search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Scheme Assistance"

    • சிவகங்கை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அண்ணாமலை தலைமை தாங்கினார். திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, பிள்ளையார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொண்டு நிறுவன கூட்டமைப்பு தலைமை அறிவுரையாளர் பெருமாள் கலந்து கொண்டார். பிள்ளையார்பட்டியில் கோடைகாலம் முழுவதும் செயல்படும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பலசரக்கு, காய்கறிகள், வேட்டி, சேலை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆட்டோ வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர வாகனமும், வறுமையில் உள்ள பெண்களுக்கு மகளிர் மேம்பாட்டு விழிப்புணர்ச்சி முகாம் அமைத்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்பட்டது. ஒரு மாணவிக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இதில் மீனாள் ஆதீனமிளகி, பால சரசுவதி முத்துகிருஷ்ணன், நிருபா அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அக்ரி கணேசனின் தந்தை பால்சாமி படத்திறப்பு விழா நடந்தது.
    • இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சித்த னேந்தலை சேர்ந்தவர் பால்சாமி தேவர். இவர் அக்ரி.கணேசனின் தந்தை ஆவார்.

    பால்சாமி தேவரின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் படத்திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நாளை(15-ந்தேதி) காலை 10.45 மணிக்கு சித்தனேந்த லில் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    இதில் பிரபா நாச்சியார், கோபி நாதன், ஜெயஸ்ரீ நாச்சியார், நாகப்பராஜன், மோகனப் பிரியா நாச்சியார், ரமேஷ் குமார், சுந்தரகணேஷ், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் ராமராஜ பாண்டி யன், லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் ராஜ ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, மோகன், ஸ்ரீனா, அழகப்பா பல்கலைக்கழக துணை பேராசிரியர் பிரபாகரன், சங்கீதா நாச்சியார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார். முகாமில் 93 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்து 573 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் ஜெயகுமார், தனி துணை வட்டாட்சியர் மாரிசெல்வராஜ், மண்டல துணை வட்டாட்சியர் முருகேசன், வருவாய் அலுவலர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிககளை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • பொதுமக்களிடம் இருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டு மனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு தலா ரூ.6ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டிலான தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.

    2021-22-ம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மணிமேலை விருது வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 சமுதாய அமைப்பி னர்களுக்கு மொத்தம் ரூ.4லட்சத்திற்கான ரொக்கத்தொகை மற்றும் சான்றிதழ் என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 90ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 7 பயனாளிகளுக்கு ரூ.7.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர், 358 மனுக்கள் பெற்று மனுதாரர் முன்னிலையில் விசாரணை செய்து மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு செயற்கை கால் உபகரணங்களும், ஒரு பயனாளிக்கு 3 சக்கர சைக்கிளும், 7 பயனாளி களுக்கு காதொலி கருவி களும் என 17 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 15 ஆயிரத்து 650 மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கப் பட்டது.

    மேலும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அளவில் பணியிடையே மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிடும் வகையில் மீனாட்சிபுரம் கருப்பையா மகள் சத்தீஸ்வரிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் வட்டாட்சியர் அலுவலகம், திருவாடனை மற்றும் ராமேசுவரம் கர்ணன் மனைவி கலையரசிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    அரசு பள்ளியில் படித்து வரும் மாண-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை 9 நபர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சிவகங்கையில் குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டு மைதானத்தில், இன்று குடியரசு தினவிழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன், காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 56 காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கினார்.

    விழாவில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 057 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்த்து றையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும், தொழில் வணிகத்துறையின் (மாவட்ட தொழில் மையம்) சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 91 ஆயிரத்து 576 மதிப்பீட்டிலும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 78 ஆயிரத்து 133 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும், 59 காவல் துறையைச் சேர்ந்த காவலர்களுக்கும், பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 388 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர், பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

    விழாவில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார்.
    • 3 சக்கர வாகனம், தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.

    திருப்பரங்குன்றம்

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு மற்றும் பல சரக்கு பொருட்களை மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன. இதில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் விமல், பெருங்குடி வசந்த், பிரபு, கார்த்தி, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பழனிகுமார் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பொதுக்கணக்குக்குழுவினர் வழங்கினர்.
    • ரூ.20 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஓசூர் தொகுதி), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), பொது கணக்குக்குழு செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ராமேசுவரம் வட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடல் ஆமை குஞ்சு பொரிப்பகம், மண்டபம் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.20 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து பனைக்குளம் ஊராட்சி, பொன்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள், சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள சிட்கோ அலுவலகம், தெற்குதரவை ஊராட்சியில் முன்னோடி விவசாயி இயற்கை வேளாண் முறையில் செய்யப்படும் பயிர் சாகுபடி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

    பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் லட்சம் மதிப்பீட்டிலான நிவாரணத்தொகைக்கான ஆணைகள், சி சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.53,407 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.39 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.38.04 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் செல்வபெருந்தகை வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட வருவாய் அலு வலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, துணைச் செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் பாலசீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 352 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட 5 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ், தலா ரூ.1,000 வீதம் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளையும், இளையான்குடி கிளை, தெற்கு கீரனூர் (வடக்கு) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் 16 பயனாளிகளுக்கு கிசான் கடன் திட்டத்தின் கீழ், ரூ.3 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலான கறவை மாட்டு பராமரிப்புக் கடனுதவிகளும், இளையான்குடி கிளை, நெஞ்சத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் 6 பயனாளிகளுக்கு கிசான் கடன் திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டிலான கறவை மாட்டு பராமரிப்புக் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.

    வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றுவதற்கென ரூ.1 லட்சத்து 34ஆயிரத்து 200 மதிப்பீட்டில் பின்னேற்ப்பு மானியத் தொகைக்கான ஆணைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1 ஹெக்டேர் பரப்பளவில் பழச்செடிகள், கால்நடை, தேனீ வளர்ப்பு மற்றும் மண்புழு உரக்கூடம் அமைப்பதற்கென தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மானியத் தொகைகான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு தேய்ப்புப்பெட்டியையும் என ஆக மொத்தம் 36 பயனா ளிகளுக்கு ரூ.9 லட்சத்து 63 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    • மானாமதுரை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம். மாங்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் தலைமை தாங்கி பேசிய மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, பொதுமக்களுக்கு பட்டா மாறுதல்களையும், புதிய குடும்ப அட்டை, உதவித்தொகை, வேளாண் விளைபொருட்கள், மக்களை தேடி மருத்துவ பெட்டகங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார். ஒன்றியகுழு துணை தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மை நல அலுவலர், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் ரூ.30.87 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கினா்.

    கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:-

    இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-ல் திருவள்ளுவா் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 213 வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதுதவிர வீட்டு வசதித்துறை, பால்வளத்துறை, சமூக நலத்துறை மற்றும் பட்டுவளா்ச்சித்துறை போன்ற துறைகளிலும் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கை மாவட்த்தில் 2022-23 ஆண்டில் 2022 முடிய அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்கடன் உள்பட மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 139 பேருக்கு ரூ.955.67 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து பணியாளா்களுக்கும் பதவி உயா்வு மற்றும் ஊதிய உயா்வு வழங்கிடவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நகர வங்கி ஆகியவைகளில் பணியா ற்றும் அனைத்து நிலைகளை சார்ந்தோர்களுக்கும் தனி நிதியம் உருவாக்கி, அவா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சா் பெரியகருப்பன் பேசுகையில், கூட்டுறவே நாட்டுயா்வு என்ற அடிப்ப டையில், கூட்டுறவுத்துறை விவசாயிகள் மற்றும் பொது மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் துறையாக திகழ்ந்து வருகிறது என்றார்.

    விழாவில் 3 ஆயிரத்து 586 பயனாளிகளுக்கு ரூ.30கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்து 953 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

    இதில் கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளா் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ரவிச்சந்திரன், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தலைவா் சேங்கைமாறன், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் தனபால், மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல், திருப்பத்தூர்பேரூராட்சி தலைவா் கோகிலாராணி, திருப்பத்தூர்ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் சண்முகவடிவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ராமநாதபுரத்தில் கூட்டுறவு வாரவிழா நடந்தது.
    • இதில் 1531 பயனாளிகளுக்கு ரூ. 11.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். தொடர்ந்து 1531 பயனாளிகளுக்கு ரூ. 11.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி பேசியதாவது:-

    விவசாயிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் தான் இந்த அரசின் நோக்கம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்ட ங்களை செய்து வருகிறார்.

    மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் முன்கூட்டியே கொண்டு வரப்பட்டுள்ளன. வைகை தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கல்வி, மின்சாரம், சாலை வசதி, குடிநீர்வசதி இவை அனைத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் ராம.கருமாணிக்கம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திசைவீரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மனோகரன், துணை பதிவாளர்கள் ஜெய்சங்கர், முருகன், புஷ்பலதா, சுப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×