search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grief over"

    • விஷம் குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடந்தார்.
    • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாம்கோம்பை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகர் (63). இவர் கோபியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதில் இருந்து மனோகர் வேலைக்கு எதுவும் செல்லாமலும், மது அருந்தியும் சுற்றி கொண்டிருந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் விஷம் (சாணி பவுடர்) குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடப்பதாக அவரது தம்பி மகன் மாதேஸ்வரனுக்கு அப்பகுதியை சேர்ந்தவர் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனோகரை சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த மனோகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாயார் இறந்த துக்கம் தாங்காமல் வேதனையில் இருந்த ஜெகதீஷ் சோகமாகவே இருந்துள்ளார்.
    • விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை ஜெகதீஷ் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி காளிநாதன்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ஜெகதீஷ்(வயது 25) . இவரது தாயார் அங்காத்தாள். இந்தநிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் அங்காத்தாள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

    தாயார் இறந்த துக்கம் தாங்காமல் வேதனையில் இருந்த ஜெகதீஷ் சோகமாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை ஜெகதீஷ் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • இறந்த தனது மகன் பழனிச்சாமி நினைப்பாகவே உள்ளதாக தனது மகளிடம் கூறி வருத்தப்பட்டிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமி தாய்க்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
    • இது குறித்து புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அந்தியூர் அடுத்துள்ள எண்ணமங்கலம் கோவிலூரை சேர்ந்தவர் சின்னம்மாள் (72). இவரது மகன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த சின்னம்மாள் கடந்த 23-ந் தேதி அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி குள்ளனூரில் வசிக்கும் தனது மகள் ஜோதிலட்சுமி வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது இறந்த தனது மகன் பழனிச்சாமி நினைப்பாகவே உள்ளதாக தனது மகளிடம் கூறி வருத்தப்பட்டிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமி தாய்க்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சின்னம்மாள் கோவிலூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு செல்லாமல் இருந்தது ஜோதிலட்சுமிக்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து ஜோதிலட்சுமி சின்னம்மாளை தேடி வந்த நிலையில் பூதப்பாடி அருகே உள்ள வாய்க்கால் கரையில் சின்னம்மாள் மாத்திரை சாப்பிட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் ஜோதிலட்சுமி மற்றும் அவரது மகன் நேரில் சென்று பார்த்த போது மாத்திரை சாப்பிட்டு கிடந்தது தெரியவந்தது.

    உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×