search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Safety"

    • ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும்
    • மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும்.

    தற்போதைய பொருளாதாரச் சூழலில், எவற்றில் எல்லாம் சிக்கன நடவடிக்கையை கையாள முடியும் என்று திட்டமிடுவது அவசியமானது. ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும் விஷயங்களில், மளிகைப் பொருட்கள் வாங்குவதும் ஒன்று. திட்டமிட்டு சில விஷயங்களை செயல்படுத்தினால், மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    * சத்துள்ள உணவுகளைத் தேர்வு செய்வது பணத்தை மிச்சப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள் போன்றவை சத்துள்ள உணவுகளை விட விலை அதிகமாகவே இருக்கும்.

    * மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சிறிது நேரம் செலவழித்து சரியான பட்டியல் தயார் செய்வது முக்கியமானது. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

    * செய்தித்தாள்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சலுகைகளை ஆராய்ந்து, அவற்றுக்கேற்ப பொருட்களை வாங்கலாம்.

    * சமைத்த மற்றும் உடனே சாப்பிட தயாராக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்குவதை விட, முழு தானியங்களை வாங்கி பயன்படுத்துவது பட்ஜெட்டுக்கு நல்லது.

    * வீட்டில் தயாரிக்க முடிந்த உணவுப் பொருட்களை, வெளியில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

    * ஒவ்வொரு பொருளாக வாங்குவதை விட, தேவையானப் பொருட்களை மொத்தமாக வாங்குவதே சிறந்தது. பொருட்களை வாங்குவதற்கு அங்காடிக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும், கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளால் நம்மை அறியாமல் தேவையற்ற பொருட்களையும் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

    * வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்த முடிந்த காய்கறிகளை நாமே விளைவிப்பது, பணத்தை மிச்சப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

    * வாரத்தில் இரண்டு முறை குளிர்சாதனப் பெட்டியை முழுவதுமாக பார்த்து அதில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை முதலில் உபயோகப்படுத்துங்கள். உங்களுக்கே தெரியாமல் சில பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வைத்து மறந்து விட்டிருக்கலாம்.

    * பசியாக இருக்கும் போது அங்காடிக்குச் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

    * இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு உணவு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, நமது அருகில் கிடைக்கும் சத்தான உணவுகளை வாங்குவது சிறந்தது. குளிர்பானங்கள், சத்து பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை வாங்குவதையும் தவிர்க்க முயலுங்கள்.

    * அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அவற்றை அதிகமாக வாங்கி பயன்படுத்தலாம்.

    * மளிகைப் பொருட்கள் வாங்கும்போது, அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை கவனிக்க மறந்து விடாதீர்கள்.

    • உணவுப் பொருட்களின் விலை உயர்வு குடும்பத் தலைவிகளுக்கு பிரச்சினையாக இருப்பதுண்டு.
    • சமையல் முறைகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதை யோசிப்பது நல்லது.

    பொருளாதார பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை, குடும்பத்தின் பட்ஜெட்டையும், சேமிப்பையும் பாதிக்கக்கூடும். இதில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தான் குடும்பத் தலைவிகளுக்கு பிரச்சினையாக இருப்பதுண்டு. பணத்தை திட்டமிட்டு கையாள்வது, வருமானத்தை அதிகரிப்பது என்று பல வழிகளை முயற்சித்தாலும், மற்றொரு பக்கம் சமையல் முறைகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதையும் யோசிப்பது நல்லது. அதேசமயத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் சமைக்க வேண்டும். அதுபற்றிய குறிப்புகள் இங்கே:

    * மூன்று வேளையும் வெவ்வேறு வகையான உணவுகள் தயார் செய்வதைத் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு காலையில் தயாரித்த சாம்பாரை இரவு உணவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மதிய உணவுக்கு தயாரித்த காய்கறி குழம்பை இரவு சப்பாத்திக்கு உபயோகிக்கலாம்.

    * மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா என்று எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கும்போதே கொண்டைக்கடலை, காராமணி, பட்டாணி போன்றவற்றையும் வாங்கினால், அவற்றில் சுண்டல் தயாரித்து சாப்பிடலாம். இதன் மூலம் செலவை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.

    * குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் தனித்தனியாக சாப்பிடாமல் சேர்ந்து சாப்பிடலாம். இதனால் ஒவ்வொரு முறையும் குழம்பு, பொரியல் போன்றவற்றை சூடுபடுத்தும் வேலை குறையும். சமையல் எரிவாயு மிச்சமாகும்.

    * நாகரிகம் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், நமக்கு அருகிலேயே கிடைக்கும் காய்கறிகளை சமைக்கலாம். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    * ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கப் போகிறீர்கள் என்ற பட்டியலை, முன்னதாகவே ஒரு வார காலத்துக்கு தயார் செய்துகொள்வது நல்லது. இதன் மூலம் கடைசி நேரத்தில் திட்டமிடாமல் சமைத்து, உணவையும், உணவுப் பொருட்களையும் வீணடிப்பதை தவிர்க்கலாம்.

    * ஒவ்வொருவர் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், ஒரே நேரத்தில் பலவித உணவுகளை சமைப்பதற்கு பதிலாக, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்ற ஒரு சமையலை மட்டுமே செய்வது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.

    * வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் அதிக பணத்தை சேமிக்கலாம்.

    * ஆரோக்கியமான, அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை சமைப்பதற்கு, எல்லா வகையான சமையல் பொருட்களையும் வாங்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். மூலிகை தேநீர், பேக் செய்யப்பட்ட ஆரோக்கியமானப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதை இரண்டாம் நிலைத் தேர்வாக வைத்திருங்கள்.

    * உணவை வீணாக்காமல் தேவையான அளவு மட்டும் சமைப்பது அல்லது மீதமான உணவுகளை முறையாக பயன்படுத்துவது பணத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும் சிறந்த வழியாகும்.

    • குழந்தைகளும் தன் எல்லா தேவைகளுக்கும் தாயையே சார்ந்து இருப்பார்கள்.
    • பெண்களுக்கு தனக்கென எதுவுமே இல்லையே என்ற வெறுமை உணர்வு தலை தூக்க துவங்கும்.

    அம்மா!! நமக்கு உயிர் கொடுத்தவள், ஊன் கொடுத்தவள், பிறந்த பின்பு ஊட்டச்சத்துடன் அன்பையும் ஊட்டி வளர்த்தவள். வாழ்க்கை முழுவதும் நம் சுமைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தாங்க விரும்புபவள். அப்படிப்பட்ட அம்மாவிற்கும் வயதாகும். வயதாவதினால் ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்சனைகளும் தோன்றும். அவற்றை மகன் அல்லது மகள், அவர்களுக்கு நாம் திருப்பி செலுத்தக்கூடிய கடனாகவும் கடமையாகவும் அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு உதவுவது சிறந்தது. அந்த வகையில் 45, 50 வயதை கடக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கீழ் வருமாறு பார்ப்போம்.

    மாதவிடாய் நிற்கும் காலம்

    இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு இயற்கையாய் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவதோ தாறுமாறாக சுரப்பதோ நிகழ்வது இயற்கையான ஒன்றே. அந்த நேரத்தில் மனநிலையிலும் உடல் நிலையிலும் பலவிதமான அறிகுறிகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக உணர்வு ரீதியாக அந்த நேரத்தில் பெண்கள் எரிச்சல், கோபம், அழுகை, காரணம் இல்லாத சோர்வு, பிடிமானம் இல்லாத நிலை, வெறுப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள் இது மாதவிடாய் நின்று சில காலங்களில் சரியாகிவிடும் என்றாலும் அந்த நேரத்தில் அவர்களுக்கு மருத்துவ உதவியும் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அரவணைப்பும் இந்த பிரச்சனைகளை வெகுவாக குறைக்கும் என்பது உறுதி.

    உடலளவில் கை கால் மூட்டு வலிகள்,, தலைவலி முதுகு வலி, பசியின்மை, வயிறு உப்புசம், அதிக மாதவிடாயினால் ஏற்படும் உடல் சோர்வு, இரத்த சோகை போன்ற பல உடல் ரீதியான பிரச்சனைகளும் இந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படுகிறது. அவற்றை தகுந்த மருத்துவ ஆலோசனையின் மூலம் மருந்துகளோ, ஊட்டச்சத்து மாத்திரைகளோ கொடுத்து சரி செய்வது நல்லது.

    எலும்பு தேய்மானங்கள்

    45, 50 வயதுகளில் பெண்களுக்கு பொதுவாக எலும்பு தேய்மானத்தினால் கால் மூட்டு வலி ஏற்படுவது இயற்கையே. தனக்கென உடற்பயிற்சி செய்யாமல் ஊட்டச்சத்தில் கவனம் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே ஏற்படுகிறது. எனவே மருத்துவ பரிசோதனையின் மூலம் எலும்பு மூட்டுகளில் தேய்மானம் இருக்கிறதா, எலும்பின் அடர்த்தி குறைந்து இருக்கிறதா,, உடல் பருமன் இருக்கிறதா ரத்த சர்க்கரை,, ரத்த அழுத்தம் ரத்த கொழுப்பு போன்றவை சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் பரிசோதித்து அதில் பிரச்சனை இருக்குமானால் உடனடியான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது. எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் கால்சியம் கொண்ட உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியதும் கணவர் மகன் மகள்களின் கடமையாகும்.

    ரத்த சோகை

    பெரும்பாலான பெண்களுக்கு சிறு வயது முதலே மாதவிடாய் ஏற்படுவதினால் ரத்த சோகையும் இருக்கும். அதை பெரும்பாலான பெண்கள் கவனிப்பதில்லை. மாதவிடாய் நிற்கும் சமயத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்ற புரதம், உடலுக்கு தேவையான சத்துக்களையும் பிராணவாயுவையும் எடுத்துச் செல்வது.

    இது சரியான அளவில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒருவர் பலமாகவும் துடிப்பாகவும் இயங்க முடியும். உதிரப்போக்கு அதிகமாக இருப்பதினால் ஹீமோகுளோபின் அளவு உடலில் குறையலாம். இதுவே ரத்த சோகை. இந்நிலையில் உடலுக்கு தேவையான பிராணவாயுவும் ஊட்டச்சத்துக்களும் இரும்பு சத்தும் சரியான அளவில் செல்களுக்கு போகாத பட்சத்தில் அதீத சோர்வு, மூச்சு வாங்குதல், குறிப்பாக மாடிப்படி ஏறும் போது மூச்சு வாங்குதல், எந்த வேலையும் செய்ய பிடிக்காமை, அஜீரணம், பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    இதை பெரும்பாலான பெண்கள் கவனிப்பதில்லை. கடமை, வேலைப்பளு போன்ற விஷயத்தினால் இதை உதாசீனப்படுத்தி விடுகின்றனர். நாலாவட்டத்தில் ரத்த சோகை மேலும் பலவித நோய்களுக்கு வழி வகுக்கிறது. எனவே ரத்த சோகை இருக்கும் பட்சத்தில் பரிசோதனை செய்த பின்பு அவர்களுக்கு சரியான இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகள் சரியான விகிதத்தில் புரதம் போன்றவைகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மன அழுத்தம்

    பொதுவாக பெண்கள் படித்து வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருந்து, பின் திருமணமான பின்பு குழந்தைகளை வளர்க்கும் கடமைக்காக தனக்கென ஒரு தொழில் இல்லாமல் வருமானமும் இல்லாமல் வீட்டை பராமரித்து வருவது இயல்பு. குழந்தைகளும் தன் எல்லா தேவைகளுக்கும் தாயையே சார்ந்து இருப்பார்கள். பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆகும் பொழுது குழந்தைகள் விடலை பருவத்தில் இருப்பார்கள். அவர்கள் அம்மாவிடம் செலவழிக்கும் நேரம் குறைந்துவிடும். சில குழந்தைகள் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கோ வெளியூர்களுக்கோ சென்று விடுவதும் உண்டு.

    திருமணம் ஆகி குழந்தைகள் தனியே பிரிந்து சென்று விடுவதும் உண்டு. இதே காலகட்டத்தில் கணவன்மார்கள் தங்களுடைய தொழில் அல்லது வேலையில் முழு வீச்சில் இயங்கும் சூழல் இருப்பதால் அவர்களும் மனைவியுடன் போதுமான நேரத்தை செலவழிக்க முடியாமல் போய்விடுகிறது. அந்த நேரத்தில் பெண்களுக்கு தனக்கென எதுவுமே இல்லையே என்ற வெறுமை உணர்வு தலை தூக்க துவங்கும். இந்த நேரத்தில் மாதவிடாய் கோளாறுகளும் எலும்பு தேய்மானங்களும், இரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடு நோய்களும் சேர்ந்து கொண்டு அவர்களை பாடாய்படுத்தி விடுவதுண்டு.

    இந்த நேரத்தில் ஆண் பெண் குழந்தைகள் அம்மாவின் நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அவர்களுக்கு பிடித்த ஒரு பொழுதுபோக்கு அல்லது வருமானம் ஈட்டக்கூடிய தொழில் அல்லது ஏதேனும் தொண்டு செய்வதற்கான வாய்ப்பு போன்ற ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்தி அவர்களின் மனநிலையை பலப்படுத்தி, உடல் நிலையையும் சரிபடுத்தி, தங்களுக்காக தியாகம் செய்த தன் அம்மாவின் நிலையை சரிப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.

    • சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • நீங்கள் மட்டும் தனியாக ஈடுபடாமல், உங்கள் தோழிகளுடன் சேர்ந்து இதை சுயதொழிலாக செய்யலாம்.

    இன்றைய பெண்கள் குடும்பத்தைக் கவனிப்பதோடு மட்டுமில்லாமல், அலுவலக வேலை, தொழில் என்று தங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் வீட்டை சுத்தப்படுத்துவது, வீட்டு உபயோகப் பொருட்களை அவ்வப்போது பராமரிப்பது போன்ற வேலைகளை செய்வதற்கு, பலருக்கு போதுமான நேரம் கிடைப்பது இல்லை. 'வீடு' என்பது நம் ஆளுமையின் அடையாளம். லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வீட்டைக் கட்டுபவர்கள், அதைப் பராமரிக்க சில ஆயிரங்களை செலவழிக்கத் தயங்குவது இல்லை.

    சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டைச் சுத்தம் செய்வது, ஒழுங்குபடுத்துவது, மாதாந்திர பில்களைக் கட்டுவது போன்ற பலவிதமான பராமரிப்புப் பணிகளை நீங்கள் செய்து தரலாம். அதற்குரிய கட்டணத்தை வசூலிக்கலாம். சில நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளை வழங்குகின்றன. இருந்தாலும், வீட்டுக்குள் அறிமுகம் இல்லாதவர்களை அனுமதிக்க பலர் தயக்கம் காட்டுவார்கள். இதுவே, உங்கள் பகுதியில் நீங்கள் அனைவருக்கும் தெரிந்தவராக இருந்தால், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையோடு உங்களை அணுகுவார்கள்.

    நீங்கள் மட்டும் தனியாக ஈடுபடாமல், உங்கள் தோழிகளுடன் சேர்ந்து இதை சுயதொழிலாக செய்யலாம். இதில் வாடிக்கையாளரின் தேவைகளைப் பொறுத்து, நீங்கள் வழங்கும் சேவைகளை வகைப்படுத்திக்கொள்ளலாம். வீட்டை ஒழுங்குபடுத்துதல், பழுதுபார்த்தல், பிற வேலைகள் என்று பிரித்து செயல்படலாம். இதற்கென தனியாக முதலீடு, அலுவலகம் போன்றவை தேவை இல்லை. உங்களுடைய பேச்சுத் திறனும், நேர்மையும் தான் மூலதனம்.

    வாடிக்கையாளரின் தேவைகளைப் புரிந்து கொண்டு, சரியான முறையில் பேசி கவர்வது முக்கியம். தகுந்த பணியாளர்களை நியமித்து வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, நண்பர்கள் என நெருங்கிய வட்டத்தில், முதலில் உங்கள் நிறுவனத்தின் சேவைகளைப் பற்றிய விவரக்குறிப்புகளை விநியோகம் செய்யுங்கள். நாளடைவில் உங்கள் வேலையில் திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களே, தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உங்கள் நிறுவனத்தை பரிந்துரை செய்வார்கள்.

    நிறுவனம் அடுத்த கட்டம் நோக்கி வளர்ச்சி அடையும்போது முகநூல், இன்ஸ்டாகிராம், கிளப் ஹவுஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் நிறுவனத்திற்கென தனிப் பக்கங்கள் தொடங்கிப் பகிருங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் நம்பிக்கையான பிளம்பர்கள் மற்றும் பிற சேவைகள் வழங்கும் நபர்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். திறமையுள்ள ஒழுக்கமான நபர்கள், நியாயமான கட்டணம், நேர்த்தியான வேலை என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

    • அளவுக்கு அதிகமாக சமைத்து உணவை குப்பையில் கொட்டுவது தவறாகும்.
    • தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    சிக்கனம் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானது. நாம் சிக்கனமாக வாழ்ந்தால் நமது சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள். இதில் பெண்களின் பங்கு முக்கியமானது. குடும்பச் செலவுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த உடைகள் மற்றும் நகைகள் அணிந்து இருந்தால்தான் சமுதாயத்தில் மதிப்பு என்று கருதி, சில பெண்கள் அவற்றுக்காக அதிகமாக செலவு செய்வார்கள்.

    பெண்களின் திறமை, அவர்களின் பேச்சு, பண்பான அணுகுமுறை போன்றவற்றால் தான் சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற முடியும். கால மாற்றத்தால் அழகு நிலையங்கள் பெண்களின் வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அழகு பராமரிப்புக்காக அதிகமாக செலவு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். அவற்றை தவிர்த்து இயல்பான அழகுக்கு தேவையான பராமரிப்புகளை மட்டும் செய்துகொள்ளலாம்.

    கணவனும்-மனைவியும் பணிக்குச் செல்லும் பல குடும்பங்களில், சமையலில் சிக்கனம் தவறிப்போகும். நேரம் இல்லாத காரணத்தால், மாதத்தில் பல நாட்கள் வெளியில் வாங்கி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். விலை உயர்ந்த காய்கறிகள், சமையல் பொருட்கள் தான் உடலுக்கு நல்லது என நினைத்து, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவார்கள். அவற்றை விட நமக்கு அருகில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் பல மடங்கு சத்து கொண்டதோடு, விலையும் குறைவாக இருக்கும்.

    வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அவர்களுக்கு தகுந்தபடி சிக்கனமாக உணவு தயாரிப்பது அவசியம். அளவுக்கு அதிகமாக சமைத்து உணவை குப்பையில் கொட்டுவது தவறாகும். சிக்கனத்தை கடைப்பிடிக்கத் தவறினால், பணப்பிரச்சினைகள் உருவாகி, மனப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் கேட்டதை எல்லாம் உடனே வாங்கி கொடுப்பது தவறு. சிக்கனமாக இருப்பதை குழந்தைகள் உணரும்படி பக்குவமாக எடுத்துச் சொல்வது பெற்றோரின் கடமையாகும்.

    தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். புதிது புதிதாக விற்பனைக்கு வரும் விலை உயர்ந்த செல்போன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது சிக்கனத்தின் அடிப்படையாகும். சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சிக்கனம் சீரான வாழ்க்கைக்கு உதவும். கஞ்சத்தனம் யாரும் மதிக்காத நிலையை உண்டாக்கும். இதை உணர்ந்து தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்தால் சிறப்பாக வாழலாம்.

    • ரெயில் பயணத்தில் புதியவர்களிடம் அதிகம் பேசுவதைத் தவிர்க்கலாம்.
    • பயணத்தின் போது அணியும் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

    ரெயில் பயணம் பலருக்கும் பிடித்தமான விஷயம். தற்போது பல்வேறு காரணங்களால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் ரெயிலில் தனியாக பயணிக்கிறார்கள். அப்போது தங்களையும், தங்கள் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்வது நல்லது. அதற்கான ஆலோசனைகள் இங்கே…

    ரெயில் பயணத்துக்காக டிக்கெட் பதிவு செய்யும்போதே பெண்களுக்கான தனி இருக்கைகளைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள். அவ்வாறு முடியாத சூழலில் பயணம் செய்ய நேரிட்டாலும் முடிந்த அளவிற்கு பெண்கள் இருக்கைகள் இருக்கும் பகுதியை தேர்ந்தெடுங்கள். இரவு பயணங்களில் 'ஸ்லீப்பர்' முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், டிக்கெட் பதிவில் கூடுமானவரை 'அப்பர்பர்த்' எனப்படும் மேலே இருக்கும் படுக்கையைத் தேர்வு செய்வது நல்லது.

    இது பெண்களுக்கு பல வகைகளில் வசதியாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். தனியாக பயணம் செய்யும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், எந்தவித தயக்கமும் இல்லாமல் டிக்கெட் பரிசோதகர் அல்லது ரெயிலில் ரோந்து வரும் போலீசாரிடம் தெரிவியுங்கள். பயணத்தின்போது உங்களுக்குத் தேவையான தின்பண்டங்கள், தண்ணீர் போன்றவற்றை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், பலருக்கு ரெயிலில் வாங்கி சாப்பிடும் உணவு அசவுகரியத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.

    இரவு நேர பயணத்தின்போது சால்வை, சார்ஜர், சானிட்டரி நாப்கின், அவசியமான மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மறக்காமல் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். ரெயில் பயணம் மட்டுமில்லாமல், எந்தப் பயணமாக இருந்தாலும் விலை உயர்ந்த நகைகள், அதிக பணம் வைத்திருப்பதைத் தவிருங்கள். மற்றவர்கள் முன்பு உங்கள் பையை அடிக்கடி திறந்து மூடுவதைத் தவிர்ப்பது நல்லது.

    ரெயில் பயணத்தில் புதியவர்களிடம் அதிகம் பேசுவதைத் தவிர்க்கலாம். அவ்வாறு பேச வேண்டிய தேவை வந்தாலும், உங்களைப் பற்றிய தகவல்களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். செல்போனில் பேசும் போதும் கவனம் தேவை. ரெயிலில் பயணம் செய்ய தேவையான முகவரி சான்றுகளை கைவசம் வைத்திருக்கிறீர்களா என்பதை கிளம்பும் போதே கவனித்துக் கொள்ளுங்கள்.

    இல்லை என்றாலும் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்து முறையான நடவடிக்கைக்கு உட்படுங்கள். அதைத் தவிர்த்து, அந்த நேரத்தில் வேறு வழிகளை நாடுவது உங்களுக்கு சிக்கலை உண்டாக்கலாம். பயணத்தின் போது அணியும் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும். பிறர் கண்களுக்கு உறுத்தாத வகையில், உங்களுக்கு வசதியான ஆடைகளை அணிவது முக்கியம்.

    • உணர்ச்சி வசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது.
    • உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும், தேர்ந்தெடுக்கும் வேலையை திறமையாக செய்து முடிக்கவும் மனம் தெளிந்த நிலையில் இருக்க வேண்டும்.

    ஏதேனும் மன குழப்பங்களுக்கு ஆளானால் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க முடியாது. எளிதில் உணர்ச்சி வசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கோபம், சோகம், வேதனை, மன அழுத்தம் போன்றவை உணர்வுகளை தடுமாற வைக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளித்து உணர்வுகளை நிர்வகிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அது உணர்ச்சிகளை கையாள்வதற்கு உதவிகரமாக அமையும்.

    சந்தோஷமாக இருந்தாலோ, மனக்கவலை அடைந்தாலோ உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருபோதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதீர்கள். ஏனெனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

    ஏதாவதொரு சூழலில் மன நெருக்கடிக்கு ஆளானால் சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம். எந்த வேலையிலும் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருக்கலாம். அந்த சமயங்களில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. மனதை வேறு செயல்களில் ஈடுபடுத்தலாம். அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மன அழுத்தம்தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. ஒருவேளை மன அழுத்தத்திற்கு ஆளானால் அதில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.

    மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயிற்சிகளில் ஈடுபடலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம், உடற் பயிற்சி போன்ற உடலை தளர்வடைய செய்யும் பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். விளையாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள்தான் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்றில்லை.

    அவர்களுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். மனதிற்கு பிடித்தமான எந்தவொரு விளையாட்டையும் தயங்காமல் மேற்கொள்ளலாம். நடனமும் ஆடலாம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உண்பது, போதுமான நேரம் தூங்குவது போன்றவை மன நலனை பாதுகாக்கவும், உணர்வுகளை சம நிலையில் பராமரிக்கவும் உதவும். மன நெருக்கடியில் இருக்கும் சமயங்களில் நெருக்கமானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் குழு விவாதங்களிலும் ஈடுபடலாம். வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொள்வதும் அவசியமானது. தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணி புரியலாம். தன்னார்வலர்களாக மாறி அவ்வாறு சமூக சேவைகள் புரிவது மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும். அர்த்தமுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுகிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும். உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களுடன் சிரித்து பேசி மகிழ்வதும் உணர்ச்சி ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.

    • அதிக வேலைச்சுமை, பணிப்பெண்களின் உடல்நலத்தை பாதிக்கக்கூடும்.
    • சிறப்பாக செயல்படும்போது மனதார பாராட்டுங்கள்.

    குடும்ப சூழ்நிலையின் காரணமாக வீட்டு வேலைக்கு வரும் பெண்களை மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடத்துவது முக்கியம். அவர்கள் சிறப்பாக செயல்படும்போது மனதார பாராட்டுங்கள். பணிப்பெண்களை மரியாதையோடு அழைக்கவும், நடத்தவும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். கண்டிப்பது அல்லது குறை கூறுவதற்குப் பதிலாக சில தெளிவான விதிகளை முன்னரே அமைத்துக்கொள்ளுங்கள்.

    அதற்கேற்ப நடந்துகொள்ள அவர்களை அறிவுறுத்துங்கள். வேலையில் ஏதேனும் தவறுகள் செய்துவிட்டால், அதை திருத்தி அமைப்பதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள். அவர்கள் பணியில் தவறுகள் செய்யும்போது அதைப்பற்றி நிதானமாகவும், உறுதியாகவும் அவர்களிடம் பேசுங்கள். அதேசமயம் உடல் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அவர்களுக்கும் உண்டு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

    அத்தகைய நேரங்களில் அவர்களிடம் கருணை காட்டுவதற்கு தயங்காதீர்கள். உங்களுடைய வீட்டு வேலைகளின் சுமையைக் குறைப்பதற்காகத்தான் நீங்கள் பணிப்பெண்களை நியமிக்கிறீர்கள். அதேசமயம், அனைத்து வேலைகளையும் அவர்களிடம் குவிப்பதும் நியாயமானதாக இருக்காது.

    அதிக வேலைச்சுமை, பணிப்பெண்களின் உடல்நலத்தை பாதிக்கக்கூடும். அதனால் அவர்கள் வேலையை விட்டு விலகும் வாய்ப்புகள் உள்ளன. பணிகளுக்கு இடையே அவர்கள் சற்று ஓய்வெடுப்பதற்கும் நேரம் ஒதுக்கிக் கொடுங்கள்.

    • பெண்கள் பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.
    • முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள்.

    கண் மை, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகுக்காகவும், மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆரம்ப காலத்தில் பசுங்கற்பூரம், நெய், தாவர எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. தற்போது, வணிக ரீதியான லாபம் பெற இயற்கை பொருட்களுடன் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலவகை கண் மைகளில் 'ஈயம்' மூலக்கூறுகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இவை கண் தசைகளை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பார்வைத் திறனையும் பாதிக்கக்கூடும். எனவே, இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் கண் மைகளைப் பயன்படுத்துவது நல்லது.

    ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கண்களுக்கு பிரகாசத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். கண்களின் தசைகளை வலுப்படுத்தி பார்வைத் திறனை மேம்படுத்தும்.

    ஆர்கானிக் சாதனம் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இது பெண்கள் பெரிதும் விரும்பும் அழகு சாதனப் பொருள் என்பதால், இதனை தயாரித்து விற்பனையும் செய்யலாம். பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.

    எந்த ஒரு பொருளையுமே, விற்பனை செய்யும் முன்பு முதலில் அதனை நாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய தயாரிப்பைப் பற்றி நம்பிக்கையுடன் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள். பிறகு சந்தைப்படுத்த ஆரம்பிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய அளவு மண் அகல் - 1

    சந்தனத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    வெள்ளை நிற பருத்தி துணி - 1 சிறிய துண்டு

    பசுநெய் - 3 டேபிள் ஸ்பூன்

    பாதாம் பருப்பு - 1 சிறிய

    அகலமான கண்ணாடி குப்பி - 1

    டீஸ்பூன் - 1

    செய்முறை: சந்தனத்தூளில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, டீஸ்பூன் மூலம் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். அதில் பருத்தித் துணியை நன்றாக நனைத்து நிழலில் உலர்த்துங்கள். பிறகு, அதைத் திரி போல சுருட்டிக் கொண்டு, அகல் விளக்கில் வைத்து நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுங்கள். விளக்கின் இரண்டு பக்கமும் நீளமான டம்ளர்களை ஸ்டாண்ட் போல வைத்து, எவர்சில்வர் அல்லது மண் தட்டு ஒன்றை அவற்றின் மீது கவிழ்த்து வையுங்கள்.

    பாதாம் பருப்பை ஒரு இடுக்கியால் பிடித்துக் கொண்டு விளக்கில் காண்பிக்க வேண்டும். அது நன்றாக எரிந்ததும் ஆறவைக்கவும். பின்பு அதை ஒரு சிறிய உரலில் போட்டு இடித்து தூளாக்கிக்கொள்ளவும். அகலில் நெய் தீர்ந்ததும் அதை அணைத்து, அதன் மேலே கவிழ்த்திருக்கும் தட்டை சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு தட்டை எடுத்து பார்த்தால் அதன் மீது கரி படிந்திருக்கும்.

    அதனை டீஸ்பூனால் சுரண்டி சேகரித்து கண்ணாடி குப்பியில் கொட்டவும். அதனுடன் பொடித்து வைத்திருக்கும் பாதாம் கரியையும் கலந்து கொள்ள வேண்டும். கண்ணாடி குப்பியை காற்று புகாமல் மூடி வைக்கவும். இதை நெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாகக் குழைத்து பயன்படுத்தலாம்

    • கடந்த 13-ந்தேதி முதல் இந்த பைக் டாக்சி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • பெண்களுக்கான பெண்கள் பைக் டாக்சி இயக்குவது நல்ல விஷயம்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கொண்டு வரப்பட்டதுதான், மெட்ரோ ரெயில் சேவை.

    சென்னையின் பிரதான போக்குவரத்து பயணங்களில் ஒன்றாக இந்த ரெயில் சேவை தற்போது கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. ஆரம்பத்தில் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்து வந்த நிலையில், தற்போது, 2½ லட்சம் பேர் தினமும் பயணிப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மேலும் சில வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டுவருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்து முழுமையாக நிறைவு பெற்றதும், சென்னையில் மெட்ரோ ரெயில், போக்குவரத்து சேவைகளில் முக்கிய இடத்தை பிடித்துவிடும். சொகுசு பயணம், குறைந்த நேரத்தில் பயணம் என பல்வேறு அம்சங்களை கொண்டதால், பலரும் இதனை விரும்புகிறார்கள்.

    பைக் டாக்சி

    இப்படிப்பட்ட பயண அனுபவத்தை கொடுக்கும் மெட்ரோ ரெயில் நிர்வாகம், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தற்போது 'ரேபிடோ' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய 'பைக் டாக்சி' முறையை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறது.

    அமோக வரவேற்பு

    பெண் பயணிகளுக்காக, பெண்களால் இயக்கப்படும் இந்த 'பைக் டாக்சி' முதற்கட்டமாக சென்னை நந்தனம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த ரெயில் நிலையங்களில் இருந்து வெளியே வரும் பெண் பயணிகள், குறிப்பிட்ட இடங்களுக்கு பயணிக்க இந்த பைக் டாக்சியை அதற்கான செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இதற்காக இந்த ரெயில்நிலையங்களில் விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகிறது.

    மெட்ரோ நிர்வாகத்தின் இந்த முயற்சிக்காக ரேபிடோ நிறுவனம், பிரத்யேகமாக பெண் 'பைக் டாக்சி' டிரைவர்களை நியமித்து இருக்கிறது. இவர்களை 'கேப்டன்' என்று அழைக்கின்றனர். கடந்த 13-ந்தேதி முதல் இந்த பைக் டாக்சி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    கடந்த சில நாட்களாக இதில் பெண்கள் பலர் பயன்படுத்துவதாகவும், அமோக வரவேற்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் 'பைக் டாக்சி' அழைப்புகள் வருவதாகவும், அதனை முறையாக 'பிக்' செய்து பெண் கேப்டன்கள், பெண் பயணிகளை பத்திரமாக அழைத்து செல்கின்றனர்.

    நல்ல விஷயம்

    இதுகுறித்து வேளச்சேரியை சேர்ந்த தமிழரசி கூறுகையில், 'பெண்களுக்கான பெண்கள் பைக் டாக்சி இயக்குவது நல்ல விஷயம். தற்போது பரபரப்பாக இயங்கும் உலகில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில் பெண் பயணிகளுக்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்திருக்கும் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டத்தக்க ஒன்று. பைக் டாக்சியை பெண்கள் இயக்குவதால், எங்களுக்கும் சவுகரியமாக இருக்கிறது. பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறோம் என்ற நிம்மதியும் ஏற்படுகிறது. அதேசமயம் செயலியில் புக்கிங் செய்யும்போது, பெண் ஓட்டுனர் வேண்டும் என்று கேட்கும் வகையில் ஒரு ஆப்ஷன் வழங்கினால் நன்றாக இருக்கும்' என்றார்.

    பைக் டாக்சி டிரைவர் கிருஷ்ணவேணி கூறும்போது, 'நான் இதற்கு முன்பு பைக் மூலம் உணவு டெலிவரி செய்யும் பணியை செய்து கொண்டிருந்தேன். இப்போது பைக் டாக்சி மூலம் வருவாய் ஈட்டி வருகிறேன். அதிலும் பெண்களுக்காக, பெண்களே இயக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்க ஒன்று. ஆண் பயணிகள் வந்தாலும் நாங்கள் மறுக்காமல் ஏற்றி செல்கிறோம். இந்த வருவாய் எங்கள் குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறது. ஒரு சேவை செய்யும் உணர்வும் வருகிறது' என்றார்.

    பயனுள்ளதாக இருக்கிறது

    பைக் டாக்சி டிரைவர் சித்ரா கூறும்போது, 'நான் ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றினேன். அதில் எப்போதாவது தான் வருவாய் கிடைத்து வந்தது. அதன் பிறகுதான், இந்த வேலையில் களம் இறங்கினேன். நாளொன்றுக்கு ரூ.1,000 வருவாய் கிடைக்கிறது. இதில் புக் செய்யும் போது பெண் டிரைவர்கள் என்று வந்ததும், ஆண்கள் பலர் புக்கிங்கை கேன்சல் செய்துவிடுகிறார்கள். மெட்ரோ ரெயில் நிர்வாகம் இப்போது எங்கள் நிறுவனத்துடன் இணைந்து செய்திருக்கும் இந்த முயற்சி எங்களுக்கு வரப்பிரசாதம். இதன் மூலம் புக் செய்து பயணிக்கும் பெண் பயணிகளும் இதை வரவேற்கிறார்கள். நல்ல திட்டம் என்று சொல்கிறார்கள்' என்றார்.

    கோடம்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரம்யா கூறுகையில், 'குறுகிய நேரம், சொகுசான பயணத்துக்காக தான் மெட்ரோ ரெயிலில் பயணிக்கிறோம். இப்போது கூடுதலாக மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து நாம் சேர வேண்டிய இடத்துக்கு பாதுகாப்பான பயணத்தை தரக்கூடிய வகையில் நல்ல முயற்சியை கையில் எடுத்து இருக்கிறார்கள். நிச்சயம் அனைத்து தரப்பு பெண்களாலும் பாராட்டப்படக்கூடிய விஷயமாக இது இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பஸ், ஆட்டோ பிடித்து அலுவலகத்துக்கு செல்வதற்கு பதிலாக குறைந்த செலவில், விரைந்து செல்வதற்கு இந்த பைக் டாக்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது' என்றார்.

    விரைவில் மற்ற ரெயில் நிலையங்களில்...

    இதுதொடர்பாக பைக் டாக்சி நிறுவனத்தின் நிர்வாகி விக்னேஷ் கூறும்போது, 'மெட்ரோ ரெயிலில் பயணித்து வெளியில் வரும் பயணிகள், குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதற்கு இந்த பைக் டாக்சியை பயன்படுத்தலாம். விலையும் குறைவு, பாதுகாப்பான சேவையை வழங்குகிறோம். பெண் பயணிகளுக்காக பெண் டிரைவர்களை கொண்ட பைக் டாக்சியை அறிமுகம் செய்துள்ளோம். ஒருவேளை புக்கிங் செய்து பெண் டிரைவர்கள் வரவில்லை என்றால், அதை ரத்து செய்துவிட்டும், மீண்டும் புக் செய்யும் வசதியும் உள்ளது. முதற்கட்டமாக 6 ரெயில் நிலையங்களில் இதை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். விரைவில் மற்ற ரெயில் நிலையங்களிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும்.
    • நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் தொழில் தொடங்க நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு நமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துத் தருகிறது. உதாரணமாக தமிழக அரசு அளிக்கும் 'ஸ்டார்ட் அப் டி.என்' என்ற திட்டம் மிகவும் உபயோகரமாக உள்ளது. அதனை, பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் இளம் தலைமுறையினர் தங்களது யோசனைகளை முன் வைத்தால் மட்டுமே போதுமானது. நல்ல யோசனைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்றவாறு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

    கடனாக அல்லாமல் உதவியாகவே வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 'ஆன்ட்ரப்ரனர்ஷிப்' என்ற வகுப்பை உருவாக்கி தொழில் தொடங்கும் ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கற்று தருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்லாமல் நிறுவனம் தொடங்கலாம் என்ற மனநிலைக்கு மாறுகின்றனர். நானும் அத்தகைய வகுப்புகளை கல்லூரிகளில் நடத்தி வருகின்றேன். எனவே தொழில் தொடங்க விரும்புபவர்கள் நல்ல யோசனைகளை மட்டும் முன்வைத்து இத்தகைய திட்டங்களை பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது.

    முதலாவது, நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள், ஆரம்ப காலகட்டத்தில் பணிக்கு நிறைய ஆட்களை சேர்க்கக்கூடாது. உங்களால் எவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும் என்பதை பொறுத்து குறைவான ஆட்களை சேர்த்தால் போதுமானது. இரண்டாவது ஊழியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும். குறைவான சம்பளம் கொடுத்தால் அவர்கள் அனுபவத்தை பெற்றுக்கொண்டு, மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்ற சென்று விடுவார்கள்.

    இதனால் நாம் மீண்டும் பணத்தை செலவழித்து ஆட்கள் சேர்க்கும் நிலை ஏற்படும். நிதியை நிர்வகிக்க, கணக்கு வழக்குகளை பார்க்க ஆட்களை பணியில் அமர்த்தியிருந்தாலும், ஒரு நிறுவனராக நாமும் அதனை கவனிக்க வேண்டும். இப்பொழுது ஆரம்பிக்கப்படும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைய இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும்.

    சமூகம் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசினாலும், ஒரு பெண் சுயமாக நிறுவனத்தை தொடங்கினாலும் சிலர் எதிர்மறையாக பேசத்தான் செய்வார்கள்.

    பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதுதான் பெண்களுக்கான பெருந்தடை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். ஏட்டுப் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும். உங்களிடம் திறமையும், நிதி மேலாண்மையும் இருந்தாலே போதும். நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது.
    • சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும்.

    காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

    வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

    பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

    பாலியல் குற்றங்கள்

    இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    பள்ளி, கல்லூரிகளில்

    சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியரும், டாக்டருமான பூர்ண சந்திரிகா:-

    சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும். பாலின சமத்துவத்தை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே தொடுதலில் சரி எது? தவறு எது? என்பது குறித்து சொல்லித்தர வேண்டும். இதை வெளியில் சொல்வதற்கு அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும். மாணவி சோகமாக இருந்தால் என்ன நடந்தது என்று முதலில் கேட்க வேண்டும். அதை பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்கான முதல் அடி வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். பெண்ணையும், ஆணையும் சமமாக பார்க்கும் நிலை வந்துவிட்டாலே போதும் இந்த நிலை மாறும்.

    பெண் தானே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை மாற வேண்டும். சில இடங்களில் வீட்டிலேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடப்பதால் அதை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். எது நடந்தாலும் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். பெண் பிள்ளை தான் பாதிக்கப்பட்டது குறித்து வெளியே சொல்லி பின்னரும் அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பாக அரணாக நாம் இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான வகுப்புகள் எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் பெண் குழந்தைகளுக்கு நடப்பது போல் ஆண் குழந்தைகளுக்கும் 18 சதவீதம் நடப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, இருவருக்கும் பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

    தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் அருமைநாதன்:-

    உளவியல் ரீதியாக மாணவர்களை, ஆசிரியர்கள் எதிர்கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் உளவியல் ஆசிரியர்களை அரசே நியமிக்க வேண்டும். தற்போது இருக்கும் மாணவர்கள் சின்ன அவமானத்தையோ, ஏமாற்றத்தையோ தாங்க முடியாத நிலையில்தான் வளர்கிறார்கள். ஒரு சின்ன அவமானம் ஏற்பட்டவுடன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ எந்த பிரச்சினை நடந்தாலும் அதை வெளியில் கொண்டுவருவதில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை சொன்னால் நம்மைத்தான் தவறாக நினைப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

    பாலியல் குற்றங்களுக்கு தண்டனை மட்டுமே தீர்வு கொடுக்காது. தண்டனை கொடுத்தாலும் இதை சரிசெய்ய முடியாது. பாலியல் என்பது உளவியல் ரீதியான ஒன்று. சமுதாய மனநிலை மாறவேண்டும். பள்ளியில் இருந்தே மாணவ, மாணவிகளிடம் உளவியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாள்தோறும் உளவியல் ரீதியான விஷயங்களை பேச வேண்டும். அரசு செலவினம் பார்க்காமல் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு உளவியல் ஆலோசகரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்.

    கல்லூரி மாணவி ரித்திகா ரமேஷ்:-

    12-ம் வகுப்பு படிக்கும் போது நானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் வெளியில் சொல்ல முடியாத நிறைய கதைகள் இருக்கின்றன. பெண் வெளியில் வந்து சொல்லும் போது அவர்களை மரியாதைக்குரியவர்களாக நடத்த வேண்டும். பாலியல் கல்வி கண்டிப்பாக அனைவருக்கும் தேவை. பெண் குழந்தைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதை காட்டிலும் ஆண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வளரும் போதே சொல்லி வளர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு தவறு செய்தவர்களுக்கு தண்டனை விரைந்து வழங்கப்பட வேண்டும். அப்போது தான் சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து வெளியில் வர முடியாது என்ற பயம் தவறு செய்தவர்களுக்கு வரும்.

    கல்வியாளர் கல்யாணந்தி:-

    கோடை விடுமுறையின் போது மாணவர்களுடன் பெற்றோர்கள் நீண்ட நேரம் செலவிட முடியும். இந்த நேரத்தை பயன்படுத்தி பெற்றோர்கள் அவர்களிடம் செக்ஸ் கல்வி குறித்து பேசலாம். வெளியே செல்லும் நேரங்களில் யாராவது தவறாக நடந்துகொண்டால் உடனே என்னிடம் சொல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு உடன் இருப்போம் என்று தைரியம் சொல்ல வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த ஓரிரு நாட்களில் அவர்களிடம் சிறிய மாறுதல்கள் இருக்கும். அப்போது அவர்களிடம் உட்கார்ந்து பேச வேண்டும். பெற்றோர்கள் புகார் தெரிவிக்க முன்வரும் போதுதான் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் வரும். விழிப்புணர்வு அதிகமாக அதிகமாக தான் குற்றங்கள் குறையும்.

    ×