search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife murder"

    • எபனேசர் அந்த பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே மேக்கா மண்டபம் மூலச்சல் பன்றி வெட்டான்பாறை விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 54).

    இவரது மகள் ஜெய பிரின்ஷா (31). மகன் ஜெயா பிரின்ஸ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபிரின்ஷா அழகிய மண்டபம் தச்சகோடு பகுதியைச் சேர்ந்த எபனேசர் (35), டெம்போ டிரைவர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெபசேபன் (14), ஜெபஆகாஷ் (13) என்ற மகன்கள் உள்ளனர்.

    ஜெபபிரின்ஷா திருவனந்தபுரத்தில் பியூட்டிஷியன் படித்து வந்தார். ஜெப பிரின்சாவிற்கும் எபனேசருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி அணிந்து செல்லும் ஆடை பிடிக்கவில்லை என்று எபனேசர் அடிக்கடி கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஜெபபிரின்ஷா சகோதரர்ஜெப பிரின்சிற்கு திருமண ஏற்பாடு செய்வதற்காக எபனேசருடன் சென்றிருந்தார். இரவு எபனேசரும் ஜெப பிரின்ஷாவும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். பரைக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த எபனேசர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி ஜெப பிரின்சாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெபபிரின்சா மயங்கி விழுந்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் எபனேசர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஜெப பிரின்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஜெபசிங் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எபனேசர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் எபனேசர் அந்த பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
    • மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேம்பத்தூர் ஆந்தகுடி இரவிய மங்கலம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் தனபாலன் (வயது45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகவள்ளி (38), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    தனபாலன் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனிடம் இருந்து பிரிந்து மனைவி சினேகவள்ளி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர், மண்வெட்டியால் மனைவியை தாக்கி கொன்றார்.

    தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார், திருவேகம்பத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சினேக வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சில மணி நேரங்களில் தனபாலனும் கைது செய்யப்பட்டார். மனைவியை அடித்து கொல்ல பயன்படுத்திய மண்வெட்டியை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

    • எனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா தேவி (29) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
    • சரோஜா தேவியின் கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக கீழ்மாத்தினிப்பட்டியில் வசித்து வந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்ஷன் (8) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    ராஜசேகர் பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் கோவித்துக் கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு தேவி வந்து விட்டார். அங்கு வந்த ராஜசேகர் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுக்கவே மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை தேடி வந்தனர்.

    போலீசார் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ராஜசேகரை அவரது உறவினர் வீடுகளில் தீவிரமாக தேடி வந்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ராஜசேகரை தேடி வந்தனர்.

    அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்று இரவு திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ராஜசேகர் பதுங்கி இருந்தது தெரிய வரவே போலீசார் அங்கு சென்று அவரையும் அவருடன் இருந்த கள்ளக்காதலியையும் கைது செய்தனர். பின்னர் போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    எனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா தேவி (29) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சரோஜா தேவியின் கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக கீழ்மாத்தினிப் பட்டியில் வசித்து வந்தார். இதனால் நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்த விபரம் எனது மனைவிக்கு தெரியவந்தது. இதனை வைத்து அவர் தினேஷ் என்பவருடன் பழக்கத்தில் இருந்தார்.

    இதனை நான் தட்டிக்கேட்டதால் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று தினேசுடன் தேவி பேசியது மற்றும் அவரது புகைப்படங்கள் குறித்த ஆதாரத்தைக் காட்டி கேட்ட போது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    நீ கள்ளத்தொடர்பில் இருக்கும் போது நான் வேறு வாலிபருடன் பேசக்கூடாதா எனக் கேட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு அதிகமானது. எனவே அவரை கத்தியால் கழுத்தை அறுத்து வீட்டைப் பூட்டி விட்டு சென்று விட்டேன். அப்போது அங்கு அய்யப்ப பக்தர்களின் பஜனை கச்சேரி நடந்ததால் நாங்கள் சண்டை போட்டது வெளியே தெரியவில்லை. அதன் பிறகு எனது நண்பர்கள் சொல்லித்தான் தேவி இறந்த விபரம் எனக்கு தெரிய வந்தது. இதனால் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் எனது 3 குழந்தைகளையும் என் தாயிடம் விட்டு விட்டு சென்று விட்டேன். அதன் பிறகு என் கள்ளக்காதலி சரோஜா தேவியுடன் திருச்சிக்கு வந்து விட்டேன்.

    என் கையில் பணம் இல்லாததால் எனது நண்பருக்கு போன் செய்து கூகுல்பே மூலம் பணம் அனுப்புமாறு கேட்டேன். அவரும் பணம் அனுப்பி விட்டு போலீசார் தேடுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார்.

    நான் செல்போனை ஆன் செய்து பேசியதால் போலீசார் எனது இருப்பிடத்தை அறிந்து என்னை பிடித்து விட்டனர். நான் கொலை செய்த குற்ற உணர்ச்சி இருந்ததால் இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரலாம் என முடிவு செய்திருந்தேன். அதற்காக பஸ்சில் ஏறி காத்திருந்தபோது போலீசார் என்னையும், சரோஜாதேவியையும் பிடித்து விட்டனர் என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் ராஜசேகர் மற்றும் சரோஜா தேவியை கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ராஜசேகர் திண்டுக்கல் சிறையிலும், சரோஜா தேவி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    • மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.
    • சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சிம்மாதிரி (வயது60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா (45). தம்பதிக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சிம்மாதிரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதேபோல் கடந்த சனிக்கிழமை இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தூங்கச் சென்றனர். மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் சிம்மாதிரி தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார்.

    மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பக்கத்து அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நீண்ட நேரம் சிம்மாதிரியின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது உமா ரத்த வெள்ளத்திலும், சிம்மாதிரி மற்றொரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவியை கொலை செய்து விட்டு கணவர் நாடகம் ஆடிய சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 29).

    இவரது மனைவி ரெஜினா பானு (26). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு வேலைக்காக வந்தார். கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி நாகர்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெஜினா பானு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேசமணி நகர் போலீசார் முகமது உசேனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது ரெஜினா பானு இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்கியதாகவும் மறுநாள் காலையில் அவர் நீண்ட நேரமாக எழும்பாததால் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

    இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    விசாரணையில் மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முகமது உசேனை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட முகமது உசேன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் ரெஜினா பானுவுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் குமரி மாவட்டத்தில் வேலைக்கு வந்தோம். தற்பொழுது நான் புன்னைநகர் பகுதியில் தங்கி ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று நான் வேலைக்கு சென்று விட்டு வந்த போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்வதாக கூறி கழுத்தில் துணியை வைத்துக்கொண்டு என்னை மிரட்டினார். அப்போது நான் அவரை சமாதானம் செய்தேன்.

    தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையில் எனது மனைவியின் கழுத்தை நெரித்தேன். அப்போது அவர் இறந்துவிட்டார். உடனே அவரை தூங்குவதுபோல் போட்டுவிட்டு நானும் தூங்கினேன். மறுநாள் காலையில் குழந்தைகளும் கண் விழித்தனர். அப்போது தாயார் எழும்பாததால் என்னிடம் கேட்டனர்.

    அப்போது குழந்தைகளிடம் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினேன். பின்னர் ரெஜினாபானுவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு எனது மனைவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் என்னிடம் துருவி துருவி விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட முகமது உசேனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • நம்பியாற்றில் ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • ஈஸ்வரியின் நடத்தையில் மகாராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மைலாப்புதூர் மேலூரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு என்ற மகாராஜன் (வயது40). கார் டிரைவர். இவரது மனைவி ஈஸ்வரி (34). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

    பெண் கொலை

    இந்நிலையில் நேற்று முன்தினம் நம்பியாற்றில் ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் அவரது கணவரே கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சுடலைக்கண்ணுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    நடத்தை சந்தேகம்

    நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதற்கு முன்பு மதுரையில் வாடகைக்குவீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போது ஈஸ்வரியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    பின்னர் மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நாங்கள் நாங்குநேரி அருகே உள்ள துலுக்கர்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினோம்.

    கடந்த 16-ந்தேதி நம்பியாற்று பகுதிக்கு நாங்கள் சென்றோம். அப்போது இது தொடர்பாக எங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை ஆற்றில் வீசிவிட்டு அங்கிருந்த தப்பி சென்றேன். போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    • பழனி, பாரதி இருவரும் சிறு வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • கார் டிரைவராக வேலை செய்து வந்த பழனி கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    பாரதி அதே பகுதியில் டீ கடையில் வேலை செய்து வந்தார். இவரது நடத்தையில் பழனிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் பாரதி மீதான சந்தேகம் பழனிக்கு அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பழனி நேற்று பாரதி வேலை செய்யும் டீ கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். கடையின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று மனைவியிடம் பழனி பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியுள்ளது. இதில் ஆவேசமடைந்த பழனி, மனைவி பாரதியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாரதி உயிரிழந்தார்.

    இருவரும் சிறு வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கார் டிரைவராக வேலை செய்து வந்த பழனி கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பாரதி வேலை செய்த கடையின் 3-வது மாடியில் வைத்து மனைவியை அவர் அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.

    • சோகையா தனது மனைவியிடம் நீ குற்றம் அற்றவள் என்றால் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தில் மூழ்கி சாமி முன்பாக குற்றம் அற்றவள் என சத்தியம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
    • மனைவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் இருந்த சோகையா வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஆலமடுகு பகுதியை சேர்ந்தவர் சோகைய்யா. இவருக்கும் லீலா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அவினாஷ் (5), லோகேஸ்வரி (3) என ஒரு மகன், மகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக லீலாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சோகைய்யா அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது சோகைய்யா தனது மனைவியிடம் நீ குற்றம் அற்றவள் என்றால் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தில் மூழ்கி சாமி முன்பாக குற்றம் அற்றவள் என சத்தியம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

    இதற்கு லீலா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சோகைய்யா நேற்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.

    இதில் படுகாயம் அடைந்த லீலா வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லீலா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெதுரு குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சோகைய்யாவை தேடி வருகின்றனர்.

    • ராஜாத்திக்கும், சில நபர்களுக்கும் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
    • இதனால் அர்ஜூனன், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாத்தி, ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள பொட்டபட்டிக்கு செல்லும் வழியில் கடந்த 29-ந் தேதி இளம்பெண் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் யார்? என விசாரித்தனர். மேலும் அந்தப்பகுதியில் இதுதொடர்பாக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் மேலூர் அருகே உள்ள கருத்தலக்கான்பட்டி புதூரைச் சேர்ந்த ராஜாத்தி (வயது 19) என தெரியவந்தது.

    தொடர் விசாரணையில், இவரது கணவர் அர்ச்சுணன் (25) என்பவர் மனைவியை தாக்கி எரித்துக்கொலை செய்துள்ளார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் ராசு-அரியம்மாள், உறவினர்கள் வல்லான் என்ற ரவி, சிவலிங்கம் ஆகியோர் இருந்துள்ளனர். இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் கைதான 5 பேரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி கொலையான ராஜாத்திக்கும், அர்ஜூனனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அர்ஜூனனுக்கு, ராஜாத்தி 3-வது மனைவி ஆவார்.

    இந்த நிலையில் ராஜாத்திக்கும், சில நபர்களுக்கும் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அர்ஜூனன், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாத்தி, ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த அர்ஜூனன், தன்னை கொலை செய்வதற்கு முன்பு மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று அர்ஜூனன், பொட்டபட்டியில் மனைவியை தாக்கி எரித்துக்கொலை செய்துள்ளார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோரும், உறவினர்களும் இருந்துள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • மனைவியை தேடிச்சென்று பார்த்தபோது மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் யாருக்காக இங்கே நிற்கிறாய் என கணவர் அவருடன் தகராறு செய்தார்.
    • மேலும் அவரை தாக்கி கீழே தள்ளி அங்கிருந்த கல்லை அவரது தலையில் தூக்கிபோட்டார். படுகாயமடைந்த காயத்ரியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாலைபுதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). இவரது மனைவி காயத்ரி(26). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. காயத்ரியின் நடத்தையில் கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்த காயத்ரி திடீரென மாயமானார். அவரை தேடிச்சென்று பார்த்தபோது மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் யாருக்காக இங்கே நிற்கிறாய் என கணவர் அவருடன் தகராறு செய்தார்.

    மேலும் அவரை தாக்கி கீழே தள்ளி அங்கிருந்த கல்லை அவரது தலையில் தூக்கிபோட்டார். படுகாயமடைந்த காயத்ரியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    தம்பியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த மனைவியை வெட்டிக்கொன்ற கட்டிட மேஸ்திரி, போலீசில் சரண் அடைந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம்வெப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கஸ்தூரி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அரசு (8), தமிழ் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜிக்கு, கஸ்தூரி அக்காள் மகள் ஆவார்.

    கஸ்தூரிக்கும், கோவிந்தராஜின் தம்பி சின்னசாமி (29) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கோவிந்தராஜ் அவர்களை கண்டித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஸ்தூரியும், சின்னசாமியும் உல்லாசமாக இருந்ததை கோவிந்தராஜ் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், நேற்று அதிகாலை வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த மனைவி கஸ்தூரியை அரிவாளால் சரமாரியாக கழுத்தில் வெட்டிக்கொலை செய்தார். இதன்பிறகு கோவிந்தராஜ் நேராக பர்கூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தான் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

    இதையடுத்து பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவிந்தராஜை போலீசார் கைது செய்து விசாரித்தனர். கோவிந்தராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது மனைவிக்கும், தம்பிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அதை நான் கண்டித்தும் அவர்கள் கைவிட மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவியை வெட்டிக் கொன்றதாக கூறியுள்ளார்.
    மகள் காதல் விவகாரத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவல் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் சமுத்திர பாண்டி (வயது 35). இவருடைய மனைவி வெள்ளதுரைச்சி (39). இவர் தனது கணவரை விட மூத்தவர் ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சிவரஞ்சனி (17).

    கர்நாடக மாநிலத்தில் டவர் அமைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த சமுத்திர பாண்டி கடந்த மாதம் ஊருக்கு வந்தார். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று பகலில் சமுத்திர பாண்டி, வெள்ளதுரைச்சி, சிவரஞ்சனி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி வீட்டில் உள்ள அரிவாளால் வெள்ள துரைச்சியை சரமாரியாக வெட்டினார். அதை தடுத்த மகள் சிவரஞ்சனியையும் அவர் சரமாரியாக வெட்டினார். பின்னர் சமுத்திர பாண்டி அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த வெள்ளதுரைச்சி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். சிவரஞ்சனி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு ஓடிவந்தனர். அங்கு 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சிவரஞ்சனியை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிணமாக கிடந்த வெள்ளதுரைச்சியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த பயங்கர கொலை குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

    சமுத்திர பாண்டி மகள் சிவரஞ்சனி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தாயார் வெள்ளதுரைச்சியிடம் தெரிவித்துள்ளார். அவர் தனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இது வெளியூரில் இருந்த சமுத்திர பாண்டிக்கு முதலில் தெரியவில்லை. இதையடுத்து கடந்த மாதம் விடுமுறைக்காக ஊருக்கு வந்த சமுத்திர பாண்டிக்கு தனது மகளின் காதல் விவகாரம் தெரிய வந்தது.

    மேலும் இந்த காதலுக்கு தனது மனைவி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தனது மகளின் காதலுக்கு சமுத்திர பாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பகலில் இந்த பிரச்சினை தொடர்பாக சமுத்திரபாண்டியிடம் வெள்ளதுரைச்சி, சிவரஞ்சனி ஆகியோர் பேசினார்கள். அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி 2 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    இந்த நிலையில் தப்பி ஓடிய சமுத்திரபாண்டி நேற்று இரவு புளியங்குடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் மகள் சிவரஞ்சனியின் காதல் விவகாரத்துக்கு மனைவி வெள்ளதுரைச்சி ஆதரவாக இருந்ததால் ஆத்திரத்தில் வெட்டிக்கொலை செய்ததாகவும், தடுத்த மகள் சிவரஞ்சனியையும் அரிவாளால் வெட்டியதாகவும் கூறினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    ×