search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் தற்கொலை"

    • கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ளது கோழித்துறை பகுதி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன்(வயது40). கூலித்தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி ராணி(35) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரகுநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

    தினமும் ரகுநாதன் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற ரகுநாதன் இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கண்டித்தார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை.

    அவரது மகள் ஏன் தினமும் குடித்து விட்டு வருகிறீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுநாதன், மகளை அங்குள்ள அறையில் பூட்டி வைத்து தாக்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சியான ராணி கதவை திறந்து மகளை காப்பாற்றினார். பின்னர் மகன்களையும், மகளையும் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

    கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.

    ஆத்திரம் தீராத அவர் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து ராணியின் தலை மற்றும் உடல் முழுவதும் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பின்னர் ரகுநாதனும் குடிபோதையில் அப்படியே படுத்து விட்டார். சில மணி நேரங்கள் கழித்து போதை தெளிந்து எழுந்த அவர், மனைவி இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார்.

    மனைவியை அடித்து கொன்று விட்டோமே என்றும், போலீசார் எப்படியும் தன்னை விசாரிப்பார்கள் என்ற பயத்திலும் இருந்த ரகுநாதன் அதிகாலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்தவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ராணி இறந்த நிலையிலும், ரகுநாதன் தூக்கில் பிணமாகவும் தொங்கி கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று முன்தினம் இரவு தனது கணவரை ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
    • அதற்கு அவர் மறுத்துவிட்டு குடி போதையில் வீட்டிலேயே உறங்கி விட்டார்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கூலித் தொழிலாளி. இவருக்கும் சங்கீதா (27) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் குடி பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு தனது கணவரை ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க தன்னுடன் வருமாறு சங்கீதா அழைத்துள்ளார்.

    அதற்கு சுரேஷ் மறுத்து விட்டார். மேலும் குடி போதையில் வீட்டிலேயே உறங்கி விட்டார். இதனால் சங்கீதா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். போதை தெளிந்து எழுந்த சுரேஷ் மனைவி கோபித்துச் சென்றதால் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மொக்ைக (53). கூலித் தொழிலாளி. இவ ருக்கு கடந்த சில மாதங்க ளாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
    • ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி குன்னம்தானம் பகுதியை சேர்ந்தவர் வேணு(வயது45). இவரது மனைவி ஸ்ரீஜா(35). இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார்.

    வேணு மற்றும் அவரது மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு எற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களது மகன் ஸ்ரீஜாவுடனே வசித்து வந்திருக்கிறார்.

    இந்நிலையில் மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது. அதில் ஆத்திரமடைந்த வேணு, தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்பு அவர் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்துக்கொண்டார்.

    ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து கீழ்வாய்ப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு திருவல்லாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    ஸ்ரீஜா உடலில் 13 இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. கணவன்-மனைவி இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவரால் கொல்லப்பட்ட ஸ்ரீஜா, தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • தற்கொலை குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது40). தொழிலாளி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இரவு கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆசீர்வாதம் தான் விரும்பிய வேறு ஒரு நிகழ்ச்சியை பார்க்க டி.வி. சேனலை மாற்றுமாறு கூறினார். மேலும் மனைவியிடம் இருந்த ரிமோட்டையும் கேட்டார். ஆனால் அவரது மனைவி நிஷா டி.வி. ரிமோட்டை கொடுக்க மறுத்து அவர் பார்த்து கொண்டு இருந்த டி.வி. நிகழ்ச்சியையும் மாற்ற மறுத்தார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆசீர்வாதம் அறையில் இருந்து வெளியே வந்து மகனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனைவியுடன் மீண்டும் மோதல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து கோபித்துக் கொண்ட ஆசீர்வாதம் பெரும்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதேபோல் அவரது மனைவி நிஷாவும் கொண்டஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில் வீட்டுக்கு திரும்பி வந்த ஆசீர்வாதம் திடீரென அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டதால் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது30). சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி வினோதினி (25). இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

    வேடசந்தூரில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வினோதினி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்ப ட்டது.
    • மனமுடைந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 6-வது வார்டு அம்பலகாரர்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(29). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஜெய சுருதி என்ற மனைவியும், 10 மாத கைகுழந்தையும் உள்ளது.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்ப ட்டது. சம்பவத்தன்று மனைவி மற்றும் குழந்தை யைமாமனார் வீட்டில் இறக்கிவிட்டு சென்ற பிரபாகரன் மீண்டும் குடித்துவிட்டு வந்தார். இதனால் அவரது மனைவி வீட்டிற்கு வரமாட்டேன் என கூறினார். மனமுடைந்த பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.




    • டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பவித்ராவின் வயிற்றில் இருந்த 6 மாத குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது.
    • வீட்டிற்கு வந்த வெள்ளை பிரகாஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரம்பூர்:

    வியாசர்பாடி, முல்லைநகர், 82-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் (வயது27). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஆண்குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் பவித்ரா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதனால் வெள்ளை பிரகாஷ் மகிழ்ச்சியுடன் இருந்தார். கடந்த சில நாட்களாக பவித்ராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பரிசோதனைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பவித்ராவின் வயிற்றில் இருந்த 6 மாத குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் இறந்த குழந்தையை அகற்றினர். இதனால் வெள்ளை பிரகாஷ் மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

    இதற்கிடையே வீட்டிற்கு வந்த வெள்ளை பிரகாஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவி குணமாகாததால் விரக்தியில் ராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பண்ட அள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ராணி.

    இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராணியை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    நீண்ட நாட்கள் ஆகியும் மனைவி குணமாகாததால் விரக்தியில் ராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விஷம் குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடந்தார்.
    • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாம்கோம்பை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகர் (63). இவர் கோபியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதில் இருந்து மனோகர் வேலைக்கு எதுவும் செல்லாமலும், மது அருந்தியும் சுற்றி கொண்டிருந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் விஷம் (சாணி பவுடர்) குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடப்பதாக அவரது தம்பி மகன் மாதேஸ்வரனுக்கு அப்பகுதியை சேர்ந்தவர் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனோகரை சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த மனோகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி பிரிந்து சென்றதால் மணிகண்டன் மிகவும் மனவேதனை அடைந்தார்.
    • நேற்று இரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் அடுத்த வெற்றி நகர் ஜெகதீசன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது26). இவர் ஆட்டோ டிரைவராகவும் போட்டோகிராபராகவும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சன்மதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    மணிகண்டனுக்கும் அவரது மனைவி சன்மதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சன்மதி பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்றதால் மணிகண்டன் மிகவும் மனவேதனை அடைந்தார். நேற்று இரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அறையில் அருளானந்தம் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.
    • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள மாயபுரம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம் (45). இவர் அப்பகுதியில் உள்ள டையிங் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அருளானந்தத்தின் மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து அருளானந்தம் தனது குழந்தைகள் மற்றும் தாய் தெரசாமேரி (68), தம்பி ஜெயசீலன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

    மனைவி பிரிந்து சென்றதில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட அருளானந்ததுக்கு அவரது தாய், தம்பி மற்றும் குழந்தைகள் அனைவரும் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை அருளானந்தத்தின் மகன் கண் விழித்து பார்த்த போது வீட்டினுள் உள்ள அறையில் அருளானந்தம் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருளானந்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
    • செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கிழக்கு கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் நதியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போதெல்லாம் நதியா கோவித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார்.

    பின்னர், செந்தில்குமாரின் பெற்றோர் சமாதானம் செய்து அழைத்து வருவார்கள்.

    இந்த நிலையில் செந்தில்குமாரின் பெற்றோர் தங்களது குழந்தையை எடுத்து கொஞ்சக்கூடாது என நதியா கூறியுள்ளார். இதனால் சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவித்துக்கொண்டு கவுந்தப்பாடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். செந்தில்குமார் பல முறை போனில் பேசி நதியாவை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் நதியா வரமறுத்துவிட்டார்.

    இந்த நிலையில் நேரில் சென்று நதியாவை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக செந்தில்குமார் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கவுந்தப்பாடி சென்றுள்ளார்.

    ஆனால் அன்று மதியம் அவர்களது உறவினர் ஒருவர் செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து செந்தில்குமாரின் பெற்றோர் சென்று அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×