்கு அர்ஜென்டினா நாளை பழிவாங்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

    அர்ஜென்டினாவும், குரோஷியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    நாளை மறுநாள் (14-ந் தேதி) நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

    • போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை.
    • எனது அணியினரையோ, எனது நாட்டையோ ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் போர்ச்சுக்கல் உலக கோப்பையை வெல்லும் என்ற தன்னுடைய கனவு முடிவுக்கு வந்து விட்டதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

    போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். கனவு இருக்கும் வரை அழகாக இருந்தது. இந்த கனவுக்காக நான் கடுமையாக போராடினேன். துரதிஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது.

    போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எப்போதும் ஒரு (போர்த்துகீசியம்) இலக்கிற்காக போராடி வருகிறேன். எனது அணியினரையோ அல்லது எனது நாட்டையோ நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன். 16 ஆண்டுகளுக்கும் மேலாக நான் விளையாடிய 5 உலகக் கோப்பை ஆட்டங்களில், எப்போதும் மில்லியன் கணக்கான போர்ச்சுகீசியர்களின் ஆதரவிலும், நான் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன்.

    எப்போதும் அனைவரின் நோக்கத்திற்காக போராடும் ஒருவனாக இருக்கிறேன். இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு நல்ல ஆலோசகராக இருந்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது. நன்றி போர்ச்சுகல், நன்றி, கத்தார். இவ்வாறு ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

    போர்ச்சுக்கல் அணிக்காக 5 உலக கோப்பை தொடர்களில் ரொனால்டோ விளையாடி உள்ளார். இந்நிலையில் அடுத்த உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. அப்போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகி விடும் என்பதால் அதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • கூடுதல் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
    • பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் 3-4 என்ற கணக்கில் நெதர்லாந்து தோல்வி.

    கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு லுசைல் கால்பந்து மைதானத்தில் தொடங்கிய 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது நிமிடத்தில்அர்ஜெண்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.

    2 வது பகுதியின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அர் ஜென்டினாவுக்கான 2-வது கோலை அடித்தார். இதனால் வெற்றி அர்ஜென்டினா பக்கம் இருந்தது. எனினும் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 வது நிமிடத்தில் தமது அணிக்காக முதல் கோலை அடித்தார். தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போது 11 நிமிடங்களில் அவரே இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார்.

    கூடுதல் நேர ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

    • பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 கோல் கணக்கில் குரோஷியா வெற்றி
    • உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது பிரேசில்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு 8.30 மணிக்கு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியினான பிரேசில் அணி, குரோஷியாவை எதிர் கொண்டது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்ட நிறைவுவரை இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

    இந்நிலையில் கூடுதல் ஆட்ட நேரத்தின்போது 106 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கோல் அடித்தார். தொடர்ந்து 117வது நிமிடத்தில் குரோஷியா தரப்பில் புருனோ பெகோவிக் ஒருகோல் அடித்ததால் ஆட்டம் சமனில் ஆடிந்தது. இதையெடுத்து பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்திய குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • 2 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
    • சிறந்த வீரர்களை கொண்ட நெதர்லாந்து 6-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது.

    லுசைல்:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ், பிரேசில் அர்ஜென்டினா, இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், குரோஷியா, மொராக்கோ ஆகிய நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

    இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் கால்இறுதி ஆட்டத்தில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில்-ஜரோப்பாவில் இருக்கும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. பிரேசில் 12-வது தடவையாகவும், குரோஷியா 3-வது முறையாகவும் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன.

    இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால்இறுதி போட்டி நடக்கிறது. லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத்தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித் தது. அந்த அணி 7 கோல் போட்டுள்ளது. 3 கோல் வாங்கியுள்ளது.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக அரைஇறுதிக்கு தகுதிபெறுமா ? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது.

    முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பின்களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் வீரர்களை ஒருங்கிணைத்து கொண்டு முன்னோக்கி செல்வது முக்கியமானது.

    மெஸ்சி 3 கோல்கள் அடித்துள்ளார். ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி செனகல் (2-0), கத்தார் ( 2-0 ) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. ஈக்வடாருடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. 2-வது சுற்றில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. அந்த அணி 8 கோல் போட்டுள்ளது. 2 கோல் வாங்கியுள்ளது.

    சிறந்த வீரர்களை கொண்ட நெதர்லாந்து 6-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. அந்த அணியில் காக்போ ( 3 கோல்) , டிபே, கிளாசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய போட்டியில் அர்ஜென்டினா 3-ல், நெதர்லாந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா ஆனது. உலக கோப்பையில் மோதிய 5 போட்டியில் இரு அணிகளும் தலா 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    அர்ஜென்டினாவும், நெதர்லாந்தும் அரை இறுதிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    • பிரேசில் அணி இதுவரை குரோஷியாவிடம் தோற்றது இல்லை.
    • நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கிய இந்த போட்டி தற்போது விறு விறுப்பான நிலைக்கு சென்றுள்ளது.

    32 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றன. கடந்த 2-ந்தேதியுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் 16 நாடுகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறின. 2-வது சுற்று ஆட்டங்கள் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடந்தது.

    2-வது சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், 5 முறை உலக கோப்பையை வென்ற பிரேசில், 2 தடவை சாம்பியனான அர்ஜென்டினா, 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 3 முறை 2-வது இடத்தை பிடித்த நெதர்லாந்து, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா, 1966-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல், ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 8 நாடுகள் கால் இறுதிக்கு முன்னேறின.

    அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, செனகல், ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகியவை 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை 2 கால் இறுதியும், சனிக்கிழமை 2 கால் இறுதி ஆட்டமும் நடக்கிறது.

    நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில்-குரோஷியா அணிகள் மோதுகின்றன. அல்ரையானில் உள்ள எஜிகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.

    பிரேசில் அணி 'லீக்' ஆட்டங்களில் செர்பியாவை 2-0 என்ற கணக்கிலும், சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

    கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. 2-வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அந்த அணி 7 கோல்கள் போட்டுள்ளன. 2 கோல்கள் வாங்கியுள்ளது.

    பிரேசில் அணி குரோஷியாவை வீழ்த்தி 12-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது. ஜெர்மனி அணி தான் அதிகபட்சமாக 13 தடவை அரைஇறுதிக்கு நுழைந்து இருந்தது. 4 முறை சாம்பியனான அந்த அணி கடந்த 2 உலக கோப்பையிலும் 'லீக்' சுற்றிலேயே வெளியேறியது.

    கடந்த உலக கோப்பையில் பிரேசில் அணி கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. அது மாதிரியான நிலைமை தற்போது வந்து விடக் கூடாது என்பதில் அந்த அணி கவனமாக இருக்கும்.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பிரேசில் அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ரிச்சர்லிசன் 3 கோல் அடித்து முத்திரை பதித்து உள்ளார்.

    நெய்மர், வின்சியஸ் ஜூனியர், கேசிமிரோ, கேப்டன் தியோகோ சில்வா போன்றோரும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையாக கருதப்படும் பிரேசில் அணி குரோஷியாவை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். அந்த அணி இதுவரை குரோஷியாவிடம் தோற்றது இல்லை.

    குரோஷியா அணி 3-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் தழுவவில்லை. குரூப் போட்டிகளில் கனடாவை 4-1 என்ற கணக்கில் வென்றது. மொராகோ, பெல்ஜியத்து டன் கோல் எதுவுமின்றி 'டிரா' செய்தது

    2-வது சுற்றில் பெனால்டி ஷீட் அவுட்டில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச், பெரிசிக் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பிரேசில் 3-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. 2006 உலக கோப்பையில் 1-0 என்ற கோல் கணக்கிலும், 2014 உலக கோப்பையில் 3-1 என்ற கணக்கிலும் பிரேசில் வெற்றி பெற்று இருந்தது.

    நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    ×