என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சாமி முன்பு சத்தியம் செய்ய மறுத்த இளம்பெண் வெட்டிக்கொலை- கணவர் ஆத்திரம்
- சோகையா தனது மனைவியிடம் நீ குற்றம் அற்றவள் என்றால் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தில் மூழ்கி சாமி முன்பாக குற்றம் அற்றவள் என சத்தியம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
- மனைவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் இருந்த சோகையா வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஆலமடுகு பகுதியை சேர்ந்தவர் சோகைய்யா. இவருக்கும் லீலா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அவினாஷ் (5), லோகேஸ்வரி (3) என ஒரு மகன், மகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக லீலாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சோகைய்யா அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது சோகைய்யா தனது மனைவியிடம் நீ குற்றம் அற்றவள் என்றால் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தில் மூழ்கி சாமி முன்பாக குற்றம் அற்றவள் என சத்தியம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
இதற்கு லீலா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சோகைய்யா நேற்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.
இதில் படுகாயம் அடைந்த லீலா வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லீலா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெதுரு குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சோகைய்யாவை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்