search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கணக்குக்குழு"

    • பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    • அங்கு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவுகளும் வழங்கினர்.

    ஊட்டி,

    தமிழக சட்டசபை பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த குழுவில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், ஈஸ்வரன், கிருஷ்ணசாமி, சரஸ்வதி, சேகர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

    முதல்கட்டமாக நீலகிரி மாவட்டம், மசினக்குடி ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஷ்யோஜனா திட்டத்தின்கீழ் தலா ரூ.2.78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 78 வீடுகளை பார்வையிட்டனர். அதன்பிறகு சட்டசபை பொதுக்கணக்குக்குழு, பைக்காராவுக்கு சென்றது. அங்கு புனல் மின்உற்பத்தி நிலையத்தில், மின்சாரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்ற சட்டப்பேரவை பொதுக்கணக்குக்குழு, அங்கு ஆஸ்கர் விருதுபெற்ற குறும்படத்தில் நடித்த யானைப்பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினர். பின்னர் அங்கு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவுகளும் வழங்கினர்.

    அப்போது மாவட்ட கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண், சட்டசபை பொதுக்கணக்குக் குழு இணை செயலாளர் தேன்மொழி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன் தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன், தமிழக மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா, கூடலூர் நகரசபை தலைவர் பரிமளா, வருவாய் கோாட்டாட்சியளர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுர துல்லா (கூடலூர்), தமிழக மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலாஜி, உதவி இயக்குநர்கள் சாம் சாந்தகுமார் (ஊராட்சிகள்), இப்ராகிம்ஷா (பேரூராட்சி கள்), கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, தாசில்தார்கள் ராஜசேகர் (ஊட்டி), சித்தராஜ் (கூட லூர்), வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அண்ணா துரை, ஆறுமுகம், மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி மோகன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பொதுக்கணக்குக்குழுவினர் வழங்கினர்.
    • ரூ.20 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஓசூர் தொகுதி), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), பொது கணக்குக்குழு செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ராமேசுவரம் வட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடல் ஆமை குஞ்சு பொரிப்பகம், மண்டபம் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.20 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து பனைக்குளம் ஊராட்சி, பொன்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள், சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள சிட்கோ அலுவலகம், தெற்குதரவை ஊராட்சியில் முன்னோடி விவசாயி இயற்கை வேளாண் முறையில் செய்யப்படும் பயிர் சாகுபடி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

    பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் லட்சம் மதிப்பீட்டிலான நிவாரணத்தொகைக்கான ஆணைகள், சி சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.53,407 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.39 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.38.04 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் செல்வபெருந்தகை வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட வருவாய் அலு வலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, துணைச் செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் பாலசீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×