search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker dead"

    • திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வந்த கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதின.
    • விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44) கட்டுமான தொழிலாளி. இவர் தனது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோருடன் திருத்தணி அடுத்த பந்திக்குப்பம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    திருவள்ளூர் அருகே கனகவல்லிபுரம் கிராமத்தில் வந்தபோது, திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வந்த கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதின. அந்த நேரத்தில் பின்னால் சுரேஷ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கூரியர் வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் மனைவி கண்முன்பே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் கூரியர் வேன் டிரைவர் பண்ருட்டி, மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த ஜான்மரியதாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயம்அடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒரு தோட்டத்தின் அருகில் பதுங்கி இருந்த யானை ஒன்று ராஜப்பனை பின்தொடர்ந்து விரட்டி வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானை மிதித்து உயிரிழந்த ராஜப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை ஆனைகட்டி அருகே தூமனூரை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது43). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜப்பன் சம்பவத்தன்று வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்றார்.

    பின்னர் மாலையில் வேலை முடிந்து மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். தூமனூர், செம்புக்கரை பிரிவு வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தின் அருகில் பதுங்கி இருந்த யானை ஒன்று ராஜப்பனை பின்தொடர்ந்து விரட்டி வந்தது.

    இதனால் அதிர்ச்சியான அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் அதற்குள்ளாகவே அந்த யானை விரட்டி சென்று துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானை மிதித்து உயிரிழந்த ராஜப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு ஒன்றை எடுத்து வெடித்த போது, அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது.
    • சாதிக்அலி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலி்ல் ஜாத்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கியது.

    இதில் கடந்த 2-ந்தேதி மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற்றது. அப்போது வான வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி (36) மற்றும் ஊழியர் சஞ்சீவி ஆகியோர் ஏராளமான பட்டாசுகளை காலியான இடத்தில் வைத்திருந்தனர்.

    அப்போது அதில் இருந்த பட்டாசு ஒன்றை எடுத்து வெடித்த போது, அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது. இதில் அங்கிருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்த பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலிக்கு இடது கால் சிதைந்தது. ஊழியர் சஞ்சீவி உடல் முழுவதும் கருகினார்.

    அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சாதிக்அலி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சாதிக்அலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சஞ்சீவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுப்பையா கடந்த 15 மாதங்களாக கட்டிய ரூ.50ஆயிரம் பணத்தை திருப்பி தருமாறு செல்வத்திடம் கேட்டு வந்தார்.
    • மனவேதனை அடைந்த சுப்பையா கடந்த 30-ந் தேதி தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு செல்வத்தின் அலுவலகத்திற்கு வந்தார்.

    போரூர்:

    சென்னை கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது56). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.

    இவர் எம்.ஜி.ஆர் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செல்வம் என்பவர் நடத்தி வந்த ரூ.1 லட்சம் ஏலசீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார். ஆனால் அவரால் தொடர்ந்து சீட்டு பணம் கட்ட முடியவில்லை என்று தெரிகிறது.

    இதனால் சுப்பையா கடந்த 15 மாதங்களாக கட்டிய ரூ.50ஆயிரம் பணத்தை திருப்பி தருமாறு செல்வத்திடம் கேட்டு வந்தார்.

    ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுப்பையா கடந்த 30-ந் தேதி தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு செல்வத்தின் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென தீக்குளித்தார். மேலும் அவரை தடுக்க முயன்ற அங்கிருந்த பெண் ஊழியர் காயத்ரி என்பவரையும் எரியும் தீயுடன் சுப்பையா பிடித்துக் கொண்டார்.

    இதில் இருவரும் உடல் கருகி பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பையா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெண் ஊழியர் காயத்ரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 21-ந்தேதி இரவு தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென கோட்டிங் எந்திரம் வெடித்து தீ பரவியது.
    • திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காடரம்பாக்கம் பகுதியில் கார் சைலன்சர்களுக்கு கோட்டிங் அடிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கடந்த 21-ந்தேதி இரவு தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென கோட்டிங் எந்திரம் வெடித்து தீ பரவியது. இதில் அருகில் இருந்த தொழிலாளர்களான காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த மதன் குமார் (வயது26). திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி(36), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் (19), புத்தாராய் (26),ரஞ்சித் (26) ஆகிய 5 பேருக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டது.

    அவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கோவில் குளத்தில் தேடியும் ஞானசேகரனை கண்டுபிடிக்க முடியவில்லை.
    • இன்று அதிகாலை கோவில் குளத்தில் ஞானசேகர் உடல் பிணமாக மிதந்தது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை சேர்ந்தவர் ஞான சேகரன் (வயது27). இவர் அங்குள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தில் தற்காலிகமாக மொட்டை அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு முதல் ஞானசேகரன் திடீரென மாயமானார். அவரது துணி மட்டும் கோவில் குளக்கரை படிக்கட்டில் இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த கோவில் ஊழியர்கள் இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கோவில் குளத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கோவில் குளத்தில் ஞானசேகர் உடல் பிணமாக மிதந்தது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஞானசேகரன் கோவில் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வன விலங்குகள் வராமல் இருப்பதற்காகவும், தேங்காய் திருட்டை தடுக்கவும் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
    • தினமும் இரவு மின்வேலியை இயக்கி விட்டு மறுநாள் காலை மோகன்ராஜ் ஆப் செய்வது வழக்கம்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி (வயது50). சுமை தூக்கும் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள சதானந்தபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (42). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    நண்பர்களான 2 பேரும் இன்று காலை அங்குள்ள மோகன்ராஜ் (60) என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றனர். வன விலங்குகள் வராமல் இருப்பதற்காகவும், தேங்காய் திருட்டை தடுக்கவும் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.

    தினமும் இரவு அதனை இயக்கி விட்டு மறுநாள் காலை மோகன்ராஜ் ஆப் செய்வது வழக்கம். ஆனால் இன்று அதை மறந்து விட்டார். இதற்கிடையில் தோட்டத்து கிணற்றில் குளிக்க வந்த முனியசாமி, சீனிவாசன் ஆகியோர் மின்வேலியை தொட்டதாக தெரிகிறது.

    இதில் மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 2 பேர் இறந்து கிடப்பதை பார்த்து வச்சக்காரப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சீக்னாங்குப்பம் பகுதியில் நடைபெறும் கட்டிட பணியில் லோகேஷ் வேலை பார்த்து வந்தார்.
    • முதல் மாடியில் பணியில் இருந்த போது லோகேஷ் கால் தவறி கீழே விழுந்தார்.

    மாமல்லபுரம்:

    வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 40). வெல்டரான இவர், கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சீக்னாங்குப்பம் பகுதியில் நடைபெறும் கட்டிட பணியில் வேலை பார்த்து வந்தார். முதல் மாடியில் பணியில் இருந்த போது கால் தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலை குப்புற விழுந்ததால் கழுத்து ஒடிந்து சம்பவ இடத்திலேயே லோகேஷ் பலியானார். இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் உள்ளது. இந்த ஆம்புலன்சை ஆலங்குளத்தை சேர்ந்த அன்னராஜ்(வயது 29) என்பவர் ஓட்டி வருகிறார்.

    இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் நோயாளியை கொண்டு சென்று இறக்கிவிட்டு மீண்டும் இன்று அதிகாலையில் முக்கூடலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது திடீரென அதன் ஆக்சில் துண்டானது.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த சுத்தமல்லி கோமதிநகரை சேர்ந்த சுப்பிரமணியன்(62) என்பவர் மீது மோதி அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    • மாணவி கடந்த 1-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.
    • பஸ்சில் பயணம் செய்த பெரியகுப்பம் கற்குழாய் சாலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ஸ்டீபன் என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி மணவாளநகரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 1-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த பெரியகுப்பம் கற்குழாய் சாலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ஸ்டீபன் (வயது 51) என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் 3 பேர் ஆட்டோவில் வந்து பஸ்சை வழிமறித்து ஸ்டீபனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஸ்டீபன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்குபதிவு செய்து மாணவியின் தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று மனவேதனை அடைந்த வேல்முருகன், உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் வீட்டுக்கு சென்றார்.
    • வீட்டின் வெளியே நின்று பெண்ணை வேல்முருகன் அழைத்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் காவேரி நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேல்முருகனை அவரது மனைவி பிரிந்து சென்றார். அதன்பிறகு தனியாக வாழ்ந்த வேல்முருகனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

    சில காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணையும் வேல்முருகன் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. வேல்முருகன் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார்.

    சம்பவத்தன்று மனவேதனை அடைந்த வேல்முருகன், உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு அந்த பெண் வீட்டுக்கு சென்றார். வீட்டின் வெளியே நின்று அந்த பெண்ணை வேல்முருகன் அழைத்தார். ஆனால் அவர் வெளியே வரவில்லை. அந்த பெண்ணின் தம்பி வெளியே வந்து அவள் உன்னிடம் பேச மாட்டாள், நீ இங்கிருந்து போ எச்சரித்தார்.

    காதலி தன்னுடன் பேச மறுத்ததால் வேதனையின் உச்சிக்கே சென்ற வேல்முருகன், மண்எண்ணெய் ஊற்றப்பட்ட தனது உடலில் தீவைத்துக் கொண்டார். தீயில் கருகி அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பலியானார்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கட்டிடத்தின் 2-வது மாடியில் நின்று பணி செய்து கொண்டு இருந்த தொழிலாளி திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேளச்சேரி:

    மேடவாக்கம், காயத்ரி நகர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் புதிய கட்டிடப் பணி நடந்து வருகிறது. இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுகுமார் தாஸ் (வயது22) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கட்டிடத்தின் 2-வது மாடியில் நின்று பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் சுகுமார்தாஸ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகுமார்தாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×