search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water open"

    கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், குடிநீர் தேவைக்காகவும் பெரியார் அணையிலிருந்து 17-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

    அதை ஏற்று, கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் பெரியார் அணையிலிருந்து 17-ந்தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

    இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களிலுள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் பொது மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PeriyarDam #TNCM #EdappadiPalanisamy

    கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டும்போது அதில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடும் சூழல் உள்ளது.
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மாண்டியா, சிக்மகளூர் உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இன்றும் மழை நீடித்தது.

    குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா மடிகேரி ஆகிய இடங்களில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள சிற்றாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இந்த வெள்ளம் காவிரியில் வந்து சேர்வதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று 17 ஆயிரத்து 883 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 22 ஆயிரத்து 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று 342 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    124.8 அடி உச்சநீர் மட்டம் கொண்ட கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 82.8 அடியாக இருந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 4 அடி உயர்ந்து 86.6 அடியாக உயர்ந்தது.

    இதே போல நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் 4 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது. நீர்மட்டம் 100 அடியை தாண்டும் போது அதில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடும் சூழல் உள்ளது.

    இதே போல கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்யும் கன மழையால் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 46.72 அடியாக இருந்த நிலையில் அணைக்கு 17 ஆயிரத்து 921 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 100 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் கபினி அணையின் நீர்மட்டம் 12 அடி அதிகரித்திருக்கிறது. இதே நிலை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடித்தால் கபினி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் கூடுதலதாக திறக்கும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 1800 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 847 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 616 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.94 அடியாக இருந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கோடை காலத்தில் அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். இதனால் ஒகேனக்கல் களை கட்டி உள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 9-ந் தேதி 1970 கன அடியாக உயர்ந்தது. அதன் பிறகு நீர்வரத்து குறையத் தொடங்கியது.

    நேற்று முன்தினம் 611 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 439 கன அடியாக குறைந்தது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து 748 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் நேற்று 34.06 அடியாக இருந்தது. இன்று காலை இது 33.85 அடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த 11-ந் தேதி இது 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.

    காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    ×