என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்- மாணவியின் உறவினர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி மரணம்
- மாணவி கடந்த 1-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.
- பஸ்சில் பயணம் செய்த பெரியகுப்பம் கற்குழாய் சாலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ஸ்டீபன் என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி மணவாளநகரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 1-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த பெரியகுப்பம் கற்குழாய் சாலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ஸ்டீபன் (வயது 51) என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் 3 பேர் ஆட்டோவில் வந்து பஸ்சை வழிமறித்து ஸ்டீபனை சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த ஸ்டீபன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்குபதிவு செய்து மாணவியின் தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.