search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது
    X

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது

    • மனைவியை தேடிச்சென்று பார்த்தபோது மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் யாருக்காக இங்கே நிற்கிறாய் என கணவர் அவருடன் தகராறு செய்தார்.
    • மேலும் அவரை தாக்கி கீழே தள்ளி அங்கிருந்த கல்லை அவரது தலையில் தூக்கிபோட்டார். படுகாயமடைந்த காயத்ரியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாலைபுதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). இவரது மனைவி காயத்ரி(26). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. காயத்ரியின் நடத்தையில் கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்த காயத்ரி திடீரென மாயமானார். அவரை தேடிச்சென்று பார்த்தபோது மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் யாருக்காக இங்கே நிற்கிறாய் என கணவர் அவருடன் தகராறு செய்தார்.

    மேலும் அவரை தாக்கி கீழே தள்ளி அங்கிருந்த கல்லை அவரது தலையில் தூக்கிபோட்டார். படுகாயமடைந்த காயத்ரியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    Next Story
    ×