search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே விபத்தில் சிக்கிய வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
    X

    திருவள்ளூர் அருகே விபத்தில் சிக்கிய வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

    • திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வந்த கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதின.
    • விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44) கட்டுமான தொழிலாளி. இவர் தனது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோருடன் திருத்தணி அடுத்த பந்திக்குப்பம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    திருவள்ளூர் அருகே கனகவல்லிபுரம் கிராமத்தில் வந்தபோது, திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வந்த கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதின. அந்த நேரத்தில் பின்னால் சுரேஷ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கூரியர் வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் மனைவி கண்முன்பே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் கூரியர் வேன் டிரைவர் பண்ருட்டி, மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த ஜான்மரியதாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயம்அடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×